Tuesday, June 5, 2012

ஒரு நாள் கழிந்தது...

எதிர்பாராதவர்களிடமிருந்து வரும்
எதிர்பாராதக் கடிதங்களால்...

சிறுசிறு சண்டைகளால்
கொஞ்சம் கொஞ்சல்களால்


சாப்பிடவும் துர்ங்கவும் எனவும்
பேப்பர் வாங்கவும் டீ குடிக்கவும்
ஒதுக்கும் தருணங்களால்...


ஏதேனும் ஒரு மரணத்தால்


என ஈக்கள் மொய்த்ததுபோல்
எல்லாப் பக்கங்களிலும்
மொய்த்துக் கரைகிறது
ஒரு நாளின்
எல்லாப் பக்கங்களும்


ஆனாலும்


அன்னிய நாய் கண்டு குரைக்கும்
வளர்ப்பு நாயின் குரைப்பன்பிலும்


வாசல் குழாயடியில் தேங்கிய நீரில்
குளிக்கும் அந்தப் பறவையின் சிலிர்ப்பாலும்


ஏதோவொரு குழந்தையின் சிரிப்பிலும்



ஒரு நாளின் ஆன்மா
அமைதி கொள்கிறது...