![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCnB7xlfcUy0hVX7LoAuOj_MbBm106B5QzCUOIW3_c3RvnAJXgPV5Z4WwYlL1MN6KnjQ3w0Zwkwdi7fN_sgEKSTpV2ke36q-lj3LDS3n8YarWxgkTygBVOXizWvPimEk99d1Q_e4dRZr1s/s400/Chennai_tsunami5.jpg)
திசம்பர் 26 ஆண்டு 2004.
ஆண்டவன் அமைதியாக இல்லை.
ஆரவாரமாக இருந்த உலகை வேறு உலகிற்கு மாற்றினான்.
கடலாய் பெருகியோடியது கண்ணீர்.
கடலாய் பொங்கியது உயிர் குடித்தது.
ஆழிப்பேரலை.
என்ன தவறு யார் செய்தார்கள்?
ஆண்டவனுக்கு ஏன் இத்தனை உக்கிரம்?
இத்தனை ருத்ர தாண்டவம்?
மனசுக்குள் இன்றைக்கும் அதை நினைத்தால் வேதனை நெருப்பாகிறது.
அத்தனை ஆன்மாக்களுக்கும் என்னுடைய கண்ணீர்த்துளிகள் போதாது.
ஆனாலும் என் கண்ணீர்த்துளிகளோடு தளும்புகிறேன்.
அவர்கள் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.
அவர்களைப் பிரிந்தவர்கள் அமைதி கொள்ளட்டும்.
ஆண்டவனும் அமைதி கொள்ளட்டும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAXK4qjWllTEMz56lIi9UL-TNUKC7eZudPBBlMAt51NJbPJotJyXA0yiNczFgFv6w04llEL0-NFs4vSW-tdRVWz3rCvqxfLIvYtzIQ6vw9mLpdmzK-LRIfw9Ch2eUubgDH5E8JPVKTIDrJ/s400/Candle_Burning.gif)