Saturday, July 12, 2014

கடவுள் கேட்ட பிச்சை,,,




                                 
                                    சகோதரியே...

                                    உனக்கிட்ட வாழ்வு
                                    பிச்சையென்று வரமானது
                                    யார் குற்றம்?

                                    வெயிலில் காய்ந்து
                                    மழையில் நனைந்து
                                    ஏந்திய கைகளில்
                                    என்ன விழுமோ? அதுதான்..
                                    அன்றைய நாளை
                                   செலவழிக்க,,,

                                    யாதும் ஊரே யாவரும் கேளிர்
                                    உங்களுக்குத்தான் பாடப்பட்டதோ?

                                    எத்தனை பேர்?

                                    பத்து ரூபாய்
                                    போட்டவன் சில்லறை மாற்றிப்
                                   போட்டிருக்கலாம்,,

                                     உன் பங்கு இரண்டு ரூபாய்க்கு
                                    அதிகமில்லை ஆனால்
                                    அதை அனுபவிக்க நீ கொடுத்தது
                                    இம்முறை உயிரை,,,

                                     அம்மா,, தாயே பிச்சை போடுங்க
                                     என்று கேட்டதை யாரென்று
                                     பார்க்காமல் விட்டுவிட்டாய்..

                                     எமனிடம் கேட்டால் என்ன தருவான்
                                     மரணத்தைத் தவிர?

                                     கடவுளின் காலடியில்
                                     பிச்சை கேட்டவளுக்கு
                                     மரணத்தைப் பிச்சைபோட்டவன்
                                     சாட்சிக்கு அந்தக் கடவுளே,,,

                                      சகோதரியே பிறப்பொக்கும்
                                      எல்லா உயிர்க்கும்..

                                      வள்ளுவன் கூட வஞ்சனையாகத்தான்
                                       எழுதியிருப்பானோ?

                                       கடவுளின் பிச்சையாகத்தான்
                                       நீ போகிறாய்...

     
                               
                குறிப்பு.

                                  இன்றைய  செய்தித்தாளில் பத்து ரூபாய் பிச்சைக்காசைப்
                 பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட தகராறில் ஒரு பெண்ணைக்
                கொலை செய்துவிட்டார்கள். அதன் விளைவு இந்தக் கவிதை.

7 comments:

  1. வணக்கம்
    ஐயா.

    கவிதையின் ஒவ்வொரு வரிகளையும் படித்த போது மனம் கலங்கியது... சோகம் இளையோடியுள்ளது பகிர்வுக்கு நன்றி ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.
    தமிழ்மணத்தில் பதிவு செய்து வாக்களிக்கும் வசதியை செய்தால் நன்று. ஏன் என்றால் பலரிடம் பதிவு கடந்து செல்லும் இதனால் பலர் படிப்பார்கள் இது என்னுடைய தாழ்மையான கருத்து ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. நிகழ்வு தந்த கவிதை
    மனதினை கீறிப்போகுது

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அன்புள்ள ரூபன்

    வணக்கம். எனக்குக் கணினித் தொழில்நுட்பம் அதிகம் தெரியாது. தமிழ் மணத்தில் இணைப்பது குறித்தும் தெரியாது. எனக்குத் தெரிந்த சொற்பக் கணினி அறிவும் என்னுடைய மகன்தான் செய்துகொடுத்தது. முயற்சிக்கிறேன். நன்றிகள்.

    ReplyDelete
  5. பணத்தைப் பிரித்துக் கொள் என்றால் - உயிரை அல்லவா பிரித்து விட்டார்கள்!... என்ன என்று சொல்வது?..

    தங்களின் கவிதை மனதை அழுத்துகின்றது - ஐயா!.

    ReplyDelete
  6. ஐயா வணக்கம் ‘பிறப்பொக்கும்’ என்று வள்ளுவன் எழுதியது நிறையவே கேள்விகளை எழுப்புகிறது. எனக்கென்னவோ அதே குறளுக்கு ஒரு thesis -ஏ எழுதலாம் என்று தோன்றுகிறது. கால தேச வர்த்தமான்ங்கள் குறித்து. யாதும் ஊரே யாவரும் ”கேளீர்”என்றே கேட்கத் தோன்றுகிறது. பிச்சை போட நினைப்பவர்கள் ஏதோஒரு தொகையைக் கொடுத்து பங்கு போடச் சொல்வது குறித்து சிந்திக்க வேண்டும்

    ReplyDelete