Thursday, June 13, 2013

அவசரத்தந்தி

அவசரத் தந்தி



                                 வணக்கம்.

                                 160 ஆண்டுகளுககுமேலாக மனித வாழ்வில் மிக முக்கியப் பங்கை வகித்துவந்த சொல் தந்தி என்பதாகும.

                                  அவசரமாக ஒரு செய்தியை உடனே யாருக்கும் தெரிவிக்க அதன் விளைவை உடனே தெரிந்துகொள்ள எனத் தந்தியின் பயன்பாடு மிகமிக முக்கியமானதாகக் கருதப்பட்ட காலம் இருநத்து.

                                   கைப்பேசி வந்தபின் தந்தியின் சேவை பயன்படுத்தப்படாமல் தற்போது சூலை 15 ஆம நாளுடன் இசசேவையை நிறுத்திவிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது மிக வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.

                                    தகவல் தொழில்நுட்ப வளரச்சியின் விளைவால் இத்தகைய கொடிய முடிவைத் தந்தி சந்திக்கிறது. என்னதாக் தகவல் தொழில்நுட்ப வசதிகள் பெருகினாலும் தந்தி என்பது மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகும்.

                                   அது மனிதனின் எல்லா உணர்வுகளின் நம்பிக்கைக் களமாக இருந்தது. ஏற்கெனவே கடிதம் எழுதும் பழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைத்துவருகிறோம். இதற்கும் தந்தி நிலைமை ஏற்படும் காலம் வெகு துர்ரத்தில் இல்லை. எனவே தந்தி மூடுவிழாவை அலட்சியமாக எண்ணிவிடமுடியாது,

                                     நுழைய முடியாத இடஙக்ளுக்கு எல்லாம் தந்திதான் நுழைந்து சென்றது,

                                    இறப்புச் செய்திகள்.
                                    பிறப்புச் செய்திகள்.
                                    ஏதேனும் பிரச்சினைகள்.
                                   குடும்பத் தகராறுகள்.
                                    மகிழ்ச்சியான நிகழ்வுகள்.
                                   வேலை கிடைத்துவிட்டது.
                                   உடனே வரவும்.
                                    வேலையில் சேரவும்.
                                    நான் வருகிறேன்.
                                    நான் ஊர்போய் சேர்ந்துவிட்டேன்.
                                    தங்கை வயதுக்கு வந்துவிட்டாள்.
                                    அப்பா பணம் அனுப்பியிருக்கிறார.
                                    அம்மா புறப்பட்டு வருகிறாள். கவலைப்படாதே,
                                    வியாபாரம் பேசி முடித்தாயிற்று.
                                    தேர்வில் வெற்றிபெற்றுவிட்டாள்.
                                   

         இப்படிப் பலவற்றை உணர்வுப்பூர்வமாக அசைக்கமுடியாத மாற்றமுடியாத சாட்சியாக வாழ்வின் நம்பிக்கைத் தடமாக இருந்த தந்தியின் ஆயுள் முடிந்துவிட்டது. 160 வயதில் ஆயுள் முடிவு.

                                     தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் எந்தவிதமான சாட்சியங்களும் இல்லாத நம்பிக்கையில்லாத எதனையும் மாற்றிப் பேசக்கூடிய ஓர் உறுதியற்ற வர்ழ்வின் நிகழ்வு அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

                                    இது நல்லதா?

                                    எதற்கென்றாலும் சொல்லுதிர்ப்பது முக்கியமல்ல, ஆனால் கொடுத்த வாக்கை பேசிய பேச்சை உண்மையென்று உறுதிப்படுத்த எது சாட்சி?
                                      எழுததுப் பூர்வமாக எதுவுமே இல்லாத நிலையில் எப்படி எல்லாமும் சரியாகும்?

                                       தந்தி குறித்த உங்கள் விவாதங்களை நான் ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்.

                                       எதுவாயினும் எழுதுங்கள். ஆரோக்கியமாக இருப்பின் அதனை அரசுக்கு எடுத்துரைப்போம்.

                                        என்னைப் பொறுத்தவரை தந்தி சேவை அவசியமானது.