Monday, November 16, 2015
சில நிகழ்வுகளும்... மன வருத்தங்களும்..
பாரிசில் வன்முறையால் சாதாரண குடிமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இதுதானா? அப்பாவி மக்களைக் கொல்லும் தீவிரவாதிகள் ஆண்மையற்றவர்களாக
திறனற்றவர்களாக கோழைகளாகவே இருக்கிறார்கள். நெஞ்சுரம் என்பது இதுவல்ல.
எதுவுமே தெரியாமல் இறந்துபோன உயிர்களுக்காக வருந்துகிறேன்.
<
ஆ. மழை கொட்டித் தீர்க்கிறது. எங்கும் இயல்புநிலை பிறழ்ந்து கிடக்கிறது. அரசும்
அலுவலர்களும் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள் இன்னல்கள் தீர்க்க. எல்லா சேனல்களும்
காட்சிப்படுத்துகின்றன. தவிக்கும் மக்களுக்கு வெள்ளத்தில் உயிருக்குப் போராடும்
மக்களுக்கு அவரவர் முடிந்தளவு உதவி செய்வோம். விமர்சனத்தையும் குறைபேசுவதையும்
விலக்கி வையுங்கள். உதவும் மனத்தைத் திறந்து வையுங்கள்.

