Monday, June 18, 2012

கதம்பக் கூடை


                    (1)

                     நாம் எல்லோரும் அறிந்த செய்திதான். இருப்பினும் இதனை இன்னொருமுறை எண்ணிப்பார்ப்பது நலம். கல்கியில் வெளிவந்த கட்டுரையில் சில தகவல்கள் மடடும் (24.06.2012 தேதியிட்ட கல்கி)

         முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான திருமிகு என். சந்தோஷ் எஹக்டே, இவர் சென்னை ஒரு நிகழ்விற்காக வந்த கட்டுரை அது,

               அ,. தாங்கள் யாருக்காகத் தேர்ந்தெடுககப்பட்டிருக்கிறோம் எதற்காகத்
                      தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்று தெரியாத நிலையில்
                       நாடாளு மன்ற உறுப்பினர்கள் இருப்பது சீரழிவுக்கு சரியான
                      எடுததுக்காட்டு.

               ஆ, தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு வெறும் வாக்காளர் என்ற
                      தகுதியை மட்டும் நிர்ணயிக்கக்கூடாது, அவர்கள் அழுத்தமாகப்
                      பணிபுரிய அனுபவம் அறிவும் தேவைய்ர்க இருக்கிறது, எனவே
                      தேர்தலில்போட்டியிட கூடுதல் தகுதியாக எதையாவது வைக்க
                      வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கார் கூறினார். அவரது
                      நோக்கம் குறைந்த பட்சக் கல்வித் தகுதி நிர்ணயிக்கவேண்டும்
                      என்று அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

                 இ. அதேபோல அமைச்சர்களாக வருபவர்கள் நேர்மை, நாணயம்,
                       மட்டுமல்லாது ஒழுக்கம் கொண்டவர்களாக இருக்கவேண்டும்
                       என்றும் கருத்து சொல்லப்பட்டது. ஆனால் அந்தக் கருத்து ஏற்கப்
                       படவில்லை.

                 ஈ, ஒரு நாள் நாடாளுமன்றம் நடக்கும் செலவு ஒருகோடியே 23
                      இலட்சம்,  ஒருநிமிடத்துக்குக் கிட்டத்தட்ட 23000 ஆயிரம்
                       செலவாகிறது,

                உ, இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் 150 பேர் குற்றப்
                       பின்னணி உடையவர்கள். இவர்கள் மீது மொத்தமாக 412 வழக்குகள்
                       உள்ளன.

               ஊ, ஒரு கூலித்தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி முதல்வர்
                       ஆன மதுகோடா 4000 கோடி ரூபாய் வர்த்தகத்தில் புரட்டினார்.......

                                                       நன்றி கல்கி .


                       அரசு மருத்துவமனைகளில் கால்கடுக்க வெயிலில் எத்தனை எத்தனை ஆயிரம் மக்கள் வரிசையில நிற்கிறார்கள். கொடுக்கிற வெள்ளை மாத்திரைகளும் ஊற்றுகிற சிரப்களும் எல்லா நோயையைம் தீர்க்கவல்லது என்கிற நம்பிக்கையில் காலகாலமாய்......ஏதேனும் வறுமையின் பிடியில் ஏழைகள் சண்டையிட்டால் அவர்களை ஏதோ தேசக் குற்றம் செய்ததுபோல காவல்நிலையத்தில் வைத்து பெரிய ஒன்றைக் கண்டுபிடித்ததுபோல விசாரிப்பது...நன்றாக மதிப்பெண்கள் எடுதத மாணவர்கள் படிப்பைத் தொடரமுடியாமல் படுகிற அவஸ்தைகள்...நாற்பது வயதாகியும் திருமணம் ஆகாமல் தறகொலை செய்து சாகிற கணக்கிலும் செய்தியிலும் வராத பெண்கள்....கடைசிவரை குடிசைவாசிகளாக இருந்து உழல்பவர்கள்...

                        சரி விடுங்கள்.. சாகப்பிறந்த இவர்களைப் பற்றி என்னப் பேச?

                        இவர்கள் கோடியில் நின்றால் என்ன நாம் கோடி சம்பாதிப்போம்.
என்றவர்கள் எந்நாளும் நோய் நொடியின்றி வளர்கள் நுர்றாண்டு காலம் வாழ்க...

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

          விஜய் டிவியில் திருமிகு கோபிநாத் அவர்கள் ஒரு நிகழ்ச்சி நடத்தி வருகிறார். நீயா நானா?,,, இப்போதுதான் அதற்கு எனக்கு அர்த்தம் புரிந்தது அதாவது காம்ப்யர் புரிகிற நானா... விவாதத்தில் பங்கெடுக்கிற நீயா?
பார்த்துவிடுவோம்...

                எத்தனையோ நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. சில ஆரோக்கியமானவை. அதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படுபவர்களிலும் ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் ஏதோ வந்ததற்கு கருத்துரைப்பார்கள்.

                சமீபமாக ஆண்கள் பெண்கள் குறித்த பல தலைப்புக்களில் விவாதங்கள் நடந்து வருகின்றன. காண சகிக்கவில்லை.

                நேற்று நடந்த நிகழ்வில் கோபிநாத் ஒரு பெண்ணிடம் கேட்கிறார் எதிரில் உள்ள ஆண்களில் பிடித்தவர் யார்? ஏன்,,, உங்களுக்கு யாரைப் பிடிக்கும்? அலுவலகத்தில் யாரைப் பிடிக்காது? எதனால் பிடிக்காது...

              ஒரு அலுவலகத்தில் வாழ்க்கையின் நிலைப்பாட்டிற்காக வேலைக்குப் போய் தனக்குப் பிடிக்காத நபர் இவர் என்று அலுவலகத்தில் தன்னோடு பணிபுரிபவரை சொன்னால் மறுநாள் எப்படி அந்தப் பெண் அலுவலகத்தில் அதனை எதிர்கொள்வாள். அல்லது அந்த நிறுவனத்தில் பணிபுரியும்வரை எப்படி நடந்துகொள்ளமுடியும்.. காம்ப்யர் என்றால் எதைவேண்டுமானாலும் கேட்கலாம் என்று திரு கோபிநாத் நினைத்துக்கொண்டிருக்கிறார் ...
பலபேர் ஏன் உலகெங்கும் பார்க்கிற ஒரு நிகழ்வில் தனக்கு எல்லாம் தெரியும் என்கிற மனோபாவம்..தான் நினைத்த முடிவிற்கு அந்த நிகழ்வின் பொருண்மையைக் கொண்டுவருவது...சிலசமயம் கேள்விகள் கூசுகின்றன அவர் கேட்பதைப் பார்க்கும்போது... நிகழ்வுக்கு வந்தவர்கள் அதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. ,,,இதுபோன்ற பல நிகழ்வுகள் நீயா நானா என்பதில்.. யார் அதிகம் மொக்கை போடுவார்கள்... யார் கடலை போடுவார்கள்... இதுபோன்ற கேள்விகளில் இந்த சமுகம் பெறப்போகும் பயன் என்ன? தமிழ்ப் பண்பாட்டின் மீறலாக இவை ஏற்படுத்தும் கரும்புள்ளிகள்...

           சில நிகழ்வுகளின் பொருண்மைகளுக்கு அவர் முடிவு கூறி முடிக்கையில் வார்த்தை ஜாலம் தெரிகிறதே தவிர...அதற்கான தீர்வு என்பது வெளிப்பட்டதாகத் தெரியவில்லை. நன்றாகக் கூர்ந்துபார்த்தால் அவர் கருத்துரைப்பதில் திரும்பத்திரும்ப வரும் சொற்களும்..முரண்களும் தெரியவரும்..

                உலகமெங்கும் காட்சிக்குள்ளாகிற தொலைக்காட்சியில் வெளிப்படுவது பயனளிப்பதாக இருக்கவேண்டும் என்பதுதான் நமது விருப்பம்.
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

                     பிற்ந்தது பின்தங்கிய வகுப்பில். செய்த குற்றம் நன்றாகப் படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்தது. அதைவிட மன்னிக்கமுடியாதது படித்த பையனின் தகப்பனாரின் வறுமைக்கோட்டைத் தாண்டிய சம்பளம்...

                  சரி... எந்தப் பயனும் இல்லை. எதுவும் கேட்கப்போவதில்லை. கேட்கவும் முடியாது.  நான் கிரிமிலேயர்.. என்று தந்தால் போதும். அதாவது இந்தப் பையன் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவன். இவனுடைய தகப்பனார் அரசு வேலையில் இருக்கிறார். அவரின் சம்பளம் நிர்ணயித்த இலக்கைவிட அதிகம். எனவே அதிக சம்பளம் உடைய இவர் பின்தங்கிய வகுப்பில் பிறந்தாலும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருப்பவர்களைச் சாராதவர் எனவே இவர் மறற் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்தவர் எனச் சான்றளிக்கப்படுகிறது.

                இதில என்ன லாபம்?

                சரி இப்படி சான்றிதழ் வழங்குவதில் என்ன இடையூறு.. ஒன்று மிலலை. என்ன கஷ்டம் ஒன்றுமில்லை.

                   பிசி என்பது ஓபிசி எனத் தரவேண்டும். பிறந்த மாநிலத்தில் பயன்படுததினால் பிசி அயல் மாநிலங்களுக்கு செல்வதற்கு ஓபிசி.

                   இதனை வாங்குவதற்குள் படுகிற பாடு...ஏற்படுகிற மன உளைச்சல்...இதற்காக அச்சிட்டு வழங்குகிற படிவத்தில் முற்றிலும் சம்பந்தமில்லாத விவரங்கள்... அதிலும் கையொப்பமிடவேண்டும். மேலும் ஓபிசி என்றால் வேலைக்குச் செல்ல என்று மட்டுமே அச்சிடப்பட்ட படிவம். வேலைக்குச் செல்வதற்கு/ மேல் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு என்று அச்சிட்டால் என்ன?

                   சமீபத்தில் ஓபிசி என் மகனுக்கு வாங்க பட்ட பாட்டை ஒரு சிறுகதையாகவே எழுதலாம்.

                      நன்றாக படித்தவிவரம் தெரிந்த நமககே இப்படியென்றால்... மற்ற படிக்காத பெற்றோர்களையும் அப்பாவி மக்களையும் எண்ணிப்பாருங்கள்.

                     இதனைத் தனியாக எளிமைப்படுத்தினால் என்ன?

                     விரும்பினால் நானே எளிமைப்படுத்தித் தருவேன்.

                     பின்னால் வருபவர்கள் சிரமப்படாமல் இருக்கலாம் அல்லவா?
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000