Saturday, January 7, 2012

தொலைக்க சில பொம்மைகள்...


ஒரு குழந்தையின் பொம்மை 
தொலைந்துவிட்டது
என்ன பொம்மையென்று
சொல்லத்தெரியவில்லை.
ஆனால் அழுகிறது தொலைந்த 
பொம்மைதான் வேண்டுமென்று 
பிடிவாதத்துடன் 
தொலைந்த பொம்மையைத் தேடுவதிலும் 
குழந்தையை சமாதனப்படுத்துவது எளிதென்று 
ஒரு யோசனை சொல்லப்படுகிறது 
அது சரியாகாது பிடிவாதத்திடம்
என்று சொன்னால் உங்களைபோல்தான்
பிள்ளையும் பிறந்திருக்கிறது என்கிறார்கள்.
எதை தொலைப்பது ? எதை தேடுவது ?
இந்த தொலைந்தும் தேடும் வாழ்க்கையில்
    
    

6 comments:

  1. இந்த பதிவும் சென்ற பதிவும் ஏனோ படிக்க முடியவில்லை... எழுத்துருவில் ஏதோ பிரச்சனை... கொஞ்சம் பாருங்களேன்...

    ReplyDelete
  2. Îò zwÍç>l[ ØÃVDç\
    Ø>VçéÍmsâ¦m.
    ¨[ª ØÃVDç\ØB[®
    ØÄV_éÝØ>öBs_çé..
    gªV_ ¶¿þÅm Ø>VçéÝ>
    ØÃVDç\>V[ ¼kõ|Ø\[Å
    ¸½kV>Ým¦[
    Ø>VçéÝ> ØÃVDç\çBÝ ¼>|k]KD
    zwÍç>çB Ä\V>Vª©Ã|Ýmkm ¨¹Ø>[®
    Îò ¼BVÄçª ØÄV_é©Ã|þÅm
    ¶m ÄöBVïVm ¸½kV>Ý]¦D
    ¨[® ØÄV[ªV_ cºïç᩼ÃV_>V[
    ¸^çá¥D ¸ÅÍ]òÂþÅm ¨[þÅVìï^.
    ¨ç> Ø>Vçé©Ãm? ¨ç> ¼>|km?
    ÖÍ> Ø>VçéÍmD ¼>|D kVµÂçïl_

    இப்படித்தான் வருகிறது.....

    ReplyDelete
  3. \\ஒரு குழந்தையின் பொம்மை
    தொலைந்துவிட்டது.
    என்ன பொம்மையயன்று
    சொல்லத்தெரியவில்லை..
    ஆனால் அழுகிறது தொலைத்த
    பொம்மைதான் வேண்டுமென்ற
    பிடிவாதத்துடன்
    தொலைத்த பொம்மையைத் தேடுவதிலும்
    குழந்தையை சமாதானப்படுத்துவது எளிதென்று
    ஒரு யோசனை சொல்லப்படுகிறது
    அது சரியாகாது பிடிவாதத்திடம்
    என்று சொன்னால் உங்களைப்போல்தான்
    பிள்ளையும் பிறந்திருக்கிறது என்கிறார்கள்.
    எதை தொலைப்பது? எதை தேடுவது?
    இந்த தொலைந்தும் தேடும் வாழ்க்கையில்\\

    பல பரிமாணங்களில் கவிதை தன்னை வெளிப்படுத்துகிறது.

    தொலைத்த பொம்மையைக் குழந்தை அறியும். தானே தேடினால் கண்டடைய முடியும். அதை விடுத்து தொலைத்த பொம்மையைப் பற்றி அறியாதவர் அதைத் தேடுதல் நகைப்புக்குரிய செயலே..குழந்தையைப் போல்தான் நாமும்!

    தொலைத்தலும் தேடலுமான வாழ்க்கையில் நாமே தொலைகிறோம். நம்மையே கண்டெடுக்கிறோம். அழகான அர்த்தமுள்ள கவிதை. பாராட்டுகள் ஹரணி சார்.

    ReplyDelete
  4. வணக்கம். எழுத்துக்களைப் படிக்க இயலவில்லை.புதிய எழுத்துருக்களைப் பயன்படுத்தி இருக்கின்றீர்கள். கீதாவின் கருத்துரையிலிருந்து கவிதையை தெரிந்து கொண்டேன். அருமை.தேடல்தானே வாழ்க்கை

    ReplyDelete
  5. வணக்கம். எழுத்துக்களைப் படிக்க இயலவில்லை.புதிய எழுத்துருக்களைப் பயன்படுத்தி இருக்கின்றீர்கள். கீதாவின் கருத்துரையிலிருந்து கவிதையை தெரிந்து கொண்டேன். அருமை.தேடல்தானே வாழ்க்கை

    ReplyDelete
  6. இருந்த ஒன்று தொலைந்தால் தேடலாம். தொலைந்தது எது என்றே அறியாத நிலையில் தேடுவது--WILL BE LIKE LOOKING FOR A BLACK CAT IN A DARK ROOM ON A NEW MOON DAY. இருட்டில் தொலைத்ததை வெளிச்சத்தில் தேடும் ஒரு திரைப் படக் காட்சி நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete