Monday, November 16, 2015

சில நிகழ்வுகளும்... மன வருத்தங்களும்..

பாரிசில் வன்முறையால் சாதாரண குடிமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுதானா? அப்பாவி மக்களைக் கொல்லும் தீவிரவாதிகள் ஆண்மையற்றவர்களாக திறனற்றவர்களாக கோழைகளாகவே இருக்கிறார்கள். நெஞ்சுரம் என்பது இதுவல்ல. எதுவுமே தெரியாமல் இறந்துபோன உயிர்களுக்காக வருந்துகிறேன்.
< ஆ. மழை கொட்டித் தீர்க்கிறது. எங்கும் இயல்புநிலை பிறழ்ந்து கிடக்கிறது. அரசும் அலுவலர்களும் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள் இன்னல்கள் தீர்க்க. எல்லா சேனல்களும் காட்சிப்படுத்துகின்றன. தவிக்கும் மக்களுக்கு வெள்ளத்தில் உயிருக்குப் போராடும் மக்களுக்கு அவரவர் முடிந்தளவு உதவி செய்வோம். விமர்சனத்தையும் குறைபேசுவதையும் விலக்கி வையுங்கள். உதவும் மனத்தைத் திறந்து வையுங்கள்.

5 comments:

  1. அரசை எதிர்க்க அப்பாவிகளை கொல்லும் தீவிரவாதிகள் உண்மையில் கோழைகளே! இயற்கையின் சீற்றம் அதிகமாகவே இருப்பதாக காட்டுகிறது முறையான வடிகால்வசதிகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லாமையால். காட்டுமிராண்டித்தனமான செயல் இது!

    ReplyDelete
  2. நன்றி தளிர் சுரேஷ். உங்களின் கருத்துரை உணர்வானது.

    ReplyDelete
  3. அன்புள்ள சுரேஷ்... எம்எல்ஏவை தலையில் தட்டிய தலைவர் செய்தது சரியென்று அவரே ஆசிரியர் மாணவர் உறவு என்று பேட்டி கொடுத்திருக்கிறார். எனவே அப்பதிவை நான் எழுதாமல் நீக்கிவிட்டேன். எனவே அன்புகூர்ந்து நீங்களும் உங்கள் கருத்துரையில் இதுகுறித்த விமர்சனத்தை எடுத்துவிடுங்கள்.

    ReplyDelete
  4. சரி தான் ஐயா... முடிந்தளவு உதவி செய்ய எண்ணம் வர வேண்டும்...

    ReplyDelete