Sunday, May 21, 2017


                     ஒவ்வொரு ஆண்டும் இலக்கு வைத்தே கவிதைகளையும் கதைகளையும் பொதுக்கட்டுரை மற்றும் ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதி வருகிறேன்.

                       இவ்வாண்டும் அவ்வாறே திட்டமிட்டபடி நடந்துகொண்டிருக்கிறது.

                      என்றாலும் இவற்றுக்கிடையில் வாசிப்புக் கூடியிருக்கிறது. அருமையான நூல்கள் வாசிக்கக் கிடைப்பது கொடுப்பினையாகும்.

                       அண்மையில் வாசித்த புத்தகங்கள்.

                        பிஎல். இராஜகோபாலன் -    லீ குவான் யு
 
                         சிங்கப்பூரை நிர்ணயிக்க அதை  உலகமே வியந்து பார்க்கும் பார்க்கும் ஓர்அழகிய நாடாக  எல்லா வகையிலும் உருவாக்க லீ பட்ட பாட்டை தொடக்கம் முதல் இறுதிவரை விறுவிறுப்புக் குறையாமல் சுவையாக வாசிக்கத் தந்திருக்கிறார் பட்டுக்கோட்டை ராஜா என்கிற பிஎல் இராஜகோபாலன்.

                        தி இந்துவில் வெளிவரும்போதே தொடர்ந்து வாசித்தாலும் புத்தக வடிவில் வாசித்த புத்தகங்கள் பின்வருவன

                       1. ஆயிஷா நடராசன் - என்னைச் செதுக்கிய  மாணவர்கள்
                      2. எஸ்.இராமகிருஷ்ணன் - வீடில்லாப் புத்தகங்கள்

                      இரு புத்தகங்களும் இருவேறு களத்தில் இயங்குபவை. மாணவ உலகத்தின் வைரங்களைப் பட்டை தீட்டியிருப்பது முதல் புத்தகம்.

                       வாசிப்பின் மேன்மையை நல்ல படைப்பாளிகளைப் புத்தகங்களை அடையாளப்படுத்துவது பின்நூல்.

                       எங்களின் கல்வியுலகில் மிகச் சிறந்த பேராசிரியர், கல்வியாளர், மாண்புசால் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் அத்தோடு தமிழ், ஆங்கிலம், பௌத்தம் எனப் பன்முகத் தன்மை கொண்ட பேராசிரியர் சோ.ந.கந்தசாமி அவர்களின் சீன இலக்கியம் எனும் 685 பக்கங்களில் ஓர் அற்புதக் களஞ்சியம்.

                    இந்நூல் உருவாக்கம் குறித்து தன்னுடைய முன்னுரையிர் பேராசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார்..

                      இந்த நூலினை எழுதுவதற்குமுன் ஆங்கிலத்தில் சீன இலக்கியம் பற்றி வந்துள்ள வரலாற்று நூல்களையும் ஆராய்ச்சி நூல்களையும், மொழிபெயர்ப்புக்களையும் கலைக்களஞ்சியங்களையும் பயின்று போதிய தரவுகளைத் தொகுத்துக்கொண்டேன்..

                        எளிமையான இந்த தொடர்களுக்குப் பின் இருக்கும் கடுமையான உழைப்பை எண்ணி அதிர்ந்துபோனேன்..

                         ரசித்து வாசித்து முடித்திருக்கிறேன் இந்த நூலை. விரிவாக முடிந்தவரை எளிமையாக உங்களுக்குக் கருத்துரைக்கிறேன் விரைவில்.

                        தற்போது வாசித்துக்கொண்டிருக்கிற நூல்  திவே கோபாலய்யர் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு எழுதிய விளக்கவுரையை..

                       விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொன்னதுபோல ...

                       என் முன்னே சத்திய சமுத்திரம் கோஷித்துக்கொண்டிருக்கிறது. நானோ கடற்கரையில் கிளிஞ்சல் பொறுக்கும் சிறுவனாக நின்றுக்கொண்டிருக்கிறேன் என்று..

                      நான் நிச்சயமாக ஐன்ஸ்டீன் இல்லை. ஆனால் வாசிக்கவேண்டியவை கடலாப் பெருகிக்கொண்டேயிருக்கிறது. நானோ வாசிப்புத் தாகம் அடங்காமல்..

                     இயன்றவரை வாசிப்போம் இருக்கும்வரையாக.
..
                     
                    

8 comments:

  1. நீங்கள் குறிப்பிட்டுள்ள
    புத்தகங்களின் அருமையை
    நீங்கள் சுருக்கமாகச் சொல்லிப் போனாலும்
    நிறைவாக உணரமுடிகிறது
    அது குறித்த தங்கள் பதிவுகளை
    ஆவலுடன் எதிர்பார்த்து...
    வாழ்த்துக்களுடன்..

    ReplyDelete
  2. இப்போதெல்லாம் நூல்களைப் படிப்பதில் சிரமம் தெரிகிறது உங்கள் நூலகமே சொல்லுமே நீங்கள் எவ்வளவு வாசிக்கிறீர்கள் என்று

    ReplyDelete
  3. அன்புள்ள ரமணி ஐயா..
    வணக்கம். மெய்யருள் பதிவுகளுக்கு உரியவராச்சே நீங்கள்? எப்படி இருக்கீங்க? உங்களின் கருத்துரைகளுக்கு நன்றிகள். அவசியம் எழுதுகிறேன்.

    ReplyDelete
  4. அன்புள்ள ஜிஎம்பி ஐயா அவர்களுக்கு,

    வணக்கம். குறைந்தது 100 பக்கங்கள் தினமும் வாசித்துவிடுகிற அருளை எனக்கு ஆண்டவன் தந்திருக்கிறான். இன்று அசோகமித்திரன் அவர்களின் மவுனத்தின் புன்னகை (தி இந்துவில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு 111 பக்கங்கள்) வாசித்து முடித்தேன். உங்களைப் போன்றோரின் வாழ்த்துகளில் வாசிப்பு தொடரும். நன்றிகள்.

    ReplyDelete
  5. >>> இயன்றவரை வாசிப்போம்.. இருக்கும்வரை..<<<

    கருத்தைக் கவர்கின்ற வைர வரிகள்...

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  6. வாசிக்காத நாட்கள் எல்லாம்
    சுவாசிக்காத நாட்கள்
    என்பதை மெய்பித்துக்கொண்டிருக்கிறீர்கள் ஐயா
    படித்ததைக் கொஞ்சம் பகிர்ந்து கொண்டால் நாங்களும் பயனடைவோம்

    ReplyDelete
  7. விமர்சனத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் ஐயா...

    ReplyDelete
  8. வாசிப்பு ஒருவனை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. நல்லது. தொடருங்கள். !

    ReplyDelete