Monday, November 21, 2011

புதிய ஆத்திசூடி

ஔவையின் ஆத்திசூடியைத் தொடர்ந்து பாரதி புதிய ஆத்திசூடி எழுதினார். நாமும் எழுதிப் பார்த்தால் என்ன என்ற யோசனை வெகுநாளாகவே மனதில் இருந்தது. அதன்விளைவுதான். ஆனால் இன்றைய சூழ்ல் மனதிற்கு சஙக்டமாக உள்ளது. மனித நேயம், பரிவு, நட்பு எல்லாம் வீண். மனிதனை மனிதன் உட்கொள்ளும் வன்முறை பெருகியுள்ளது. இன்றைய சூழலின் விளைவையே

இந்த ஆத்திசூடியில் பகிர்ந்துகொள்கிறேன்.


விரும்பாததது.......
/////////////


அரசியல் அறம் ஒழி

ஆன்மீகப் புலைத்தனம் கல்

இயன்றவரை துரோகம் இழை

ஈட்டுதலுக்காக குற்றம் பயில்

உண்மை எப்போதும் மறு

ஊழலைத் துணிந்து பேண்

எண்ண்த்தில் விடம் நிரப்பு

ஏற்றம்பெற எதுவும் செய்

ஐம்புலனையும் அடக்காது செல்

ஒவ்வொரு நாளும் வன்முறை புரி

ஓராயிரம் முறை நடித்து வாழ்

ஔவை சொல் விலகு.


விரும்புவது.......
/////////////////


அன்புசால் உலகு செய்

ஆற்றலைப் பெருக்கி நில்

இயன்ற வரை உதவு

ஈடடுவதில் தருமம் நிறுத்து

உண்மை எப்போதம் பேசு

ஊரின் நியாயம் கேள்

என்றும இறைவன் துணைகொள்

ஏறறம் பெற உழைப்பு தேடு

ஐம்புலன் செம்மைப் பேண்

ஒவ்வொரு நொடியும் நல்சிந்தை நினை

ஓடிஓடி உறவுகள் வளர்

ஔவை பாரதி வணஙகி வாழ்


எல்லோரும் அவரவர் சிந்தைக்கேற்ப ஆத்திசூடி எழுதுஙக்ள். நல் உலகு மலரட்டும்.