Monday, November 30, 2015

யார் 2

யார்  2

         
                  ஒரு மன்னனின் சகோதரர்கள் அவர்கள்.  நான்கு பேர்கள்.  மன்னனின் மாற்றாந்தாய்க்குப்  பிறந்தவர்கள்.எனவே மன்னனால் அவர்கள் நாட்டை விட்டு விரட்டப்பட்டவர்கள். விரட்டப்பட்ட அவர்கள் நால்வரும் ஆளுக்கொரு கலையைக் கற்றார்கள்.

                       ஒருவன் கற்றது மந்திர வித்தை 

                     ஒருவன் கற்றது தந்திர வித்தை 

                    ஒருவன் கற்றது வாட்போர் 

                   நான்காமவன் கற்றது  நன்றாக  செய்யுள் பாடும் திறன் மட்டும் இல்லாமல் அதில் அறம் வைத்து பாடும் ஆற்றல்.

               இவர்கள் நால்வரும் முயன்றும் போரிட்டும் அவர்களின் சகோதரனை வெல்ல முடியவில்லை. 
                 இதில் நான்காமவன்  ஒரு நூலை எழுதினான். பின்னர் அவன் உலகியலை உணர்ந்தான். வாழ்வின் நிலையாமையை யும் உணர்ந்தான்.
                 துறவு  மேற்கொண்டான். வீடு வீடாகப் பிச்சை எடுத்து காலம்  கழித்தான். அவ்வாறு பிச்சை எடுக்கும்போது ஒருநாள் ஒரு விலைமாது வீட்டின் முன் பிச்சை கேட்டுப பாடும்போது தான் எழுதிய நூலின் சில பாடல்களைப் பாட அதைக் கேட்டு அந்த விலைமாது அந்தப் பாட்டில் மயங்கி அதனை சுவைத்து அவரை மீண்டும் மீண்டும் பாடச்  சொல்லி எழுதிகொண்டாள். அடிக்கடி  அவரை வீட்டிற்கு வரசொல்லி வேண்டி நின்றாள் .அவரு அடிக்கை வந்து பாடிச் சென்றார்.

                  அந்தக விலைமாது ஒவ்வொரு நாள் இரவிலும் தன மாளிகையின் மேன் மாடத்தில் இப்பாடல்களை யாழ் மீட்டிப் பாடிவர அதனை ஒரு நாள் ஊர்க்காவலர் கேட்டு மயங்கி  சுவைத்தனர். அதில் வரும் ஒரு பாடலில் மன்னன் இறந்து போனாதாகப்  பாடுவதைக் கேட்டு அவர்கள்அதிர்ந்துபோய்  தங்கள் தலைவனிடம் அறிவிக்க அத்தலைவனும்வந்து அப்பாடலைக் கேட்டு அதிர்ந்துபோய்   கேட்டு அவன் அரசனிடம் அறிவிக்க. அரசன் அந்த விலைமாதுவை அழைத்துவந்து விளக்கம் கேட்க அவள் துறவி பற்றி  சொன்னாள் .

                  அரசன் உடனே அந்த துறவியை அழைத்துவர . ஆணையிட்டான். ஆனால் அந்த துறவி உடனே வரவில்லை. பின்னர் நெடுநாள் கழித்து  வந்தார். அரசன் அவரை வினவ துறவி தான் அரசனுடைய சகோதரன் என்பதை உணர்த்தினார். 
                    
                      அரசன் அந்த பாடலைப் பாடகச்  சொல்ல துறவி  மறுத்தார்.

                    அரசன் வற்புறுத்த துறவி சொன்னார் நான் பாடி முடித்ததும் நீ இறந்துவிடுவாய  என்று..

                  அரசன் கவலைப்படவில்லை. பாடுங்கள். உங்கள் பாடல் தமிழ்ப்  பாடல் சுவைக்காக  நான் உயிரைவிடச்  சம்மதம்  என்றான்.

                 அதன்படி பச்சை ஓலைகளால் 100 பந்தல்களை அமைத்து ஒவ்வொரு பந்தலிலும் அரசன் உட்கார்ந்து கேட்கவேண்டும் . ஒருபாடல் பாடி  முடிந்ததும் ஒரு பந்தல் எரிந்துவிடும். இப்படியாக 100 வது பாடல் பாடும்போது அரசன் பிணச் சடங்குகள் யாவும் செய்து பிணம் போல் படுத்துக்கொண்டு கேட்கவேண்டும் என்றார்.
அரசனும் அவ்வாறு உடன்பட்டான். 

                 துறவியும் 100 வது பாடலைப் பாடி முடித்ததும்  ஈம விறகுகள் எரிந்து அதன் மேல் படுத்துக் கேட்டிருந்த  அரசன் மேல் தீ பற்றி அவன் உயிர்  பிரிந்தது.(எரிந்தது).

                    தமிழுக்காக ...தமிழ் சுவைக்காக  சகோதரன் பாட அரசன் உயிரை விட்டான். 

                    யாரும் ஆற்றமுடியாத செயலை செய்து புகழ் பெற்றவன் அந்த அரசன்.,

                 அவன்தான் நந்திவர்மன்.

               அவனுக்காக ப் படப்பட்டதுதான் நந்திகலம்பகம்.

             

4 comments:

  1. மிக அழகாக விவரிக்கிறீர்கள் ஹரணி. அது உன்களுக்கு மட்டுமேயான கலை

    ReplyDelete
  2. இதுவரை அறியாதது ஐயா... நன்றி...

    ReplyDelete
  3. nanrikal thozhar edwin and dhanabalan. en kanipporiyil tamil software pazhuthaakivittathu. naalai sariyaakividum. intha pathivai ida siramapatten. siru siru pizhaikal vanthuvittana. mannikkavum. naalai ellavarraiyum sari seythuvidukiren.l nanrikal thangkal varukaikkum karuthirukkum.


    ReplyDelete
  4. நந்திகலம்பகம் - இதுவரை அறிந்திராத விஷயம் பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா.

    ReplyDelete