Sunday, January 22, 2012

சில பகிர்வுகள்



                       ஒவ்வொரு பயணத்தின்போதும் சில அனுபவங்கள் கிடைக்கின்றன. இதில் பலர் அறிந்த செய்திகளாகவும் அல்லது சிலர் கண்டதை நான் பார்க்கவும் அனுபவிக்கமுடியாமல் விடுபட்டவைகளாகவும் இருக்கும். இருப்பினும் இவற்றின் பதிவு என்பது அவசியமானது என்பதை உணர்ந்திருக்கிற நிலையில் இவற்றைப் பகிர்ந்துகொள்வதில் தவறில்லை.

                         இம்முறை கள்ளக்குறிச்சி பயணம். தஞ்சையிலிருந்து அரியலுர்ர் பெரம்பலுர்ர் வழியாகக் கள்ளக்குறிச்சி செல்லலாம். இன்னொரு வழி பெரம்பலுர்ரிலிருந்து ஆத்துர்ர் வழியாகக் கள்ளக்குறிச்சி செல்லலம். பிறிதொரு வழி பெரம்பலுர்ர் நாலுரோட்டில் இறங்கி சென்னை செல்லும் பேருந்தில் ஏறி உளுந்துர்ர்பேட்டை இறங்கி அங்கிருந்து கள்ளக்குறிச்சி செல்லாம்.

                      மரபுசார்ந்த பழக்கவழக்கங்களோடு கள்ளக்குறிச்சி இருக்கிறது. இடையிடையே உயர்ந்திருக்கிற கட்டிடங்கள் நாகரிக வாழ்வை நினைவூட்டினாலும். தெருக்கள் இரண்டு பேருந்துகள் செல்லுகிற அளவுக்கு அகலமாக உள்ளன. குறுகிய இடமாக இருந்தாலும்  அதற்குள் மூன்று மாடிகள் என வீடுகளை அமைத்து குடியிருக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டின் முகப்பும் மிக அழகாக உள்ளது.

                               பார்க்கவேண்டிய இடங்களாக சில கோயில்கள் உள்ளது. தெருவிற்குள் உள்ளது ஒன்று பெருமாள் கோயில் அதனையடுத்து இரண்டு தெருக்கள் தள்ளி சிவன் கோயில். அப்புறம் சொர்ணபுரீஸ்வரர் கோயில் என்று ஒன்று.

                             ஒரு கயிற்றை வட்டமாகத் தரையில் போட்டது போல பெருமாள் கோயிலில் நடுவில் இடம்விட்டு வட்டமாக நிற்கிறார்கள். அர்ச்சகர் நடுவில் வந்து எல்லோருக்கும் சந்தனம்...குங்குமம் கொடுக்கிறார். அப்புறம் பெருமாள் கிரீடத்தை தலையில் வைத்து ஆசிர்வதிக்கிறார். அப்புறம் கோயில் உட்புறம் அமைந்துள்ள பிரகாரத்தின் வழியாக வரிசையாக வரும்போது சுண்டல் தருகிறார் ஒருஅர்ச்சகர். இந்தக் கோயிலின் உள்ளே வழக்கமாக உள்ள கடவுளர்களோடு ஐயப்பன்கோயிலும் அமைந்துள்ளது.

                              சிவன்கோயில் வழக்கம்போல அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்கோயில்களை தில்லைக்கோயில் என்று அழைப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். இவற்றுக்கான சான்றுகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

                              கள்ளக்குறிச்சியிலிருந்து 2 மணிநேரப் பயணத்தில் கல்விராயன் மலை என்று உள்ளது. இது வெள்ளிங்கிரி மலைபோன்றது. மலைமேல்தான் பேருந்து செல்லும் என்றார்கள். நானும் சக நண்பர்களும் செல்லும்போது இருட்டிவிட்டது. எனவே பார்க்கமுடியாத வருத்தத்துடன் திரும்பி வந்துவிட்டோம். அவசியம் அடுத்தமுறை போகும்போது இதுபற்றி எழுதவேண்டும்.

                               0000000000000000000000000000

                           
                                2012 என்று ஒரு படம் பார்த்தபோது மனசு கணத்துப்போனது. உலகம் அழியுமா? அழியாதா? என்பது விவாதத்திற்குரியதாகிறது. இருப்பினும் இந்தப் படம் மனதிற்குள் சில அசைவுகளை ஏற்படுத்துகிறது. கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. உண்மையில் உலகின் அழிவை எதிர்கொள்ளும்போது எப்படியிருக்கும் என்று கற்பனை செய்யமுடியவில்லை. ஒவ்வொரு நிமிடத்தையும் ஒவ்வொரு கடுகளவு உணர்வையும் இந்தப் படம் பார்ப்பவ்ரின்  உடல் அணுக்களில் ஆழமாக செருகுகிறது. உணரவேண்டிய படம்.


                             0000000000000000000000000000000