Wednesday, October 30, 2013

கேட்டதும் கசிந்ததும்



              வழக்கம்போலவே இவ்வாண்டும் தீபாவளி வந்துவிட்டது.

              ஒவ்வொரு ஆண்டும் வரும். கொண்டாடுவோம்.

             என்ன இன்னல்கள் இருந்தாலும் துன்பங்கள் சூழ்ந்தாலும் கொண்டாடுவது அவசியமாகிவிட்ட வாழ்க்கைச் சூழல்.

               தீபாவளி நெருங்குகையில் கடைத்தெரு நிரம்பிவழியும்.

               மக்கள் கூட்டம் சிறு ஓடையாகும் பின் நதியாகும் பின்னிரவில்
வெள்ளியும் நிலவும் மிதக்கும் அற்புதம் காணக் கண்கோடிவேண்டும்.

               அப்படியான நதியின் கரையில் நடந்தபோது காதில் விழுந்தவை

                00000000000000

                ஏண்டி.. உயிரை எடுக்கறே... அவவன் தீபாவளிக்கு நாயா பேயா
அலைஞ்சி பணத்த வாங்கிட்டு வந்தா.. படுத்தறே.. இருக்கற ரெண்டாயிரத்துக்
குள்ள எல்லாத்தையும் முடிச்சுக்க.. இல்லாட்டி எனக்கு ஒரு முழம கயிறு வாங்கிக்கொடு.. என்னால முடியாது...

               வருஷத்துக்கு ஒரு தடவை அழச்சிட்டு வர்றீங்க.. அரக்கப் பரக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயிருக்காதுங்கறது என்னோட தலையெழுத்து..
நான்தான் முதல்ல தொங்கணும்..

             ?????????????????????????????????

               ஏம்மா.. உக்காந்திருக்கே... எனக்கு இன்னொரு ஸ்பைடர் மேன்
டிரஸ் எடுத்துக் குடும்மா...

               இருடா...தம்பி.. பேசாம இரு... உனக்கு பைவ் ஸ்டார் வாங்கி
கொடுத்திருக்கேன்.. அப்பா உள்ள போயிருக்காரு வரட்டும்..

               நீ வாம்மா.. அப்பா வர்ற வரைக்கு போய் டிரஸ் பாக்கலாம்..

              என்ன படுத்தாதடா தம்பி.. அம்மா வயித்த பாரு.. தங்கச்சி
பாப்பா வேற உதக்கிறா.. வலிக்குது நடக்கமுடியல்லே..

             ஏம்மா...இப்படி வயித்த தள்ளிக்கிட்டு இந்தக் கூடடத்துலே வந்திருக்கே..
யாராச்சும் இடிச்சுட்டா.. பாத்தும்மா..

                என்னங்க ஆச்சு?

                ஏடிஎம்ல தொடச்சி எடுத்திட்டேன்.. எண்ணுர்ருவா இருக்கு.. இவனுக்கு
ஸ்பைடர்மேன் டிர ஸ் எடுத்துடலாம்.. போன தீபாவளிக்கே ஏமாத்தியாச்சு...

    ????????????????????????????????????????????????????????

                       யேய் பப்பி... உனக்கு இத்தோட நாலு சுடிதார் ஆச்சு.. போதுமா
இன்னும் வேணுமா?

                       ஒண்ணுமே புடிக்கல்ல டாடி.. ஜீன்ஸ் எடுத்துக் குடுங்க..

                       சரி.. வா..

         ???????????????????????????????????????????????

                       எனக்கே அசிங்கமா இருக்கு.. நாலுங்கிழமையுங்கூட  கையிலே
காசு இலலே.. பழையபடி வட்டிக்கு வாங்கிட்டுத்தான் வந்திருக்கேன்.. இந்தத் தடவை மாசம் சுளையா மூவாயிரம் வட்டிக் கட்டணும்..

                      என்னங்க பண்ணறது.. சமாளிப்போம்.. கேக்கற பிள்ளைங்களா
இருந்தா சொல்லி புரிய வைக்கலாம்..  ஒண்ணுக்கும் வறுமை புரியலே..

          ???????????????????????????????????????????


                       என்ன சார்.. வழக்கம்போல கோஆப்டெக்ஸ் தானா?

                       வேற பாலு.. நம்ப பட்ஜெட்டுக்கு அதான்..  பொண்ணுக்கு
வேற தலைதீபாவளி.. மாப்பிள்ளை அழைக்கப்போவணும்..

                      ??????????????????????????????????

                      என்ன சார் வேணும்.,,

                      பீட் காசு பத்துரூபா வாங்கிட்டு வரச்சொன்னாரு ஏட்டய்யா,,

                      இப்பத்தான் சார் கொடுதேன்..

                      அது வேற கணக்கு.. கொடு.. கூட்டத்துலே நேரமில்ல எடு...

                      காலையிலேர்ந்து நுர்று ரூவாய்க்கு வேவாரம் பார்த்தா ஐம்பது ருபா இவனுங்களுக்கு வாக்கரிசி போடவே சரியாயிடுது..

                       ???????????????????????????????

                        இதுக்குத்தாண்டி உன்னோட கடைத்தெருவுக்வே வரமாட்டேன்னு சொன்னேன்..

                       நாளு தவறாம அழைச்சிட்டு வர்றீங்க... இன்னிக்கு தப்பா
போச்சு?

                      ஏண்டி.. அவவன் துணி எடுப்பான்.. எப்பப் பாரு எடுத்த துணி புடிக்கலேன்னு மாத்த வரேன் இந்தக் கூட்டத்துல அவன் கன்னாபின்னான்னு
கத்துவான்..

                      நேத்தே கேட்டுட்டுதான் வந்தேன்.. பிடிக்கலேன்னு மாத்த வருவேன்னு..

                       சரி போயிட்டு வா..

                       இன்னொரு 200 கொடுங்க.

                       எதுக்குடி?

                       மாத்துற துணி கூட விலையிருந்தா...

                       அடக்கடவுளே...

                  ???????????????????????????????????


                    சைக்கிளை தள்ளியபடி .... சுக்கு காபி...சுக்கு காபி...
                    ஒரு சுக்கு காபி கொடுப்பா..

                    நீண்ட நாட்களாகவே கேட்கவேண்டிய கேள்வி..

                    இதுல என்ன கிடைக்கும்பா உனக்கு..

                    எப்படியும் 50 கிடைக்கும் சார்.. அதுக்கு மேல கெடைக்காது..
நேரமாச்சுன்னா ஆறிப்போயிடும்.. கொட்டவேண்டியதுதான்.. வலிய
போனா யார் சார் குடிப்பா.. வழிபூரா டீக்கடை இருக்கு..

                  ?????????????????????????????????????????


                            சரி போ கடைக்குள்ள..

                            அய்யா சாமி உன்ன கையெடுத்துக் கும்பிடறேன்.. இங்கேயே
உக்காரு நான்போய் துணி எடுத்திட்டு வந்துடறேன்..

                            நா... ன்.. பா...ழ்...க்க வேண்டாமா?

                           கடைக்குள் வந்து வாந்தி எடுத்திராதய்யா.. மானமே போயிடும்..

                          போடி... ஐ ம்.. டீசண்ட் பார்ட்டி.. குடிச்சிருக்கேன்.. ஆனா வாந்தி எடுக்கமாட்டேன்..

                          நாலைந்து சிறுபடிகள் ஏறுவதற்கே நேரமாகிறது.

                          ஜவுளிக்கடை வாட்ச்மேன்.. அம்மா நீங்க மட்டும் போங்க..
நீங்க உள்ளே போகதீங்க சார்.. திட்டுவாங்க..

                          ங்கோத்தா.. .. எவன்டா.. என்னை தடுக்கிறது.. நாயே...

                          தகராறு தொடங்க... அய்யோ கடவுளே என்றபடி அவனை இழுத்துக்கொண்டு திரும்புகிறாள் அந்த தர்மபத்தினி..

                            ????????????????????????


                            என்னை காவு குடுக்கன்னு பொற்ந்திருக்கு சனியன்... வாயிலும் கன்னத்திலும் மாறி மாறி விழுகின்றன சுளிர் அடிகள்... துடித்துப்போகிறான்
அந்த சிறுவன்.

                            ஏமமா இப்படி பச்சபுள்ளய அடிக்கிறே?

                            புடிவாதம் புடிச்சி நான்தான் வச்சுக்குவேன்னு அம்பது ரூபாய வச்சிருந்து இப்ப எங்கய போட்டுடுச்சுங்க.. எப்படி துணி எடுப்பேன்..

                            ஐம்பது ரூபாயில் என்ன துணி எடுப்பாள்?

                             ??????????????????????????????

                             ஏய்யா என்ன கூடடம்?

                              வயசானவரு மயங்கி விழுந்துட்டாரு?

                              ஏம்பா இந்தகூட்டத்துலே வர்றீங்க?

                             பேரப் புள்ளங்களுக்கு துணி எடுக்க வந்தாராம்..

                             சரி..

                             அவரு பணத்தை யாரோ அடிச்சுட்டாங்களாம்-

                             எவ்வளவு?

                             ரெண்டாயிரம்.. அதான் பென்ஷன் பணமாம்...

                               ?????????????????????????????



                               
                   

      

7 comments:

  1. Each one touching the heart.. hats off Harani for the observation

    ReplyDelete
  2. ஹ்ம்ம்மம்ம்ம்ம் மனதைத் தொடும் பகிர்வு..

    ReplyDelete
  3. உன்னிப்பான கவனிப்பு. எந்த சாராரையும் விட்டு வைக்கவில்லை. ஒவ்வொரு அவதானிப்பும் வாழ்க்கையின் யதார்த்தங்களைச் சொல்லிப் போகிறது. வாழ்த்துகள் ஹரணி ஐயா.

    ReplyDelete
  4. உங்கள் power of observation பிரமிக்க வைக்கிறது... அருமை!

    ReplyDelete
  5. இதை ஒரு திரைக்கதை எனலாம். அல்லது குறும்படக் கதை என்பேன். நிச்சயம் யாராவது 'சுட்டு' விடுவார்கள். ஜாக்கிரதை!

    ReplyDelete
  6. உங்களின் கவனிப்பு அசர வைக்கிறது ஐயா... உண்மைகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. சம்பிரதாயம் படுத்தும் பாடு...! பண்டிகைகளின் அடிப்படையான ‘கூடிக் களித்தல்' மறந்தே போனது.

    ReplyDelete