Wednesday, January 4, 2012



துர்த்துக்குடியில் ஒரு பெண் மருத்துவர் கொல்லப்பட்டிருக்கிறார். இது தவறான மன்னிக்க முடியாத செயல். ஓர் உயிர் காக்கும் மருத்துவரைக் கொல்லுதல் என்பது எந்தவிதத்திலும் நியாயம் ஆகாது. வலிக்கவே செய்கிறது. இருப்பினும் ஒவ்வொரு துறையிலும் சில புல்லுருவிகள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்காக ஒட்டுமொத்தத் துறையையும் தவறென்று சொல்லிவிடுதல் முறையாகாது. நன்றாக நினைவுடன் சென்ற என் தந்தை ஒரு நரம்பியல் மருத்துவரின் தவறான சிகிச்சையால் கோமா நிலைக்கு சென்று கடைசிவரை நினைவு திரும்பாமலேயே இறந்துபோனார். இன்றைக்கும் அவர் ராசியான மருத்துவர் என்று கூட்டம் அலைமோதுகிறது. என்ன செய்யமுடியும். இயலாமையில் கோபப்பட்டு மன உளைச்சல்தான் மிஞ்சியது. இன்னொன்றும் சொல்லத் தோணுகிறது. இதழ்களும் பத்திரிக்கைகளும் மருத்துவச் செய்திகள், மருத்துவச் சிறப்பிதழ் என்று பல்வகை மருத்துவ விளம்பரங்களோடுஏராளமான கட்டுரைகளை வெளியிட்டு மக்களை வெகுவாக அச்சுறுத்தியே கொல்கின்றன.இக்கட்டுரைகளில் ஒரு நோய் குறித்து வேறுவேறுவிதமான அறிகுறிகளையும் ஒரு மருத்துவர் சொல்வதை இன்னொருவர் மருத்துவர் மறுத்தும் எனவும் வெளியாகின்றன. எனவே சாதாரண வலியைக்கூட பெரிய நோய்க்கான அறிகுறியாக எண்ணி மனசிதைவுக்கு ஆளாகும் மக்கள் அதிகம். எனவெ நோய் வருவதும் அதற்கு சிகிச்சை மேற்கொண்டு பிழைப்பதும் அல்லது இறப்பதும் தவிர்க்கமுடியாதது. அது இயல்பானது. அததது அதனதன் இயல்பான போக்கில் இருக்கட்டுமே..

காசு, பணம் சிகிச்சை இவற்றையெல்லாம் தாண்டி மனிதாபிமானமிக்க பல மருத்துவர்களால்தான் உயிர்கள் பிழைத்துக்கிடக்கின்றன. இவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. ஆனால் சிலர் மருத்துவர்களாக இருந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளிலும், வேறு சில தொழில்களிலும், ரசிகர் மன்றங்களில் தங்களை இணைத்துகொண்டு இருக்கிறார்கள். மருத்துவர் பணி என்பது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. எனவே வேறு ஈடுபாடின்றி உயிர் காக்கும் ஒன்றில் மட்டும் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டால் போதும். பணத்தை ஈட்டுவது எளிது. மனிதர்களை ஈட்ட முடியாது. எந்த விளைவும் விதியின் பயனால் மருத்துவர்களுக்கும் நேரும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. கடவுளுக்கும் மனசாட்சிக்கும் பயந்தால் போதும். தொழில் செய்தால் போதும்.

000000

புத்தரின் புன்னகையும்
மோனாலிசாவின் புன்னகையும்
ஒன்றல்ல..
ஒன்றாயிருப்பதெல்லாம்
ஒன்றையே உணர்த்துவதிலலை
உணர்த்துத்ல் என்பது
அவற்றின் வேலையல்ல
ஆனால்
உணர்தல என்பது
பொறுப்பும் உயிருமாகிறது..
மகாவீரரின் புன்னகை தவமும்
சிலுவையிலறையப்பட்ட ஏசுவும்
வேறல்ல
வேறாகயிருப்பதெல்லாம்
வேறுபாட்டை உரைப்பதில்லை
உரைப்பது வேலையில்லை
கரைவதுதான்
பொறுப்பும் உயிருமாயிருக்கிறது..

காந்தியின் புன்னகையும்
தெரசாவின் புன்னகையும்
வழிமொழிதல்தான்
மேன்மைமிகு வழிமொழிதல்தான்..

வழிமொழிதல் என்பதும்
வாழ்வதிலான கூறுகளில் ஒன்றுதான்
கடைசிவரை ஒன்றுதான்...

00000