![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6f6PoyJH8YZV6tCWBLPMZZVhy8Vl71_IftPP9PHXU70pPf4mgNoDnKh9_gewTR1zyBQek6B99L_pimYY5I54ZQ2XclF66nq2y_LK3BUumJ5jHIll4KU-6N6NHFD0zlPKp8KPYX1b3Whgi/s400/k0373983.jpg)
காய்கறிகளைச் சாப்பிடும்
சுவையைவிட விலை
சுமை...
சுவைக்குள்ளும் பல
சூட்சுமங்கள் சுமை...
பெய்யாமல் கெடுத்ததுபோக
பெய்து கெடுக்கிறது மழை
செய்யும் எந்த வேலையும்
மழையில் சுமை...
நீண்ட சரக்கு ரயிலைப்போல
ஊழல் ரயில்
பெட்டிகள்தோறும் விதவிதமாய்
ஊழல் சரக்குகள்...
வண்ணவண்ண விளையாட்டுக்கள்
வானவில் ஜாலங்கள்
கொஞ்சம் எலும்புகள்
கொஞ்சம் சதைகள்
கொஞ்சம் ரத்தம்
இதுதான் மனிதன்
சாப்பிடவும் முடியாமல்
துர்ங்கவும் முடியாமல்
சுகப்படவும் முடியாமல்
நாளெல்லாம் பொழுதெல்லாம்
ஏறிகொண்டேயிருக்கிறது
சுமை...சுமை...
சுமைகளைத்தவிர
வேறொன்றுமில்லை..