Wednesday, June 4, 2014

சூரியனின் வயது 91



                    என் தந்தையார் பெரியார். அண்ணா. கலைஞர் கருணாநிதி எனப் பற்றுக் கொண்டவர். என் சிறுவயதில் இவர்களைப் பற்றிச் சுவையாக கதையாக சொல்லி திராவிடப்பற்றை வளர்த்தவர்.. அபபுறம் என்னை எம்ஜிஆர் ரசிகனாக (இன்றுவரை) மாற்றி அவரின் ஒவ்வொரு படத்தையும் குறைந்த பட்சம் 5 முறைக்குக் குறையாமல் பார்க்க அழைத்துப்போனவர். இன்றைக்கும் எம்ஜிஆர் படங்கள் பாடல்கள் என்றால் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்க்கும் ஆர்வம் குறையாம்ல் இருக்கிறது. அதேசமயம் இன்றுவரை எந்தக் கட்சியின் உறுப்பினரும் இல்லையென்றாலும் கலைஞரின் இலக்கிய ஆற்றலின்மேல் உள்ள பற்று ஒருசிறிதும் குறையாமல் உள்ளது. 91 சகாப்தங்களை உருவாக்கிய ஆளுமை நினைக்கவே பிரமிப்பாக உள்ளது. அவரின் தமிழுக்குத் தலைவணங்கத்தான் வேண்டும். இன்றைக்கும் அவரின் வசனங்கள் எழுதிய பழைய திரைப்படங்களைப் பார்க்க அதில் விளையாடும் தமிழ் மீன்களை அள்ளிக் கொஞ்சவே மனது எண்ணுகிறது.


                                 சூரியனின் வயது 91



                        பெயரிலே திருவடக்கிய திருஆரூரின்
                        திருக்குவளை தன்னிலே இருபத்து நான்கினிலே
                        இனிய தமிழின் மூலவித்தாய் முகிழ்த்திட்ட முதல்தமிழே..

                        இயற்பெயராய் குருவின் பெயரைக்கொண்டவரே
                        இன்றைக்கு எல்லார்க்கும் குருவாய் நின்றவரே...

                        தமிழ்க்கடலில் கிடைப்பரிய பொன் அமிழ்தே
                        தமிழினத்தின் வாழ்விற்கு வாய்த்திட்ட கருணைநிதியே...

                        பதின்மூன்று வயதினிலே  சமுகத்தின் பழுதுநீக்க
                        படித்திடப் பள்ளியிலே உன் போராட்டம் பாடமாச்சு..

                        பயின்றிட்ட மாணவப் பருவமதில் மாணவநேசன்
                        என்னும் ஓர் இதழைத் தொடங்கிட்ட  பூந்தளிரே
                        மாணவ மன்றம் அமைத்து பாரெங்கும் பரந்திட்ட
                        குடிசைகளின் துயர்நீக்கத் துடித்திட்ட போராளியே,,

                         துண்டுதுண்டாய் ஒலித்த  உன் முரசொலிதான்
                         தொண்டுதொண்டு எனத் தேசமெங்கும் தமிழ்த்
                         தேசமெங்கும் அதிர்வூட்டி அறியாமை தனைவிரட்டி
                          நின்றிட்ட காட்சியெல்லாம் நீண்டுகிடக்கும் வரலாறாகும்..

                          என்மொழி தமிழ் என்னினம் தமிழினம் இதிலொன்றும்
                          மாற்றமில்லை எப்போதும் தமிழுக்கு ஏற்றமென்றும்
                          கொள்கை நெஞ்சிலேற்றி கொண்டாடிய வேளையில்
                          இந்தி இந்தியென  ஆடிய  ஆட்டத்தில் அதை
                          விரும்பாத உணவாய் திணித்திட்டவேளையில்
                          நாவினிக்க நற்றமிழ் சோறுண்ணும் வாயால் இந்தி
                          உண்ணேன் என்று அன்று நீ கண்ட சிறை
                         .அகிலத்தின் உச்சியில் அன்னைத் தமிழின் நெஞ்சில்
                          ஏற்றிவைத்த சுடர் அது.. துர்ய தமிழ் சுடரது,,,

                          அப்புறம்தான் இந்த அன்னைத்தமிழின் அணையாச்
                          சுடரை அருகிருந்து காப்பதற்கு ஏற்றவழி அரசியலென்று
                          உள்ளே வந்தாய் உள்ளேன் ஐயா என்றாய் போ
                          அண்ணன் உனக்குத் துணையென்று அனுப்பிவைத்தார்
                          பேரறிஞன் பெருந்தகையாளன் உலகமெங்கும் தன்
                          அறிவாலே உதித்திட்ட சூரியன் அண்ணாவென்னும்
                          அன்புப்பிடிக்குள் பிள்ளையானாய்.. தழுவிடத்
                          தம்பியானாய்... தமிழன் என்று சுவாசிக்குமிடமெல்லாம்
                          தலைவனாய்..

                           தமிழுக்குத் தொண்டாற்ற முதலானாய் தமிழன்னை
                           தமிழருக்கு முதல்வனாயிருந்திடு என்று வரமளித்தாள்
                           அப்புறமென்ன வெற்றிமேல் வெற்றிகண்டாய்..

                           ஆனாலும்.. இந்தத் தமிழினம் இன்பமுற் இரவுபகல்
                            துன்பமற்று சுகமாய் வாழ்ந்திட பட்டவைதான் எத்தனை
                            எத்தனை?

                            சதிகாரக் கூட்டங்கள்... புதைகுழிகள்...துரோகத்தின்
                            வீசல்கள்...காட்டாறுகள்.. கைப்பற்ற ஒன்றுமற்ற
                            நெருப்பு பொஙகிப் பரவும் காட்டாறுகள்..துவளவில்லை நீ
                            கற்பாறைகள் நிறைந்திட்ட பள்ளங்கள் மறைந்திட்ட
                            பாதாள வழிகள்... சிந்திய ரத்தத்துளிகள்.. செய்திட்ட்
                            தியாகச் செயல்கள்...ஒன்றையும் விடவில்லை நீ..
                            தமிழின் மேன்மைக்கு தளராது,, தண்ணீர் அருந்தாது
                            தவித்த தாகமொடு பட்ட துன்பங்கள் பலகோடி வரலாறு
                            ஒவ்வொன்றும் உன் பெயர் சொல்லும்,,

                             எதனைப் போட்டாலும் எத்தனை மூடி மறைத்தாலும்
                             எரித்து மேலெழும்பும் நெருப்பென பிரகாசம் காட்டி
                             புயலெனப் பாயுமிடத்துப் புயலெனப் பாய்ந்து
                             தென்றலாய் வீசுமிடத்துத் தென்றலாய் வீசி
                             மழையாய் பொழியுமிடத்து மழையாய் பொழிந்து
                             மாண்புறச் செய்தாய் மங்காத தமிழை உலகெஙகும்
                             செமமொழி எம்மொழி என்றைக்கோ என்று முரசொலித்து
                             நின்ற களத்தில் முதல்வீரன் நீதான்.. வெற்றிக்கனி பறித்திட்டு
                            தானுண்ணாத் தமிழினத்தாருக்குப் பங்கிட்டுப் பார்த்து
                             பரவசப்பட்டவனும் நீதான்..

                             உன் பணிகள் பற்றி நான் பாட என்னாயுள்
                             போதா எந்தப்பணியென்று தனித்து நான் சொல்வேன்
                             எல்லாப் பணியெடுத்தும் நீ தொடுத்த அம்பு மல்ர்களை
                             எப்படி சேர்ப்பேன்?  மலைப்பாய் இருக்கிறது மாமலையாய்
                             உயர்ந்து நிற்கும் உன் மகத்துவம் பாடவெனக்கு..

                             பேசும்போது ஒரு தமிழ் கவிபாடும்போது இன்னொருதமிழ்
                             வசனமாய் வார்க்கும்போது வாசமிகு தமிழ் உரைநடையில்
                             உள்ளத்தைக் கொள்ளைக்கொள்ளும் இன்னொருதமிழ்
                             நாடகமேடையில் நவரசம் துள்ளும் தமிழ் நற்றமிழ்
                             இலக்கியத்தை எழுதுகையில் இளமைத்தமிழ் இலக்கணத்தைப்
                             பிழிந்தெடுத்து ஊட்டுகையில் உவகைத்தமிழ் ஊருக்கெல்லாம்
                             நீதி தவறாமல் உழைத்த நீ உனக்குள்ளே நெஞ்சுக்கு நீதி
                             உரைக்கும்போது அறத்தமிழ் அற்புதத்தமிழ் மறத்தமிழ்
                             மாண்புறும் மானிடர்க்கு மகத்தான தமிழ் என்று வகை
                             வகையாய் தமிழுக்குச் சுவை வகைகாட்டியவன் நீ..

                             உன்தமிழை உலகம் பாடியது தமிழின் உலகம் நீயென்று
                             உண்ர்ந்து பாடியது.. இன்னும் உழைத்திடவேண்டுமென்று
                             நீயெண்ணும் நிலையைக் கடவுள்தான் பாடவேண்டும்..

                             அகல்விளக்காய் எரியத்தொடங்கி இன்றைக்கு
                             தமிழின் தேசமெங்கும் சூரியனாய் தகிக்கின்றாய்
                             தரணியெங்கும் தமிழின் மேன்மைக்குத் தகுதியாய்
                             மணிகள் கோர்க்கிறாய்  சகாப்தங்கள் 91 ஆனபோதும்...

                             உன் தமிழுக்கு வணக்கம்.
                             உதயசூரியனே தமிழின்  91 வது பருவமே
                             வணக்கம்.

                               ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,