Wednesday, May 18, 2011

செம்மொழி விருது

செம்மொழிக்கான இளம் தமிழ் அறிஞர் விருதுகள் 06.05.2011 அன்று குடியரசு தலைவர் அவர்களால் புதுதில்லியில் வழங்கப்பட்டன. தொடர்பணிகளால் அது பற்றிய குறிப்புக்களை இன்றுதான் எழுத நேர்ந்தது. தமிழ்மொழியில் குறிப்பிடத்தக்க பணிகளைத் தொடர்ந்து செய்துவருபவர்களுக்கு வழங்கப்படும் விருது. இவ்விருது பெற்றவர்கள்ல் பலர் எனது நண்பர்கள் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்புடன் என் பாராட்டுக்களையும் தெரிவிக்கும் விதமாக இந்தப் பதிவு. இவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

1. நண்பர் ய.மணிகண்டன். எனது நீண்ட நாள் நண்பர். தஞ்சாவூர் சரசுவதி மஉறாலில் பணிபுரிந்தவர்.அவருடன் பல கவியரங்குகளில் கலந்துகொண்டிருக்கிறேன். அவருடைய தலைமையில் கவிதை வாசித்து இருக்கிறேன். தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். மிகவும் தகுதியானவர். சுறுசுறுப்பானவர். சரசுவதி மஉறாலில் பணிபுரியும்போது பல குறிப்பிடத்க்கப் பணிகளை சுவடியியல் பதிப்பிலும், இலக்கண இலக்கியங்களிலும் மேற்கொண்டவர். குறிப்பாக யாப்பியலில் தேர்ந்தவர் மணிகண்டன். கணீரென்ற குரலுக்குச் சொந்தக்காரர். மிகவும் அன்பானவர் மனிதர்களை நேசிப்பதில். வாழ்த்துகிறோம் அவரை இவ்விருது பெற்றமைக்காக.

2. நண்பர் அறவேந்தன் என்கிற இரா.தாமோதரன் நான் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபோது அங்கு நான் பணியாற்றிய துறையில் முனைவர்பட்ட ஆய்வாளராக இருந்தபோது அறிமுகம். ஆய்வாளராக அறிமுகம் தொடங்கிய கால்த்திலிருந்து இன்று பேராசிரியராகப் பணியாற்றும் நிமிடம் வரையிலும் காலத்தின் அருமை கருதியவர். சொற்களை அளந்து பேசுபவர். நல்ல நண்பர். நல்ல ஆய்வாளர். நல்ல ஆசிரியர். சிங்கள இலக்கணத்தையும் வீரசோழியத்தையும் ஒப்பிட்டு முனைவர் பட்டம் பெற்றவர். இதற்காக சிஙக்ளம் கற்று இலங்கைப் பயணம் மேற்கொண்டு ஆய்வை நிறைவு செய்தவர். தொடர்ந்து பல ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு அவற்றை உடனுக்குடன் புத்தகவடிவில் வெளியிட்டு வருபவர். பல பரிசுகளைப் பெற்றவர். தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மையத்தின் பேராசியர். இவ்விருதுக்காக அவரை வாழ்த்துகிறோம்.

3. நண்பர் அரங்க.பாரி என்னுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபாற்றுபவர். பல ஆய்வுப் புத்தகங்களை வழங்கியவர். பல கருத்தரங்குகளைத் திறம்பட நடத்தி அதன் தொடர்ச்சியாக ஆய்வுக்கோவைகளைத் தந்தவர். இனிமையாக பழகுபவர். எப்போதும் எளிமையாக இயங்குபவர். தொடர்ந்து இயங்கிவருபவர். சக தோழரை இவ்விருதுக்காக வாழ்த்துகிறோம்.

4. நண்பர் மு.இளங்கோவன் அண்ணாமலை தொலைதுர்ரக் கல்வி இயக்கக வழி தொடர்பு வகுப்பில் அறிமுகம். அன்பிற்குரிய இளவல். இனிய புன்னகையுடன் உறவுகளைப் பேணுபவர். பல்வகைப்பட்ட பொருண்மைத் தளங்களில் பல புத்தகங்களைத் தந்தவர். தொடர்ந்து அவரது இணையத் தளத்தின் வழியாக செய்துவரும் தமிழ்த்தொடர்பான பணிகள் ஒவ்வொன்றும் சிறப்புக்குரியவை. வரலாறு, மானிடவியல், இலக்கணம், இலக்கியம், இணையம் என முனைப்புடன் இயங்குபவர். இளவலை இவ்விருதுக்காக வாழ்த்துகிறோம். அவரது இணையத்தளத்தின் வழியாகப் பெற்ற புகைப்படத்திற்கு நன்றி.


சிறப்பாக குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. என்னுடைய நண்பர் அ.சிவபெருமானின் தந்தையார் மதிப்பிற்குரிய பேராசிரியர் அடிகளாசிரியர் ஐயா அவர்கள் தொல்காப்பிய விருது பெற்றிருக்கிறார். அவரை வாழ்த்தும் தகுதியும் வயது இல்லையென்தால் அவரை வணங்குகிறேன் பணிந்து. அடிகளாசிரியர் தஞ்சை கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் முதல்வராக இருந்தவர். அவருடைய தமிழ்ப் பணிகள் அளவிடற்கரியன. முற்றிலும் இவ்விருதிற்குத் தகுதியானவர். அவருடைய தகுதிக்கு இன்னொரு சான்று நண்பர் அ.சிவபெருமான். இவருடைய தமிழ்ப்பணிகளும் குறிப்பிடத்தக்கவை.

இவ்விருது பெற்ற மற்ற முகமறியாதவர்களையும் வாழ்த்துகிறோம்.

இளம் தமிழ் அறிஞர் விருதுபெற்றோரிடம் வேண்டுகோள்


மேன்மேலும் உங்களின் தமிழ்ப்பணிகள் செழிப்புறட்டும். தமிழின் மேன்மை உலகெங்கும் இன்னும் தனித்துவமிக்க தரமான இடத்தை அடைய உங்களின் பணிகளும் தனித்துவம் மிக்கதாக அமையவேண்டும். தொடருங்கள் என வேண்டுகிறோம்.



புதிய அரசு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது.
இதன் நன்மை தீமைகளை ஆராய்வதை விட்டு மாற்றம் என்பது தேவை என்பதை மட்டுமே எடுத்துக்கொண்டு அது நடந்திருப்பதை வரவேற்கலாம்.
அதிமுக எதிர்பாரா மிகப்பெரும் வெற்றி பெற்றிருப்பதால் சில நன்மைகள் நடந்திருக்கின்றன.

1. பணபலத்தால் மட்டும் எதையும் சாதிக்கலாம் என்பது
சரிந்திருக்கிறது.

2. அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக ஆடும் ஆட்டம்
நிலையல்ல அது நிலைகுலையச் செய்துவிடும் இருக்கும்
இருப்பையும் இழக்கவைத்து.

3. சாதிவெறிபிடித்து சாதிகளால் கட்சி அமைத்துக்கொண்டு
சாதிக்கலாம் எனபதும் அடியோடு வேரறுக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்ந்து நிலைநிறுத்தப்படவேண்டும்.

வேண்டுகோள்கள்

1. புதிய அரசு போன அரசின் குறைகளையும் குற்றங்களையும்
பார்க்காமல் மக்களுக்கு நன்மை செய்வதே குறிக்கோள்
என்பதைக் கவனத்தில் கொண்டால் மக்கள் நன்மை பெறுவார்
கள்.

2. புதிய அரசின் முதல்வர் குறிப்பிட்டதுபோல் சட்டம் ஒழுங்கு,
மின்வெட்டு, கல்விச்சூழல் இவற்றோடு சாலைகளைப்
பராமரித்தல், வாகனங்களை ஒழுங்குபடுத்தி விபத்துக்களை
கட்டுப்படுத்தல், கைபேசிகளை ஒழுங்குபடுத்துதல், அரசியல்
வாதிகளால் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்த்தல்
இவையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.

3. குறிப்பாக பள்ளிக் கல்வி நிலை ஒழுங்குபடுத்தப்படல் மற்றும்
பணியமைப்புக்களில் தகுதியானவர்கள் அடையாளப்படுத்தப்
பட்டு அவர்களுக்குரிய பணிவாய்ப்பு பணம், சிபாரிசு, சாதிய
ஒதுக்கீடு இவற்றைத் தாண்டி வழங்கப்படல் அமைந்தால்
நல்லதொரு சமுக முன்னேற்றம் அமையும்.

4. நல்ல மருத்துவ வசதி ஏழைமக்களுக்குப் பாரபட்சமில்லாமல்
கிடைத்தல் அவசியம்.

5. மக்கள் நிறைய நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் மிகப்
பெரும் வெற்றியைத் தந்திருக்கிறார்கள். அவர்கள் எந்தச்
சூழலிலும் ஏமாந்துவிடக்கூடாது.