Monday, March 12, 2012


        எஜமானியின் வசவில் எழும்
        கண்ணீர்த் துளிகளை
        துலக்கும் பாத்திரங்களின்
        அழுக்கோடு நீக்குகிறாள்
        கண்களிலிருந்து
        தன் வீட்டின்
        முகப்பில் விளையாடும்
        பிள்ளைகளை எண்ணியபடி

       -----------------------------------------------------

       நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளில்தான்
      வாழ்க்கையோடுகிறது என்றாலும்
      அவற்றின் அறியா வண்ணம்
      வாழ்தலின் ஒவ்வொரு கணத்தையும்
      உயிர்ப்பாக்குகிறது
      வாழ்தலின் பிடிப்பும்
      நம்பிக்கையும்
      தேடலின் உழைப்பும்
      மனிதனாக்கும்
      வாழும் வரைக்கும்.....
      உணர்ந்து மீறலில்
      சிதைந்துபோகிறது எல்லாமும்
      சபிக்கப்பட்ட புலம்பல்களினுர்டாக

      0000000000000000000000000000000

      புத்தனின் சிரிப்பை
      பேசிய பூமியில்
      புத்தனின் மௌனத்தை
      கல்லறைகளில்
      மொழிபெயர்க்கிறது
      ஒரு கூட்டம்...

       ••••••••••••••••••••••••••••••••••••••

       (நன்றி -----  குறி... இலக்கிய மாத இதழ்....திண்டுக்கல்...
            மார்ச்-ஏப்ரல் 2012)