Sunday, January 1, 2012

தமிழால் வாழ்வோம்...


தமிழ் வாழ்க... தமிழ் மாண்பு வாழ்க..தமிழின் மேன்மை வெல்க.

தழைய இழையும் அழகிய முயலாய்
தாவி செழிக்குது இவ்வாண்டு
தந்திரம் இல்லை மந்திரம் இல்லை
உண்மையும் நேர்மையும்
ஓய்ந்தொலிக்குது இவ்வாண்டு
நம்பிக்கை ஒளிருது
உழைப்பு சிரிக்குது
உண்மையில் இவ்வாண்டு...

தமிழும் இனமும்
தன்மான உணர்வும்
வளமாய் வாழ்வில் பெருகியே
வந்து நிலைக்குது இவ்வாண்டு...

தமிழ்தான் நமக்கு
தாயாய் அன்னமிடும்
தளிர் இலக்கியக் கரத்தால் அணைத்திடும்
தளராத வண்ண வாழ்வில்
தம்மோடு நம்மையும் இணைத்திடும்..

தத்தகிரிட தத்தகிரிட தத்தகிரிட
தமிழோடு இவ்வாண்டைக் கொண்டாடுவோம்
பதிவுலகில் தத்தமது இலக்கில்
தங்ககொடி நாட்டிடுவோம்...
தத்தகிரிட தத்தகிரிட தத்தகிரிட..


துன்பம் ஒழியுது தொல்லைகள் தொலையுது
நன்மைகள் சேருது நாலுதிசையும் நமக்குத்தான்..
அசையாத வேராய் நம்பிக்கை
அடிமனத்தில் கொள்வோம்...


வணக்கம் வணக்கம் புத்தாண்டு
வணக்கம் தமிழால்..சொல்வேன்...
உடலின் உயிர் நிலைக்கும்வரை...