Monday, May 7, 2012

தமிழவேள் உமாமகேசுவரமபிள்ளை

தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளையவர்களின் பிறந்தநாள் இன்று. கரந்தைத் தமிழ்ச்சங்கத்தை நிறுவியவர். அவரின் தமிழ்ப்பணிகள் என்றைக்கும் தமிழ்கூறு நல்லுலகின் அழியாத பதிவுகள். புதையல்கள். சாகா வரம்போல அவை. இவர் குறித்து கரந்தைஜெயக்குமார் தனது வலைப்பக்கம் சில அரிய செய்திகளை அள்ளி தந்துள்ளார். அவற்றிலிருந்து சிலவற்றை மட்டும் சான்றாக உங்களுக்குத் தருகிறேன். நன்றி திரு ஜெயக்குமார்.


     
     நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலைத் தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிமுகப் படுத்தியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

       வடமொழி மட்டுமே கற்பிக்கப் பட்டு வந்த திருவையாற்று கல்லூரியில் தமிழையும் கற்பிக்கச் செய்து, அக்கல்லூரியின் பெயரை அரசர் கல்லூரியாக மாற்றியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

     தமிழ் மொழியினைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று 1919 ஆம் ஆண்டிலேயே முதன் முதலாகத் தீர்மானம் நிறைவேற்றியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

     தமிழுக்குத் தனியே ஓர் பல்கலைக் கழகம் வேண்டும் என்று 1922 ஆம் ஆண்டிலேயே முதன் முதலாகத் தீர்மானம் நிறைவேற்றியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

     இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கியபோது, 1937 ஆம் ஆண்டிலேயே அதன எதிர்த்து முதல் குரல் கொடுத்ததும், தீர்மாணம் இயற்றி களத்தில் இறங்கிப் போராடிய முதல் அமைப்பும் கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

இவையெல்லாம் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராய் உமாமகேசுவரனார் அமர்ந்து ஆற்றிய பணிகளுள் ஒரு சிலவேயாகும்.

        7.5.2012 ஆகிய இந்நாள், மூச்செல்லாம் தமிழ் மூச்சு, பேச்செல்லாம் தமிழ்ப் பேச்சு, பெற்றதெல்லாம் தமிழ்த் தாயின் வெற்றி என வாழ்ந்து காட்டிய தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களின் அவர்களின் 130 வது பிறந்த நாள் ஆகும்.

இந்நன் நாளில்
தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களின் நினைவினைப் போற்றுவோம். தமிழவேளின் புகழ் வாழ்க வாழ்க என வாழ்த்துவோம்.


செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் அவர்களின்
60 வது நினைவு நாள்
(9.5.2012)

      
             தாயாகி உண்பித்தான், தந்தையாய்
             அறிவளித்தான், சான்றோ  னாகி
             ஆயாத  நூல்பலவும் ஆய்வித்தான்
             அவ்வப்போ  தயர்ந்த  காலை
             ஓயாமல்  நலமுரைத்து  ஊக்குவித்தான்
             இனியாரை  உறுவோம்  அந்தோ
             தேயாத  புகழான்தன்  செயல்  நினைந்து
             உளம்  தேய்ந்து  சிதைகின்றே  மால்
-          ஔவை துரைசாமி பிள்ளை

--------------------


                                   பெற்றோர்
             இழந்தான்  இல்லத்
             துணையாள் இழந்தான்  உடன்
             பிறந்த தமையன்
             சங்கம் நிறுவிய துங்கன்தனை
             இழந்தான்  அருமை
             மகன் பஞ்சாபகேசன்தனை
             இழந்தான்.


             துன்பங்கள்
             தொடர்ந்து வரினும்
             துயரங்களைச்
             சுமந்து வரினும்  உள்ளம்
             தளராதிருந்தான்  என்றும்
             தமிழ் நினைவோடிருந்தான்
             எங்கள்
             முண்டாசு முனிவன்
             உமாமகேசன்.


For read full details : karanthaijayakumar.blogspot.com

சுகன்...300... வெள்ளிவிழா நிகழ்வுகள்...


         சௌந்தர சுகன் இலக்கியச் சிற்றிதழ் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் சுகன் 300 வது இதழ் மற்றும் வெள்ளிவிழா நிகழ்வுகள் தஞ்சையில் 05,06.05.2012 ஆகிய இருநாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன.

          இதற்கான அழைப்பிதழ் தொடங்கி எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருக்குமே தவிர அதைத்தவிர வேறு எந்த அழகியலையும் சுகனிடத்தில் பார்க்கமுடியாது. அதை அவர் விரும்புவதில்லை. அது மட்டுமன்றி ஓரிருவர் இருந்தாலும்கூட போதும் திட்டமிட்டபடி குறித்தநேரத்தில் விழாவைத் தொடங்கிவிடுவார். அவரின் பண்பு இது. திட்டமிடலும் சரியான நேரத்திற்குத் தொடங்குவதுமான அவரின் பண்பு நல்ல பத்திரிக்கையாளனின் அடையாளம் என்றே குறிப்பிட்டுச் சொல்லலாம்.

           விழாவை நான்கு  பகுதிகளாகப் பிரித்துக்கொள்வது வசதி என நினைக்கிறேன்.  ஒன்று தமிழ்த்தாய் இலக்கியப் பேரவையின் படைப்பரங்கம். இரண்டாவது கவிஞர் கிருஷ்ணப்பிரியாவின் கவிதைப்புத்தக வெளியீடு மூன்றாவது  சுகனின் சிற்றிதழ்கள் குறித்த ஆவணப்படம் நான்காவது இதழ்குறித்த பன்முகப் பேச்சுக்கள்.


                   முதல்பகுதியான படைப்பரங்கம் தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் இலக்கயப்பேரவை குறித்து நீண்டதொரு விளக்கத்தினை சுகன் அளித்தபின் தொட்டங்கியது. சிலர் கவிதை வாசித்தார்கள். அவரவர் அனுபவ வெளிப்பாடாக இக்கவிதைகள் அமைந்திருந்தன.

                     இரண்டாவது கவிதைப்புத்தகம் வெளியீடு. கிருஷ்ணப்பிரியாவின் கவிதைகள் குறித்த பன்முகப் பரிமாணங்களை எடுத்துப்பேசினார்கள். அமிர்தம் சூர்யாவின் பேச்சில் சில அனுபவத் தெறிப்புக்கள் இருந்தன. இவை கவிதை எழுதுவோர்க்குத் தேவையானவை.

                     தனது அனுபவங்களின் வலிகளைப் பதிவு செய்வது கிருஷ்ணப்பிரியாவின் கவிதைகளின் ஒட்டுமொத்தப் பொருண்மையாக நாம் எடுத்துக்கொள்ளலாம். ஒரு பெண் கவிஞரின் பெண் எழுத்துக்கள் என்ற நிலையில் இதனை எடுத்துக்கொண்டால் கிருஷ்ணப்பிரியா பயணிக்கவேண்டிய துர்ரம் இன்னுமிருக்கிறது என்று சொல்லவேண்டும். எனினும் இத்தொகுப்பு ஒரு சோடை போகாத தொகுப்பு என்று சொல்லலாம். முதல் தொகுப்பிலேயே சமுகத்தின் மீதான அக்கறையும் குறிப்பாகப் பெண்கள் மீது நிகழ்த்தப்பெறுகின்ற வன்முறைகளுக்கான  எதிர்ப்புக்களின் தீவிரமான ஒரு களமாக கிருஷ்ணப்பிரியாவின் கவிதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
சில கவிதைகள் மனதில் எந்தவித உணர்வுகளையும் ஏற்படுத்தாது வெறுமனே நிற்கின்றன. இவற்றைத்தாண்டிய சில கவிதைகள் உயர்ந்த உச்சத்தின் தேவையையும் எட்டிப்பிடிப்பதையும் நாம் மறுக்கமுடியாது. பெரும்பாலான கவிதைகளில் கவிதைக்கான ஓசை உணர்வு என்பதைத்தாண்டி ஓர் உரைநடைக்கான சாயலையும் காணமுடிகிறது. எனவே கவிதையின் பொருண்மை என்பது இங்கு அறிவிப்பாகவே நடந்து முடிந்துவிடுகிறது. சிலவற்றில் தன்னிலைவிள்க்கம் என்பது கவிதையினைப் படிக்கத் தடையாக நின்றுவிடுகின்றன. எப்படியெனில் கவிதைக்கென வரையப்பட்டிருக்கும் படங்களைப்போல. கவிதைகளும் படங்களும் தனித்தனியாக இயங்கவேண்டியவை. இந்நுரலில் படங்கள் பொருத்தமற்றே இருக்கின்றன.  இது என்னுடைய பார்வையில் பட்டது.

                  மிக வலுவான பொருண்மையின் இறுக்கத்தில் அதனை இறக்கிவைக்கிறபோது சட்டென்று வைத்ததுபோல ஒரு உணர்வு சில கவிதைகளில் அறியமுடிகிறது. இவரது எழுத்தின் வன்மை இன்னும் ஆழமாக உணர்த்தப்படவேண்டியிருக்கிறது என்பதையே இத்தொகுப்பின்மூலம் அவருக்கு வைக்கும் வேண்டுகோளாக இருக்கும்.  தொகுப்பின் மனதை ஈர்த்ததோடு மட்டுமல்ல மிகமிக வலிமையான கவிதைகளாக சிலவற்றைச் சுட்டலாம்.

                          ஆசை.....அபிஷேகம்... (அசல்) சுற்றுலா... (இங்கு அசல் என்பது தேவையில்லை என்று படுகிறது),,, எதிர்பார்ப்பு... கடவுளின் பயணம்.. கசிவின் பயம்...கறைகள்...நானும் நீயும்...அவளும் அம்மாவும்..

                         சில கவிதைகளில் சொற்கள் முகத்தில் அறைந்து இதயம் துளைத்து ஸ்தம்பிக்க வைக்கின்றன. இவையெல்லாம் எதிர்காலத்தில் தனக்கான ஓர் இடத்தை ஒளியுட்ன் தக்க வைக்கப்போகும் கிருஷ்ணப்பிரியாவிற்கான நம்பிக்கைகள்.. வாழ்த்துக்கள் பிரியா.

                        மூன்றாவது சுகனின் சிற்றிதழ்கள் எனும் ஆவணப்படம்.  இதில் சுகனின் உழைப்பையும் சேகரிப்பையும் பாராட்டலாம் என்றாலும் இது முழுமையான ஆவணப்படம் அல்ல என்பதுதான் என்னுடைய ஆதங்கம். ஒரு முறையான சிற்றிதழ் வரலாற்றை இது எடுத்துவைக்கவில்லை. முன்னோடி இதழ்கள் குறித்து ஒரு பத்தியாவது சுகன் பேசியிருக்கலாம். அதாவது கலாமோகினி...சூறாவளி...ஜெகன்மோகினி...நவசக்தி....கசடதபற...இப்படி நிறைய இதழகள் விடுபட்டிருக்கின்றன. காட்டிய இதழியல் வரலாறு குறித்து குட்டபபட்ட நுர்ல்களில் தமிழ் இதழ்கள் (சோமலே)...முதல் நாளிதழ்கள் மூன்று ...மா.ரா. இளங்கோவன்.. இதழ்களின் பொருண்மை அடிப்படையில் அவற்றின் வகைகள்...தொடங்கப்பட்ட சூழல்.. பட்ட வலிகள்...ஏதேனும் ஒரு கட்டத்தில் சாதித்தவைகள்...நின்றுபோனதற்கான காரணங்கள் என அமைத்துக் கொண்டிருக்கலாம். நிறைய  வரலாற்று விடுபாடுகளுடன் அமைந்துள்ள ஆவணப்படம் என்றாலும் சுகனின் உழைப்பு என்பதும் சிறப்புக்குரிய கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.

                                        
                        நான்காம் நிகழ்வில் சுகன் இதழ் குறித்து தங்களின் தொடர்பு. உறவு. பிணைப்பு போன்றவற்றை ஒவ்வொருவரும் தனக்கேயுரித்தான நிலைப் பாட்டில் எடுத்துவைத்தார்கள். 300 இதழ்களின் எத்தனையே சோதனைகள்...அவமானங்கள்...வலிகள் இவற்றின் ஊடாக எதிர்கொண்டு நடத்திவிட்டு இனி நடத்தமுடியுமா... நிறுத்திவிடலாம் என்று நினைக்கிறேன் என்று ஒரு மணிநேரத்தில் மேலாக சுகன் பட்டியலிட்டபோது அவை அத்தனைபேரின் மனங்களையும் கசிய வைத்துவிட்டது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தரம் ஒன்றையே மனத்தில் இருத்தி எதற்கும் எதனோடும் சமரசம் செய்துகொள்ளாமல் ஒரு இதழை 25 ஆண்டுகள் நடத்துவது என்பது அத்தனை எளிதல்ல. இந்த சமூகத்தின் இருப்பிற்காக தனது பங்களிப்பாக 300 துர்ண்களை நிறுவியிருக்கிறார் சுகன்...300 படைப்பாளிகளை உருவாக்கியிருக்கிறார் சுகன்...300   மைல்கற்களைப் புதைத்திருக்கிறார் சுகன்... என்று சொல்லிக்கொண்டே போகலாம். எனவே சுகன் இதழை எப்படிக் கொண்டுவருவது என்பது குறித்து அவர்தான் முடிவு எடுக்கவேண்டும். இதில் கருத்து சொல்ல யாருக்கும் உரிமையில்லை என்பதுதான் உண்மை.

                       படைப்பாளியால் முடிந்தது வாசிப்பது... காசு கொடுத்து வாங்கி வாசிப்பது...சந்தா கட்டுவது.. அடுத்தவருக்கு அறிமுகப்படுத்துவது. என்பதுதான் இதனை சுகன் இதழ் படைப்பாளிகள் அத்தனைபேரும்  செய்வார்கள். இதில் எவ்வித ஐயமும் இல்லை.
                 
                       விழாவிற்கு கவிஞர் மேத்தா...நா.விச்வநாதன்...கவிஞர் இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்...கவிஞர் நாகராசன் (தத்தன் இதழ் ஆசிரியர்). வலம்புரி லேனா (ஆலம்பொழில் கடித இதழ் ஆசிரியர்),,அம்பல் மாதவி ,,கவிஞர் செழியன்... கவிஞர் செல்லதுரை (நந்தி சேனல்) வெளியூர்களிலிருந்து சக்தி அருளானந்தம்...சொ.பிரபாகரன்..அமிர்தம் சூர்யா (கல்கி உதவி ஆசிரியர்) கவிஞர் நிலா மகள்.. நெய்வேலி பாரதிக்குமார்..மீனாசுந்தர்...சேலம் இளங்கோ... சிறகு இரவிச்சந்திரன் (சிறகு இதழின் ஆசிரியர்) இவர்களுடன் உறரணியும்.  வந்திருந்தோர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.


லை.