Monday, July 4, 2016

கதை 8

                     செயலே செயல்


           பொறுமைநேசன் என்பது அந்தத் தாய்க்கழுதையின் பெயர். தன் குழந்தைகளைக் காணாமல் தவித்துக்கிடந்தது.
           நல்லவேளை இருள் வரத்தொடங்கியவுடன் வந்து சேர்ந்தன.
           தன் இரு குழந்தைகளும் அழுதுகொண்டே வருவதைக் கண்டதும் தாய்க்கழுதை லேசாக கவலை கொண்டது.

           என்னடா செல்லங்களா? அழுதுகிட்டே வர்றீங்க?
           அம்மா..அம்மா.. என்றபடி அழுதன.
           சரி அழுகையை நிறுத்திவிட்டு சொல்லுங்க..
           எங்களை குதிரைக் குட்டிங்க ரொம்ப மோசமா பேசிடிச்சும்மா என்றன.

           என்ன பேசிச்சுங்க?
           சின்ன வயசுலே நீங்க எங்கள மாதிரி இருப்பீங்க.. ஆனா வளர்ந்தா தெரிஞ்சுடும்.. நீங்க கழுதான்னு நாங்க குதிரதான்னு..
           அதனால என்ன? உண்மையதானே அது சொன்னிச்சி?
           என்னம்மா எனக்கு இந்த கழுதைங்கற பெயரே பிடிக்கலே.
           ஆமாமா.. எங்களுக்கு பேர மாத்தி வையுங்க.,.
           இங்க வாங்கடா செல்லம்.. என்னோட பக்கத்துல வந்து உக்காருங்க..
           இரண்டும் கால்களை மடக்கி அம்மாவின் அருகில் உட்கார்ந்துகொண்டன.
           தாய்க்கழுதை பேச ஆரம்பித்தது.
           நாம இருக்கற இந்தக் காட்டைப் பாருங்க.. எத்தனை மரங்க இருக்‘கு.. எத்தனை செடிங்க இருக்கு.. எத்தனை பூக்கள் இருக்கு.. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வடிவம்.. வகை.. பேரு.,.
           ஆமாம்மா
           இயற்கையோட படைப்பு அப்படித்தான்.. கழுதைங்கறது நம்மோட இனத்தோட பெயரு.. பெயர்ல என்ன இருக்கு?
            கழுதங்கற பெயரு எங்களுக்குப் பிடிக்கலே.

            ஏன் பிடிக்கலே?
            எல்லாரும் பிடிக்கலேன்னு சொல்றாங்க.. அதான் எங்களுக்கும் பிடிக்கலே..
           சரி.. நீங்க காலையிலேர்ந்து என்ன பண்ணிங்க சொல்லுங்க..

           இரண்டு கழுதைக் குட்டிகளும் ஆர்வமாய் சொல்ல ஆரம்பித்துவிட்டன.
           ஒரு மான் அக்கா கொம்போட மரத்துக்கிடையில மாட்டிக்கிச்சு..  நாங்கதான் அதை விடுவிச்சோம்.. இல்லாட்டி புலிக்கிட்ட மாட்டி செத்துப் போயிருக்குமாம்..
             ஆமாமா.. அப்புறம் பறவைக் குஞ்சு மரத்து கூட்டுலேர்ந்து கீழே விழுந்துடிச்சி.. அவங்க அம்மா வர்றவரைக்கு பக்கத்திலேயே இருந்தோம்.. அவங்க அம்மா வந்ததும் ஒப்படைச்சிட்டோம்.. நல்லவேளை இல்லாட்சி ஏதாச்சும் பாம்பு புடிச்சிட்டுப்போயிருக்கும்மா..
                நான் ஒரு எறும்பக் காப்பாத்துனேன்.
                நான் ஒரு வெட்டுக்கிளியக் காப்பாத்துனேன்.
               இப்படி பலவற்றைப் பேசின.
               இப்போது தாய்க்கழுதை சொன்னது.

               நீங்க காப்பாத்துன அத்தனை பேரும்.. தங்கள காப்பாத்துனது கழுதான்னு உங்களையே பேசிக்கிட்டிருக்கும்.. அதுக்கு உங்களோட பேரு பிடிக்கும்தானே?
                ஆமாம்மா..
                இதான். பேருல ஒண்ணும் இல்ல.. நாம செய்யற செயல்கள்தான் நம்மோட பேருக்கு பெருமை.. அதனால எப்பவும் நல்ல செயல்கள் செய்தா போதும்..
                 ஓகே அம்மா என்றன இரண்டு கழுதைக் குட்டிகளும்.
               
        நீதி-   பெயரில் இல்லை செயலில்தான்

           

1 comment:

  1. பெயரில் என்ன இருக்கிறது....

    நல்லதோர் நீதி.....

    ReplyDelete