அன்புள்ள...
வணக்கமுடன் ஹரணி.
தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாகக் கணிப்பொறியில் ஏற்பட்ட பழுது இன்றைக்குத்தான் சரியாயிற்று. எனவே எந்தப் பதிவையும் இடமுடியாமல் போனது வருத்தம்.
19.6.2012 இல் மாநில அளவில் நடத்திய் கலைஞர் அறக்கட்டளைச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு அறிவிக்கப்பட்டது. அது கனிந்து நேற்று 09.06.2013 அன்று தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மாண்பமை முன்னாள் மத்திய அமைசசர் திருமிகு பழனி மாணிக்கம் அவர்கள் தலைமையிலும் மாண்பமை அமைச்சர் உபயதுல்லா அவர்கள் முன்னிலையிலும் சான்றிதழும் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
பரிசு வழங்கிய கலைஞர் அறக்கட்டளையினருக்கும் இதனை இன்று செய்தித்தாள்களில் வெளியிட்ட தினமணி. தினத்தந்தி இதழ்களுக்கும் நன்றிகள்.
இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறேன்.
35 ஆண்டுகளாகத் தொடர்ந்து விடாது எழுதிவரும் சூழலில் இத்தகைய பரிசு மிக ஊக்கமானது.
இனி பதிவுகள் தொடரும்.
சந்திப்போம்..
அன்புடன்
ஹ ர ணி