Thursday, April 4, 2013

தீராநதி கவிதை...


என்னுடைய
பிள்ளைகளுக்கும்
மனைவிக்கும்
எதையேனும் விட்டுவிட்டுச்
செல்லவேண்டுமென்ற
எண்ணம்
எதிர் வீட்டுக்காரரின்
மரணத்தின்போது எனக்கு
உணர்த்தப்பட்டது
உணர்வுள்ள மனிதனாக
எப்போதும் வாழவேண்டும்
என்கிற எண்ணம்
நிறைவேறாமல் இன்றுவரை
சமரசம் செய்துகொள்வதிலேயே
குவியலாகக் கொட்டப்படும்
உணவைப் பாய்ந்து கவவும்
விலங்குகளைப் போல
பங்கிடப்பட்ட எனது வாழ்வென்று
ஒற்றைவரியில் எழுதப்படும்
உயிலை எப்படி எழுதமுடியும்
ஏற்றுக்கொள்ளுங்கள் என்று
யோசித்துக்கொண்டிருக்கிறேன்
இறந்துபோனவனின் பிணத்தின் முன்
உயிரிருந்தும் உயிரற்று...

             ( நன்றி,,,,,,,,, தீராநதி ஏப்ரல் 2013),