Thursday, October 17, 2013

தி இந்து....




                     பாரம்பரியமான இந்து நாளிதழ் குழுமத்திலிருந்து தமிழில் தி இந்து எனச் செய்தித்தாள் வெளிவந்துகொண்டிருக்கிறது கடந்த ஒரு மாதமாக.

                     இந்த  செய்தித்தாளில் தினமும் சுட்டது நெட்டளவு என்று ஒரு பகுதியில் வாசகர்கள் தாங்கள் படித்த கதையை பிடித்த கதையை அனுப்பலாம். அப்படி நான் அனுப்பிய ஒரு சென் கதை வெளிவ்ந்துள்ளது.

                      இது தவிர நிமிடக்கதை என்று சின்னஞ்சிறு கதையும் வெளிவருகிறது.

                       இந்தப் பகுதியிலும் என்னுடைய சின்னஞ்சிறுகதை வெளிவந்துள்ளது.

                        அந்தக் கதை

////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

                                        உங்களை பாரு புடிப்பா?

                                                                                   - உத்ரா


                        டிராபிக் அதிகமாக இருந்தது,

                        காலையிலிருந்து நின்று கால்கள் கடுகடுத்துப் போயிருந்தன.

                        எங்காவது உட்கார்ந்தால் போதுமென்றிருந்தது கான்ஸ்டபிள்
                        குமரவேலுக்கு.

                        டென்ஷன் வேறு. அதிகாரிகள் அடிக்கடி போகும் சாலை அது.

                        கூட்டம் சற்றுக் குறைந்தது.

                        தலையிலிருந்து தொப்பியைக் கழட்டி பைக்கின் மேல் வைத்து
விட்டு கொஞ்சம் தண்ணீரைக் குடித்தார். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தார்.

                        அப்போதுதான் அந்தப் பள்ளிச் சிறுவனைக் கவனித்தார்.
 குமரவேலு.

                           என்னடா பாக்கறே?

                           இல்ல அங்கிள்... பப்ளிக்ல சிகரெட் பிடிச்சா போலீஸ்
பிடிப்பாங்கன்று அம்மா சொன்னாங்க. இப்ப நீங்களே பிடிக்கறீங்களே?
உங்கள யாரு பிடிப்பாங்க.....? என்றான்.

                           சட்டென்று அதிர்ந்துபோனார் குமரவேலு.

                                                     0000000000000


பின்குறிப்பு -  உத்ரா என்பது என்னுடைய இன்னொரு புனைப்பெயர்.
                            தொடக்கக்காலத்தில் உத்ரா என்கிற பெயரிலும் வேறுசில
                            பெயரிலும் நிறைய படைப்புக்கள் வந்தன. அதற்குப்பின்
                            ஹரணிதான் தொடர்கிறது. எப்பவாவது உத்ரா..வும் மற்ற
                            பெயர்களும்.

                            இரண்டாவது-

                                         நேற்று முன்தினம் பதிவிட்ட என் நத்தையோட்டு
                             நுர்ல் குறித்து விமர்சனம் எழுதியுள்ள திருமதி ஆர்.
                             மங்கையர்க்கரசி பிரபல எழுத்தாளர் அமரர் அகிலனின்
                             சகோதரி மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000