Tuesday, March 6, 2012

ஹைக்கூ...


      சேற்று நீர்
      குருவி முகம் பார்க்கும்
      நாய் தாகம் தணிக்கும்.

   00000

    சுடுகாட்டு வாடை
    புறம்போக்குக் குடிசைகள்
    குழம்பு வாடை,,

00000

மிதந்த பல்லி
நொந்த பழையது
வாலாட்டும் நாய்...

00000

விரதச் சோறு
அணிலை விரட்டுங்கள்
முதலில் காக்கை

00000

ஓடாத கடிகாரம்
வீட்டுக்கு ஆகாது
ஓடுகிறது நேரம்,,

0000

பேருந்திலிருந்து விழும்
காசுகள்
கோபமாய் கருப்பண்ணசாமி

0000

குடிகார தந்தை
வருஷப் படையல்
பீரும் கறியும்

00000

நல்லா சாப்பிடுங்கப்பா
பிணம் எடுக்க
நாலு மணியாகும்,,,

00000

என்ன பிரச்சினை
வெளிநடப்பும் கலைப்பும்
மேகங்களே?

00000000000000000000000000000000000

ஒரு குழந்தையின்
சிரிப்புதான்
ஒரு துயரத்தினை
துயரில்லாமல்
வாசிக்க வைக்கிறது,,,

000000000


ஒரு கத்தரிக்காய்
ஒரு முருங்கைக்காய்
ஒரு பச்சை மிளகாய்
ஒரு வெங்காயம்
ஒரு கருவேப்பிலை
சில துளிகள் எண்ணெய்
சிக்கனமாய் கடுகு
சில்லறை காசாய் புளி
வறுமையை புரிந்தவை
இவை
வதவதவென்று வாழ்வதில்
இல்லை வாழ்க்கை
வறுமையிருந்தாலும்

00000000000000000

(நன்றி .... புதிய பார்வை.... மார்ச் 2012)

9 comments:

  1. மிதந்த பல்லி
    நொந்த பழையது
    வாலாட்டும் நாய்...


    நல்லா சாப்பிடுங்கப்பா
    பிணம் எடுக்க
    நாலு மணியாகும்,,,///


    அத்தனையும் அருமை என்றாலும் இவை இரண்டும் .. அதிர வைத்த வரிகள்.
    அருமை ஹரிணி சார்

    ReplyDelete
  2. அத்தனையும் அருமை....

    ரசித்தேன்....

    ReplyDelete
  3. நல்லா சாப்பிடுங்கப்பா
    பிணம் எடுக்க
    நாலு மணியாகும்,,,
    அருமையான வரிகள்.இது ஹைக்கூ... மட்டுமல்ல, அதையும் தாண்டிய இன்றைய வாழ்வியல் யதார்த்தம்

    ReplyDelete
  4. குட்டிக் குட்டி வரிகளில் வாழ்வின் யதார்த்தங்கள். புதிய பார்வைதான். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. ரசித்தேன்....http://wwww.rishvan.com

    ReplyDelete
  6. பேருந்திலிருந்து விழும்
    காசுகள்
    கோபமாய் கருப்பண்ணசாமி

    அத்தனையும் ரசித்தேன்.

    ReplyDelete
  7. ஒரு குழந்தையின்
    சிரிப்புதான்
    ஒரு துயரத்தினை
    துயரில்லாமல்
    வாசிக்க வைக்கிறது,,,


    புதிய பார்வைகளுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  8. ஓடாத கடிகாரம்
    வீட்டுக்கு ஆகாது
    ஓடுகிறது நேரம்,,


    ரசிக்கவைக்கும் வரிகள்..

    ReplyDelete