Friday, January 20, 2012

பேருந்து (நாவல்)



                          வணக்கம்,  நான் பதினைந்து ஆண்டுகளாகத்  தஞ்சையிலிருந்து சிதம்பரம் வரை பேருந்துகளிலும் புகைவண்டிக்ளிலும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

                           இப்படிப் பேருந்தில் பயணித்ததில் போகப்போகப் பழக்கமானவர்கள் பலபேர். அவர்களில் சிலரே மனதைக் கவர்ந்தவர்கள். அவர்களோடு பிணைந்த என்னுடைய தினசரி வாழ்வையும் இணைத்துதான் இந்த பேருந்து நாவலை யோசித்தேன்.  இந்நாவலை எழுதத்தொடங்கி ஆறுமாதங்கள் ஆகிவிட்டன. பாதிதான் முடிந்திருக்கிறது. தொடர்ந்துகொண்டிருக்கிறது.

                         இதற்கிடையில் இந்நாவலை உங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என்றாலும் கொஞ்சம் தயக்கமிருந்தது. இணையத்தில் வலைப்பக்கத்தில் ஒரு நாவலை வாசிக்கிற அளவுக்கு பொறுமையிருக்குமா என்று. இருப்பினும் துணிவோம் என்று துணிந்ததுதான் இப்பதிவை. வாரமொருமுறை ஒரு அத்தியாயமாக இதனை எழுதலாம் என்று.  உங்கள் கருத்துக்கள் எதுவாயினும் பகிர்ந்துகொள்ளுங்கள் அது நாவலாக முழுமைபெறும்போது தனித்துவம் அடையும்.

                      வாசிக்கப்போகும் அனைவருக்கும் நன்றிகள்.


                             00000

                                             முதல் அத்தியாயம் - வெள்ளைக்குதிரை


                       அன்று வெள்ளிக்கிழமை.

                       பிறந்தது முதல் 30 ஆண்டுகள் வரை எந்த ஊருக்கும் தொடர்பயணம் மேற்கொண்டது இல்லை.

                       மனதிற்குள் கல்லுர்ரி ஆசிரியனாகவேண்டும் என்கிற கனவு சுடராய் எரிந்துகொண்டிருந்தது கண்ணாடிக்குள் ஏற்றிவைத்ததுபோல அசையாமல்.

                        அதன் இதமான வெப்பம் இதயத்தின் கனவுகளை உறங்கவிடாமல் செய்துகொண்டிருந்தது,

                        நினைத்ததுபோலவே ஒரு தமிழாசிரியர் பணி அமைந்தது,

                       மானிடவ்ர்க்கென்று பேச்சுப்படின் வாழ்கில்லேன் என்ற ஆண்டாளின் வைராக்கியமாய் எப்படியும் கல்லுர்ரிப் பணிக்கு சென்று தீரவேண்டும் என்கிற முனைப்பில் வெற்றிகண்டது ஒரு போரை எதிர்கொண்டு வெற்றிபெற்றதைபோல உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது,

                       தஞ்சாவூரிலிருந்து சிதம்பரம் பேருந்தில் 4 மணிநேரப் பயணம். மிகமிக அலுப்பூட்டும் பயணம்.

                      வேறு வழியில்லை. கிடைத்தது கிடைக்கவேண்டுமென்றால் சில துன்பங்களைச் சகித்துக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தையும் ஏற்கத்தான் வேண்டும், ஏற்றுக்கொண்டேன்.

                       காலையில் எல்லோரும் கண்உறஙகும் சுகமான பொழுதில் கண்களில் இருந்து துர்க்கத்தைப் பிய்த்து எறிந்து சடசடவென உடலில் குளிர்ந்த நீரை ஊற்றி அவசரஅவசரமாய் கிளம்பி பேருந்து நிறுத்தத்திற்கு வரவேண்டும். 6.10 க்கு அந்தப் பேருந்து வரும் என்றார்கள். பாய்ண்ட டூ பாய்ண்ட் பேருந்து அது. குறிப்பிட்ட நிறுத்தங்கள்தான். நன்றாக விரைவாக செல்லும் என்று ஏற்கெனவே பயணிக்கும் நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். 6.10க்கு ஏறினால் கண்டிப்பாக 9.20க்கு சிதம்பரம் பேருந்துநிலையம் சென்றுவிடும்.

                       அகலமான வெள்ளை நிறப் பேருந்து அது. பார்க்க அழகாக இருக்கும். நீரோடை போன்ற எழுத்துக்களில் அதன் முகப்பில் வொயிட் உறார்ஸ்  (வெள்ளைக் குதிரை) என்ற எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருந்தன. பெயர் வைத்தவர்கள் ரசனையான ஆளாக இருக்கவேண்டும்.

                       காலையில் சிலீரென்ற காற்று முகத்தில் அறைய முன்புறம் வைத்தியநாதன் பேட்டை செல்கிற நகரப்பேருந்து வர துர்ரமாய் வெள்ளைக் குதிரையின் முகம் தெரிந்தது.

                       நகரப்பேருந்தைக் கடக்கமுயல்கையில் ஓடிச்சென்று கைகாண்பிக்க சற்று துர்ரமாய் போய் கணேசபவன் ஹோட்டல் அருகில் சிறு சப்தமுடன் பிரேக்கை அழுத்த நின்றது. ஓடிப்போய் ஏறினேன்.

                        எங்க சார் போகணும்?  கண்டக்டர் படியிலேயே நிறுத்திக் கேட்டார்.

                        சிதம்பரம் போகணும்.

                       வாங்க உள்ளே

                        உள்ளே போனேன், எங்கும் இடம் இல்லை. கண்டக்டர் இருக்கையைத் தவிர. டிக்கெட்டை வாங்கிக்கொண்டதும் கண்டக்டர் சொன்னார், சார் போய் என் சீட்டுலே உக்காருங்க. கண்டக்டர் முகத்தைப் பார்த்தேன். நீண்ட நாள் பழகிய முகம்போலத் தோணியது, அவருக்கு நன்றி
சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்தேன். டிரைவர் இளம் வயதினராக இருந்தார். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்ததுபோல இறுக்கமான முகம், நேராக சாலையைப் பார்த்துக்கொண்டிருந்தது, கைகள் ஸ்டியரிங்கை அழுந்தப் பிடித்துக் கொண்டிருந்தது,

                           நான் தயக்கமுடன் முகத்தை எதிரே போகும் சாலையைப் பார்த்தபடி திருப்பி வைத்துக்கொண்டேன்,

                          வண்டி ஓரே சீரான வேகத்தில் அதேசமயம் குலுங்கல் இல்லாமல் அழகாக ஓடியது மனதுக்கு இதமாக இருந்தது,

                          கும்பகோணம் பேருந்து நிலையத்திற்குள் புகுந்து சிதம்பரம் பேருந்துகள் செல்லும் கட்டையில் நின்றது, வண்டியை நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கினார், கண்டக்டரும் இறங்கினார், டிரைவர் ஒவ்வொரு டயராகத் தட்டி காற்று போதுமானதாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு வாப்பா என்று கண்டக்டரைப் பார்த்து கூப்பிட கண்டக்ட்ர் என் பக்கம் திரும்பி சார்,,,வாங்க டீ சாப்பிடலாம், 7.25க்குத்தான் டயம்போட்டிருக்கு,
,
                            நான் இறங்கிப்போனேன்,

                           எங்க சார் வேலை பாக்கறீங்க?

                            சொன்னேன்,

                             நானும் தஞ்சாவூருதான், மேலவீதியில இருக்கேன் சார், நீங்க?

                             நான் கரந்தை என்றேன்,

                             தினமும் போவீங்களா?

                            ஆமா?

                            நம்ப வண்டி ரெகுலர்தான்,  நான் திங்கள் புதன் வெள்ளி வருவேன் சார், எதிர்பக்கம் டிரைவர் கண்டக்டரும் நம்ப ஆளுங்கதான், சொல்லி வச்சிடறேன்,

                            டீக்கு நான் காசு கொடுத்தேன்,

                            சார்,, விடுங்க நான் கொடுக்கறேன்,

                            பரவாயில்ல நான் கொடுக்கறேன், கொடுத்து மீதி சில்லறை வாங்கினேன்,

                            டிரைவர் பேர் பாண்டியன், கண்டக்டர் பேர் ஜெயக்குமார் என்று அறிமுகம் நடந்தது, டிரைவரின் முகத்தில் இறுக்கம் லேசாகக் குறைந்ததுபோல இருந்தது,

                             மறுபடியும் வண்டி எடுத்து சிதம்பரம் சாலையில் திரும்பியது, திருபுவனம் தாண்டி திருவிடைமருதுர்ர் வளைவில் திரும்பியபோது வெடிவெடித்ததுபோல ஒரு சப்தம் கேட்டது, கூடவே ம்மா,,, என்ற குரலும்,

                            துர்க்கிவாரிப்போட்டது எனக்கு, பாண்டியன் வண்டியை சட்டென்று நிறுத்தினார், துர்ரத்தில் வயல்களிலிருந்து அருகிருந்த வீடுகளிலிருந்து ஆண்களும் பெண்களுமாக ஓடிவருவது மேலும் அதிர்வை உண்டாக்கியது,

                                                                                            (பேருந்து ஓடும்)
                       

14 comments:

  1. அழகா ஆரம்பிச்சு அதிர்ச்சியா முடிச்சுட்டீங்களே... அருமை... கண்டிப்பாக நாவலைத் தொடர்வேன்...

    ReplyDelete
  2. நாவலை நகர்த்திச் செல்லும் விதம், அடுத்த பதிவை எதிர்நோக்க வைக்கும் யுக்தி, அருமை. தன்னிலையில்கூறப் படுபவை, கற்பனையா, அனுபவமா. ?எதுவாயிருந்தாலும் தொடருவேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நாவல் சுவாரசியமாய் ஆரம்பித்திருக்கிறது. புதிதான அனுபவங்களை எதிர் நோக்கி அதே பேருந்தில் எங்கள் பயணமும்.

    ReplyDelete
  4. கதை விறுவிறுப்பாக இருக்கிறது.
    தொடருங்கள் ஐயா.
    நன்றி.

    ReplyDelete
  5. வெள்ளைக் குதிரையில் பயணிக்க நானும் பருவப் பயணச்சீட்டு பெற்றுவிட்டேன்.தொடக்கமும்,முதல் அத்தியாயத்தின் நிறைவும் அருமை.திருவிடைமருதூரி வளைவினை எட்டிப் பார்க்கின்றேன், என்ன நடந்தது என்று...

    ReplyDelete
  6. நாவல் முயற்சிக்கு வாழ்த்துக்கள். தொடருங்கள் ...நானும் தொடர்கிறேன்

    ReplyDelete
  7. அழகான நினைவுப்பயணம் இப்படி ஆரம்பத்திலேயே அதிர்வுண்டாக்கி நிற்கிறதே.... மனிதர்களைப் படிக்க வழி உண்டாக்குபவை இது போன்ற தொடர்பயணங்கள். வாய்ப்பினை அழகாகப் பயன்படுத்த முனைந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அழகாய் ஆரம்பித்திருக்கிறது பயணம்.... கடைசியில் அதிர்ச்சியாய் ஒரு செய்தி வைத்து அடுத்த பகுதியில் என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பும் வைத்தது இன்னும் அதிக ஈடுபாடு உண்டாக்கியது. நாவலின் அடுத்த பகுதிக்காய் காத்திருக்கிறேன்....

    ReplyDelete
  9. அட..என்ன சடர்ன் ப்ரேக்? என்னாச்சு?

    ReplyDelete
  10. பேருந்து பயண அனுபவங்களுடன் கதை நன்றாக செல்கிறதுஃ வாழ்த்துக்கள் தொடரவும்

    ReplyDelete
  11. அழகான தொடக்கம்.எதிர்பார்ப்பு மூளும்அந்த பேருந்தில் நானும் உங்களோடு பயணிப்பதான உணர்வு பீரிடுகிறது.

    ReplyDelete
  12. அடுத்த பகுதி வேண்டும் ஐய்யா

    ReplyDelete
  13. என்னுடைய ஆய்யுக்கு உங்கள் நாவல்.முழுவதும் வேண்டும்

    ReplyDelete