அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு...
உறரணி வணக்கமுடன்.
தொடர்பணிகள் வலைப்பக்கம் வரமுடியாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 15 அன்றைக்கு விடுதலையாவேன் இந்த இறுக்கமாக பணிசூழ்ல்களிலிருந்து.
இம்மாதம் சில மகிழ்ச்சியான நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
1. என்னுடைய மகனுக்கு கல்கத்தாவில் எம்டெக் மேல்படிப்பிற்கு
என்ஐடியில் இடம் கிடைத்துவிட்டது. அவன் இன்னும் இரண்டு
ஆண்டுகளுக்கு கல்கத்தாவாசி. அவனிடம் வங்க மொழியைக்
கற்றுக்கொள்ளக் கேட்டிருக்கிறேன்.
2. இவ்வாரம் ஆனந்தவிகடன் இணைப்பு என் விகடனில் (புதுச்சேரி)
என்னுடைய வலைப்பக்கம் குறித்து இரண்டுபக்கங்கள் பிரசுரம்
ஆகியுள்ளது. உங்கள் அத்தனைபேரின் அன்போடு ஆனந்த
விகடனுக்கு என்னுடைய அன்பார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
3. தஞ்சை கலைஞர் அறக்கட்டளை சிறுகதைப்போட்டியில்
என்னுடைய சிறுகதைக்கு முதல் பரிசு (ரூபாய் 25000) கிடைத்து
உள்ளது.
4. தாமரை. புன்னகை. கணையாழி. தீராநதி. சிறகு போன்ற
இதழ்களில் கவிதையும் சிறுகதையும் பிரசுரமாகியுள்ளது.
இவையும் உங்களின் அன்பும் என்னை மேலும் இலக்கிய உலகில்
தொடர்ந்து பயணிக்க உத்வேகமாக உள்ளது. இன்றைக்குக் கிடைத்த அரைமணி நேரத்தில் இதனைப் பகிர்ந்துகொண்டு பேருந்து பிடிக்க ஓடிக்
கொண்டிருக்கிறேன்.
ஏதேனும் ஒன்றின் மீதான
வெறுப்பு
தீவிரப்படும்போதுதான்
பிறிதொன்றின்
மீதான் விருப்பம்
வலுப்படுகிறது...
உடலறியாத உடலின்
நிழல்போல
விருப்பும்
வெறுப்பும்
காட்டுதலில் இல்லை
காட்டாதிருத்தலில்தான்
அதனதற்குரிய மரியாதையைத்
தக்க வைக்கின்றன
வர்ழ்வின் எல்லாக்
கூறுகளிலும்...
(நன்றி.... கணையாழி.... ஆகஸ்ட் 2012)
யாரும் பார்க்கவில்லை
என்பதற்காக
எதையும் செய்துவிட
இயலாத தருணங்கள்தான்
எல்லாவற்றாலும்
தரிசிக்கப்படுகிறது...
(நன்றி........ தீராநதி...ஆகஸ்ட் 2012)