Sunday, February 28, 2016



சருகு 
இறகு 

இரண்டும் 
உதிர்வுகள் 

ஒன்று மரத்தின் 
வரலாற்றை 

இன்னொன்று 
பறவையின் வரலாற்றை 

ஒன்றில் பூமி 
இன்னொன்றில் வானம் 

இரண்டும் 
வாழ்வின் உண்மையை 

வானமும் பூமியும் 
என்றும் நிலையானது 

மற்றவை யாவும் 
சருகு அல்லது 
இறகு 

000

6 comments:

  1. அருமை அருமை
    அதிகம் சிந்தச் செய்து போகுது
    தங்கள் அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எளிய வரிகளில் எத்துனை பெரிய உண்மை
    நன்றி ஐயா

    ReplyDelete
  3. நினைத்ததைக் கூறாவிட்டாலும் எண்ணங்கள் சருகாகி உலர்ந்து போகுமோ?

    ReplyDelete
  4. மரத்தின் சிறகாய் சருகும், பறவையின் சருகாய் சிறகும் தோன்றுதே! அழகான கவிதை

    ReplyDelete
  5. அருமையான வரிகள்
    எளிமையான வரிகள்....

    ReplyDelete