Sunday, June 21, 2015

நிகழ்வுகள்....நிகழ்வுகள்...

நிகழ்வுகள்...
1, நேற்று நண்பர் கல்வெட்டியல் பேராசிரியர் சோ.கண்ணதாசன் அவர்கள் அலைபேசியில் அழைத்து செய்திசொன்னார். செய்தி இதுதான்.
அரசியல் காரணமாக தமிழகக் கல்விச்சூழலில் தமிழ்வழி பயிற்ற்ல் என்பது அருகிகொண்டிருக்கிறது. மொழிப்பாடமாக வேண்டுமானால் ஆங்கில்ம் மட்டுமல்ல எந்த மொழியும் இருக்கட்டும். அது பிரச்சனையில்லை. அடிப்ப்படையில் ம்ற்ற பாடங்களைக் கட்டாயம் தமிழ்மொழியில்தான் கற்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் முகமாக கவலைகொண்ட தமிழறிஞர்கள் கூடிய நிகழ்வுதான் அது.
கரந்தை தமிழ்ச்சங்கத்தில் நேற்று மாலை தொடங்கியது.
இந்நிகழ்விற்கு அடிப்ப்படை காரணம் கோவை பேரூர் ஆதினம். அவர்க்ள தொடங்கியுள்ள வளர்தமிழ மன்றத்தின் சார்பாக இயக்கம் போல இயங்கி தமிழகத்தின் ஒவ்வொரு மூலையில் தாய்மொழிக்காக அயராதுபாடுபட்டுவ்ரும் தமிழ் இயக்கங்களை ஒருங்கிணைந்து ஒன்றாகப் போராடி தமிழ்வழி பயிற்றலைக் கட்டாயமாக்க அரசினை வற்புறுததவேண்டும் என்பதுதான் நோக்கம். மூத்த ஆசிதினத்தில் அருளாசியுடன் இளையபட்டம் அருள்மிகு வேதாசலம் அடிகளார் அவர்கள் தலைமையில் திருநெல்வேலி, கரூர், திருச்சி என்று தொடங்கி தஞ்சை வந்திருந்தார்கள். குறுகிய காலக் கூட்டம் என்றாலும் நோக்கம் மிக உயர்வானது பொறுப்பானது அவசியமானது என்கிற நிலையில் கிட்டத்தட்ட ஒரு வகுப்பறை முழுக்க தமிழார்வலர்கள் கூடியிருந்தார்கள்.
கூட்டத்தினை ஒருங்கிணைத்தவர் தமிழுக்காக கடைசி மூச்சுவரை செலவழித்து மறைந்த தமிழ்ப் புலமையாளர், பேரறிஞர் தெய்வத்திரு சொ.விருத்தாசலனார் அவர்களின் திருமகனார் திருமிகு பாரி அவர்கள்.
வரவேற்புரையை கரந்தை தமிழ்ச்சங்கத்தின் கணிதவியல் ஆசிரியர், வலைப்பூவில் தமிழுக்காகப் பல பதிவுகளை இட்டுவரும் கி.ஜெயக்குமார் அவர்கள்.
வளர்தமிழ மன்றத்தின் நோகக்ம் குறித்து திரு அப்பாவு அவர்கள் விளக்கிச்சொல்ல அதனைத் தொடர்ந்து இளையபட்டம் அவர்கள் விரிவாக வளர்தமிழ மன்றத்தின் அரிய இப்பணியை எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து பேராசிரியர் திருமாறன் அவர்கள் தன்னுடைய கருத்தை முன்மொழிய தொடர்ந்து அங்கு வந்திருந்தத ஒவ்வொருவரும் தங்களின் கருத்துக்களை எடுத்துரைத்து இதனை எவ்வாறு செயற்படுத்தலாம் என்பதாக தங்கள் ஆலோசனைகளை முன் வைத்தார்கள். இறுதியில் பாரி அவர்கள் நன்றியுரைக்கக் கூட்டம் முடிந்தது.
வேண்டுகோள்
உலகின் எல்லா நாடுகளிலும் அடிப்படைக் கல்வி தொடங்கி விருப்பக்கல்வி வரை அவரவர் தாய்மொழியில்தான் பயின்று வருகிறார்கள். இச்சூழல் தமிழ்கத்தில் இல்லை. ஆயிரமாயிரம் குழுக்கள் இருந்தாலும் ஆங்கிலப் பள்ளிகள் புற்றீசல்போல பெருகிவருவது பெருஙகவலைக்குரியது. எனவே தமிழைக் கட்டாயமாகப் பயிற்றுமொழியாக்குவது என்பது காலத்தின் தேவையாகும். இருப்பினும் தமிழைப் போற்றுகிற பலரும் பல்வித அரசியலைக் கைக்கொண்டு அதனை பிழைப்புக்கருவியாகவே பயன்படுத்திவருகிறார்கள் என்பதும் கண்கூடு..
எனவே பேரூர் ஆதினம் எடுத்திருக்கும் இந்தமுயற்சி மிக முக்கியமானது. தமிழின் மீது அக்கறை கொண்ட யாரும் இதனை எவ்வாறு செய்ற்படுத்தினால் இது வெற்றிபெறும் என்பதறகான பயனான ஆலோசனைகளை முன்வைக்கலாம். அவற்றைப் பேரூர் ஆதினத்திற்கு எழுதியனுப்பலாம். தமிழைக் கற்கவேண்டும். தாய்மொழியில்தான் உலகறிவைப் பெறவேண்டும். உயரவேண்டும் என்கிற உணர்வுடன் நாம்எல்லோரும் இதற்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.
என்றாலும் இவற்றின் பின்னால் இருக்கக்கூடிய
பல சிக்கல்களும் இருக்கின்றன.
தமிழை உயிராக எண்ணிப் படித்தவனுக்குத் தமிழ்நாட்டில் மரியாதை இல்லை.
அவன் பிழைக்க எந்த ஒரு வேலையும் இல்லை.
தாய்மொழியில் படித்தால் நீ சாகமாட்டாய் உயிர்வாழ்வாய் என்கிற உத்திரவாததையடக்கிய நம்பிக்கை இல்லை.
தமிழ்ப் படித்தவர்கள் தமிழையே அறியாதவன் நடத்துகின்ற கல்விநிறுவன்த்தில் கைகட்டி சொற்ப சம்பளத்திற்கு வாழவேண்டிய அவலம் நீடித்துக்கொண்டேயிருக்கிறது.
அரசு பணியாளர் தேர்வு மையம் தவிர மற்றவற்றில் தாய்மொழியில் கலந்துகொண்டு தேர்வு எழுதமுடியாத இடர் நீண்டிருக்கிறது.
தமிழை மூச்சாக எண்ணுபவன் என்ன நினைப்பான். அவன் உள்ளம் எத்தயை இன்னல்களைத் தாங்கும்?
கடைத்தெரு பெயர்ப்பலகை தொடங்கி வெகுசன ஊடகம் வரை தாய்மொழி அக்கறை இல்லை. பிழைகள் மலிந்த செயற்பாடுகள் மனத்தை புண்படுத்துகின்றன.
இவையெல்லாம் நம்முன் இருக்கும் பிரச்சினைகள். தீர்க்க்ப்படவேண்டும் என்பதும் முக்கியமானது. அவசியமானது.
எனவே தாய்மொழியில் பயிற்றுவித்தல் என்பதை நாம் பலப்படுத்த பலப்படுத்த மேற்சொனன் பிரச்சினை சூரியன்கண்ட பனித்துளி போல விலகிவிடும்.
பேரூர் ஆதினத்தின் ஒப்பற்ற இந்த தமிழ்தொண்டிற்குக் கைகோர்க்க வாருங்கள்.
இதுகுறித்த் உங்கள் கருத்துக்களை பேராசிரியர் இளமுருகன், தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர், திருவருள் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்லூரி, வெண்ணாற்றங்கரை அஞ்சல், தஞ்சாவூர் எனும் முகவரிக்கும் அனுப்பலாம். ஊர்கூடித்தான் தேரிழுக்கவேண்டும். தமிழ்த்தேர் இழுக்க வடம்பிடிக்க வாருங்கள் தமிழ்ச் சமூகமே.
இரண்டு
இன்று தந்தையர் தினம்.
என் அப்பாவை நினைக்கிறேன்.
சிறுவயது முதலே விளையாட்டாகக் கூட கைநீட்டாமல்... தம்பி என்றே கடைசிவரை அழைத்து.. எந்த ஒரு செயலையும் வளவளவென்று பேசாமல் ஒருமுறை சொல்லி.. இது நன்மையானது எடுத்துக்கொள் இது தீமையானது விட்டுவிடப் பழகு..என்று அறிவுறுத்தி... உணவுவேளை தவறாமல் உண்ணும் பழக்கத்தையும்.. எப்போது படுத்தாலும் அதிகாலை எழுந்துவிடு.. என்றும்.. எதனையும் தள்ளிப்போடாதே... நாலுபேர் பார்ப்பதற்காக ஒரு செயலைச் செய்யாதே.. மனசாட்சிப்படி உழை.. ஒழுக்கமும் நேர்மையும் உன் மரணம்வரை மாறாதிருக்கவேண்டும்.. கடுஞ்சொல் பேசாதே... யாராக இருந்தாலும் எடுத்தெறிந்துவிடவேண்டாம்.. எல்லோரையும் மதிக்கப் பேசு.. என்றெல்லாம் சொல்லிய பல்வேறு தருண்ங்களை எண்ணிப் பார்க்கிறேன்.
இவற்றிலெல்லாம் அப்பா வாழ்ந்துகொண்டேயிருக்கிறார்.
மூன்று
சுகன்
சுந்தரசுகன்
சௌந்தர சுகன்..
எழுத்துப்போராளி... எழுத்தாய் வாழ்ந்தான்.. எழுத்தாய் மறைந்தான்..
இன்று அவனுக்கு நினைவேந்தல்... தஞ்சை பெசண்ட் அரங்கம்..மாலை 6 மணி
அவரவர் உள்ளத்திலிருந்ரு ஒரு துளி நீர் தாருங்கள் அவனின் ஆன்மாவிற்கு. போதும்.
நன்றி.

4 comments:

  1. பல உண்மைகள் மனதை வருத்தப்படத்தான் செய்கிறது ஐயா...

    தந்தை என்றும் வாழ்த்து கொண்டிருக்கிறார்... நெகிழ்ச்சியுடன்.....

    ReplyDelete
  2. நெஞ்சை நெகிழ்விக்கின்றன - நிகழ்வுகள்..

    ReplyDelete
  3. எழுத்தாய் வாழ்ந்த
    சுந்தர சுகன்
    என்றென்றும்
    எழுத்துக்களின் நிறைந்திருப்பார்

    ReplyDelete
  4. மிக மிக அற்புதமான பதிவு
    நானும் பழைய சுகந்த நினைவுகளில்
    பயணித்துத் திரும்பினேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete