Thursday, June 20, 2013

சொல்லிக்கொள்ள....



0000

முருகேசன் அம்மா 
அவன் பிறந்தவுடன்
இறந்துபோனாளாம்...

தனலெட்சுமியின் 
அம்மா அம்மை வந்து
இறந்துபோனாளாம்...

மாரியின் அம்மா
வறுமையில் துர்க்குப்போட்டு
இறந்துபோனாளாம்..

விசாலாட்சியின் அம்மா
ஆடிப்பெருக்கில் ஆற்றோடு
போய் இறந்துபோனாளாம்...

கோவிந்து அம்மா
லாரியில் அடிபட்டு
இறந்துபோனாளாம்..

இது  எதுவுமேயில்லாமல்
என்னோட அம்மா
யாரோடோ ஓடிப்போனாளாம்
சொல்லிக்கொள்ள எதுவுமற்ற
என் வாழ்க்கையில் சொல்லிக்
கொள்ள இருக்கட்டுமென்று
போலிருக்கிறது....

0000