Monday, April 8, 2013

ஏற்றுக்கொள்ளுதல்.... சிறுகதை



                             
                                                   
 ஏற்றுக்கொள்ளுதல்.......


                          மனம் சோர்வாக உட்கார்ந்திருந்தான் ராகவன்,

                         வாசலில் குரல் கேட்டது,

                         தபால்காரப் பெண். தலையில் வெயில் குல்லாவுடன்,, சார்,, இந்தாங்க தபால்,, என்றபடி கொடுத்துப்போனாள்,

                             ராகவன் வாங்கி கடிதத்தைப் பார்த்ததும் மகிழ்ச்சியானான்.
அவனுடைய நண்பன் விவேகன்  கடிதம் எழுதியிருக்கிறான். கடிதம் துபாயிலிருந்து வந்திருக்கிறது. வறுமையால் படிக்கமுடியாமல் ஐடிஐ படித்த கையோடு  தொழில்நுட்ப வேலைக்காக அயல்நாடு சென்றவன், 20 ஆண்டுகளாக இருக்கிறான், இப்போது வளமாகவும் இருக்கிறான், ராகவனுக்கு உள்ள ஒரே நெருங்கிய நட்பு அவன்தான், அவனிடமிருந்துதான் இந்தக் கடிதம், கடிததை எடுத்துக்கொண்டு மொட்டைமாடிக்குப்போனான், மொட்டைமாடியின்மேல் விழுந்திருந்த தென்னை நிழலில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து கடிதத்தை வாசிக்க ஆரம்பித்தான்,

                        அன்புள்ள ராகவனுக்கு,,,

                                       உன் நண்பன் விவேகன்  எழுதிக்கொள்வது, நான் என் மனைவி பிள்ளைகள் நலம், உன் நலமறிய விரும்புகிறேன், உன்னுடைய கடிதம் கிடைத்தது, செய்திகள் அறிந்தேன், எனக்கு வியப்பாக இருந்தது, படிக்கிற காலத்திலேயே என்னுடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் உன்னிடம்தான் நான் தீரவு பெறுவேன், இன்று உன்னுடைய பிரச்சினைக்காக என்னிடம் தீரவு கேட்கிறாய், என்னிடம் கேட்கிறாய் என்றாலே அது பிரச்சினையில்லை என்று புரிகிறது, உனக்குத் தெரியாததா?

                          உனக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான பதவி உயர்வு வழங்கப்படவில்லை, இத்தனை ஆண்டுகாலம் உழைத்தும் பேரில்லை, தகுதிக்கும் நேர்மைக்கும் காலமில்லை, என்றெல்லாம் எழுதியிருந்தாய், உன்னுடைய கருத்துக்கள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்,

                          எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன்,

                          பத்தாண்டுகள் நான் துபாயில் பட்டதை இன்னொருவன் பட்டிருந்தால் அவனுடைய நினைவுநாள் பத்தாம் ஆண்டு நினைவுநாளாக மாறியிருக்கும், வலியோடு வழி தேடி வந்தவன் நான், அனுபவித்தேன் அத்தனையையும் பொறுத்துக்கொண்டு, என்னுடைய துன்பங்களின் வேகத்தையெல்லாம் என்னுடைய உழைப்பில் காண்பித்தேன், உழைப்பின் நுட்பம் உணர்ந்தேன், நுட்பம் உணர்ந்தபோது நான் உயரத்திற்கு வந்துவிட்டேன், இது மாயமில்லை மந்திரமில்லை, உண்மை,

                      எழுதியிருந்தாய் உன்னுடன ஒரே நேரத்தில் பணியில் சேர்நதவர்கள் உனக்கு மேலே பணியுயர்வில் சென்றுவிட்டதாக, இன்றைக்கு உலகம் அப்படித்தான் இருக்கிறது, ஆனாலும் அதில் ஒரு நுட்பம் இருக்கிறது, எல்லாவற்றையும் ஒரே கோணத்தில் பார்க்கமுடியாது, வேடிக்கையாக ஒரு பழமொழி சொல்வார்கள் வேலை தெரிந்தவனுக்கு மேலும் மேலும் வேலையைக் கொடு வேலை தெரியாதவனுக்கு பிரமோசனை கொடுன்னு, இது வேடிக்கையில்லை, நுட்பம்,

                         எளிமையா சொல்றேன், சுமாரா வேலை தெரிஞ்சவன் ஏதோ செய்து மேல வந்துட்டான்னு வச்சுக்குவோம், அவனுக்கு அதிகாரத்தைக் கொடுக்கும்போது அவன் ஜெயிச்சுட்டதா நினைப்பான், அது இல்லே, அதுவரைக்கும் அவன் செய்யாத வேலைகளை எல்லாம் செய்யணும், அவனுக்குக் கீழே இருக்கிற பலருடைய வேலை நுடபங்களையும் அவன் உணர்ந்துட்டாதான் அவனால வேல வாங்கமுடியும்,, நிருவாகம் பண்ணமுடியும்,, பணியாள்ர்கள் ஒவ்வொருத்தனும் ஒரு குணத்தோட இருப்பான், எல்லாரையும் அனுசரிச்சுப்போவணும்,, எல்லாரும் குறை பேசுவான், இவன் பதிலுக்கு எதுவும் செய்யமுடியாது, ஏன்னா இவன் அதிகாரம் பண்ணலாமே தவிர இவனுடைய எல்லா குணங்களையும் அடக்கிட்டுதான் வேலை பார்க்கமுடியும், எல்லாத்தையும விட்டுக்கொடுக்கணும்,, ஒருத்தனுக்கு அதிகாரத்தைக் கொடுக்கறதுங்கறது கூண்டுக்குள்ள அடைக்கற மாதிரி,,அதிகாரங்கற கூண்டுக்குள்ள இருந்துதான் அவனால எல்லாம் செய்யமுடியும்,, விருப்பம்போல இயங்கமுடியாது,, நினைச்சபடிக்கு செய்ய முடியாது,, கண்ணுக்குத் தெரியாத கயிறால உடம்பு முழுக்கக் கட்டிப்போட்ட மாதிரியான நிலைமை,, அவன் அதுக்குள்ளே கெடந்து உழல வேண்டியதுதான்,, அதைத்தாண்டி வரமுடியாது,, ஆனா நீ அப்படியில்ல,, இன்னும் உழைக்கலாம்,, இன்னும் நேர்மையா இருக்கலாம்,, தகுதிப்படுத்திக்கலாம்,, அதுக்கான மரியாதை கோயில்ல தெய்வத்துக்குக் கிடைக்கற மரியாதை மாதிரி,, அது அதிகாரங்களையெல்லாம் தாண்டிய நிலை,, எல்லாத்தையும் உள்வாங்கிட்ட நிலை,, என்னடா ஐடிஐ படிச்சவன் இத்தனை பேசறான் எழுதறான்னேன்னு நினைக்காத,, எல்லாம் இந்த்த் துபாயில பத்தாண்டுகள் பட்டதுலே கிடைச்சசு,, கண்ணுக்குக் கண்ணா  பார்த்து த் தெரிஞ்சுக்கட்டது,,

                         ஒரு நதியைப் போல ஓடிக்கிட்டேயிரு,,, கரையுடைக்காம ஓடுற நதி எப்பவும் அழகு. அதுதான் ஒழுக்கம். நேர்மை. எல்லாம். அதிகாரங்கறது மகிழ்ச்சியைத் தருகிற விஷயம் இல்லை. அது வலிகள் நிறைந்த சுமை. அதுக்காக அதிகாரமே வேணாம்னு சொல்லல ,பூ மலர்ந்து வர்ற மாதிரி அதிகாரம் கைக்குத் தானா வரணும். அப்ப அது காட்டுற அழகே தனி, அதிகாரம் பலபேர் விருப்பப்பட்டு மனசார ஒருத்தர்கிட்ட ஒப்படைக்கும்போது அதுதான் வலிமை. அதேபோல அதிகாரத்துல அமரும்போது பலபேருடைய விருப்பத்தின் அடையாளம் இதுன்னு உணர்ந்தா அதுதான் அதிகாரம் செலுத்துறவனுக்கும் மரியாதை,,உனக்குப் புரியுமனு நினைக்கிறேன் ராகவன், எப்பவும் எந்த நிலையிலும் மகிழ்ச்சிதான் நமக்குக் குறையாக இருக்கணும்,, நிம்மதியா மனநிறைவோட வேலை செய்யணும்,, இது நீடிச்சிருந்தா போதும் வாழ்ற வாழ்க்கைக்கு அர்த்தம்,,

                        வாழ்க்கையிலே சிக்கல்கள் வரும். ஆனா வரவழைச்சுக்கக் கூடாது, பதவி உயர்வும் அப்படித்தான். ஒரு படி மேல போறோம்னா அது முன்னேற்றம்தான் அதேசமயம் நாம இருக்கிற இருப்பிலேர்ந்தும் ஒரு படி மேலேறியிருக்கோங்கறதும் ஒருஅர்த்தம். அதாவது முன்னமாதிரி சட்டுனு கீழே இறங்கமுடியாது, கீழே ஒரு படி கூடுதலானதுங்கற உணர்வு இல்லன்னா கீழே விழுந்துடுவோம்,,இது சாதாரணக் கணக்கு அப்படித்தான் அதிகாரமும் பதவி உயர்வும், என்னோட மேனேஜர் இங்க அடிக்கடி சொல்வாரு ஒருத்தருக்குள்ள தகுதியும் திறமையும் அதற்குரிய இலக்கை எப்படியும் அடைஞ்சிடும். சில சமயங்கள்ல சில காரணங்களால தாமதப்படுமே தவிர ஒருகாலும் தடைப்படாதுன்னு,, இதுதான் உனக்குநான் சொல்றது,, நம்பிக்கையோட வேலை பாரு,, ஆண்டவனை அடிக்கடி நினைச்சுக்கோ,, எல்லாம் சரியாயிடும். அம்மா...மனைவி பிள்ளைகள் குடும்பத்தாருக்கு என்னோட அன்புகள், இந்தியா வரும்போது சந்திப்போம்..உன் அன்பு நண்பன் விவேகன்,