Monday, January 23, 2012

வடை ( நாடகம்)



                                       

                                                காட்சி - ஒன்று

                       (அது நகரமும் சாராத கிராமமும் சாராத ஊர். அந்த ஊரின் கடைத்தெரு - அதில் வரிசையாக டீக்கடைகள். அதில் ஒரு கடையில் இரு நண்பர்கள் டீ சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்)

                   கோபால் -   அண்ணாச்சி ரெண்டு டீ போடுங்க. என்ன ராகவா ஏதும்
                                            முன்னேற்றம் உண்டா?

                    ராகவன் -    இல்லை கோபால். வெறுப்பா இருக்கு. இந்த வாரம் மட்டும் பத்து அப்ளிகேஷன் போட்டாச்சு. எல்லாம் கிணத்துலே போட்ட கல்லாயிருக்கு.. வீட்டுலேயும் காசு கேக்கமுடியல்லே.. உன்கிடடே எவ்வளவுதான் கேக்கறது?

                     கோபால் -   எதுக்கு வருத்தப்படறே? என்னால முடியுது செய்யறேன். நாம அப்படி பழகலே... காலச்சூழல் எனக்கு முன்னால வேலை கிடைச்சிடுச்சி..அவ்வளவுதான்.. ஆனா என்ன பண்றது ராகவன். சாண் ஏறுனா முழம் சறுக்குது...என் ராசி போலருக்கு...காரியம் காரியம்னு சம்பாதிக்கற காசெல்லாம் போயிடும்போல இருக்க.. எவனர்ச்சும் செத்தா போதும் எங்கம்மா படுத்தறபாடு... தாங்கமுடியல்லே.. அவனுக்கு வேட்டி எடு இவளுக்கு புடவை எடுன்னு..ஏண்ட வேலைக்குப் போனோம்னு இருக்கு..

                         இந்தாங்க தம்பி டீ .... (இருவரும் வாங்கிக்கொண்டு சாப்பிடுகிறார்கள். அப்போது எதிர்வரிசையில் ஒரு கடையிலிருந்து ஒரு நடுத்தர வயது மனிதர் இவர்களைப் பார்த்து சைகை செய்கிறார்..

                    ராகவன் - கோபால் உங்கப்பாதான் உன்னை கூப்பிடறாங்க பாரு..
                     கோபால் திரும்பி அவரைப் பார்த்து இருங்க வரேன் என்று சாடை காட்டிவிட்டு டீக்கடைகாரரிடம்
                     கோபால் -  அண்ணாச்சி ரெண்டு மெது வடையும் டீயும் அப்பாவுக்கு கொடுத்துவிடுங்க.. இந்தாங்க காசு..
                     டீக்கடைகாரர் ஒரு பையனிடம் இரண்டு வடைகளை மடித்துக்கொடுத்துவிட்டு டீயையும் கொடுக்கிறார். எடுத்துப்போகிறான்.

                    ராகவன் - உங்கப்பா கொஞ்சம் இளைச்சிருக்காங்க கோபால்..

                   கோபர்ல் - ஆமாம்..ரிட்டயர்டு ஆகிட்டாங்க.. ரிட்டயர்டு ஆனபிறகு சுகர் வந்துடுச்சி  ஆனா கண்ட்ரோலாக இருக்காங்க..சுகர்னா பசி பொறுக்காது..அதான் காலையிலே வெறும் வயிறா இருக்க வேண்டாம்னு இப்படி வடையும் டீயும் சாப்பிடுவாங்க.. வாங்கிக்கொடுத்துடுவேன்..

                    சாலையைக் கடந்து கோபாலின் அப்பா இவனை நோக்கி வருகிறார்.

                   ராகவன் - வாங்க அப்பா... நல்லாயிருக்கீங்களா?

                   கோபாலின் அப்பா - நல்லாயிருக்கேன் தம்பி.. நீங்க நல்லாயிருக்கீங்களா? என்று கேட்டுவிட்டு கோபால் பக்கம் திரும்பி... பணம் இருந்தா 20 ரூபா கொடேன்..

                   கோபால் எடுத்துக் கொடுக்கிறான். வாங்கிக்கொண்டு திரும்பிப் போகிறார்.

                   இருவரும் டீக்கடை விட்டு வெளியே வந்து நடக்கிறார்கள்.

                    கோபால் - சரி ராகவா கிளம்பறேன். பேப்பர் வாங்கிட்டு பால் வாங்கிட்டுப் போறேன்.. நாளைக்குப் பார்க்கலாம்.. மனச தளரவிடாதே..

                       ராகவன் - சரி பார்க்கலாம். நான் இப்படியே கிளை நுர்லகம் போயிட்டு வரேன்..

                        இருவரும் எதிரெதிர் திசைகளில் பிரிகிறார்கள்.

                   
                                                    காட்சி 2    கோபாலின் வீடு

                   ரஞ்சனி -  ஏங்க பனி ரொம்ப குளிரா இருக்குது,, பால குடுங்க.. புள்ளங்க டீ கேக்குது..இந்தப் பால்காரன் எட்டுமணிக்குத்தான் வரான்..

                 கோபால் - இந்தா...ராகவன்கிட்ட பேசிக்கிட்டிருந்தேன். அப்பா வந்தாங்க. எல்லாம் டீ சாப்பிட்டோம்.

                   ரஞ்சனி - பணம் கேட்டிருப்பாங்களே?

                  கோபால் - ஆமாம். கொடுத்தேன். பசி தாங்க மர்ட்டாங்கன்னு வடையும் டீயும் சாப்பிட்டாங்க..

                     ரஞ்சனி - அப்புறம் எதுக்கு பணம் வேற?

                    கோபால் - ஏதாச்சும் செலவு இருக்கும்,

                    ரஞ்சனி - வயித்துக்கு  தின்னா பரவாயில்ல,, வாங்கி லாட்டரி சீட்டு கிழிக்கிறாங்க.. அத விடமுடியல்லே,,, பேசாம அந்த டீக்கடையிலே மொத்தமா பணத்த கொடுத்துடுங்க..அவங்க எதுகேட்டாலும் கொடுக்கச் சொல்லுங்க.. பணமா கொடுக்காதீங்க.. கஷடப்பட்டு சம்பாதிக்கற இப்படி கொண்டுபோய் லாட்டரிசீட்டுலே விடறாங்க..ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கு மேல செலவழிக்கிறாங்க.. அதுமட்டுமில்லே,,, காசு இல்லன்னா கடன்வேற வாங்கறாங்களாம்...

                  கோபர்ல் - நீ சொல்றது நல்ல ஐடியா.. அப்படியே பணம் கொடுத்துடறேன்,,

                 
                                                        காட்சி மூன்று

                         (அதே கடைத்தெரு கோபாலும் அவ்ன் அப்பாவும்)

                கோபர்ல் -  டீ சாப்பிடுங்கப்பா...

                 அப்பா-        சாப்பிடறேன்.

                கோபால் -  அண்ணாச்சி மெதுவடையும் டீயும் கொடுங்க..

                     (சாப்பிடுகிறார். சாப்பிட்டுககொண்டிருக்கும்போதே,,)
               
                 அப்பா..  -   கோபர்ல் ஒரு ஐம்பது இருந்தா கொடு.. பென்ஷன் வாங்கி கொடுக்கறேன்..
           
                கோபால் - என்கிட்ட இல்லப்பா...நீங்க தினமும் இங்க அண்ணாச்சி கடையிலே வடையும் டீயும் சாப்பிடுங்க.. மூணு வேளையும் சாப்பிடுங்க.. நான் பணம் கொடுத்துடறேன்.. உடம்பு இளைச்சிருக்கீங்க.. உடம்ப பாத்துக்கங்கப்பா,,

                 அப்பா -   வேண்டாம்.. நீ தினமும் எனக்கு 20 ரூபா கொடுத்துடு...

                 கோபால் - வேண்டாம்பா.. எதுக்குப்பா லாட்டரி சீட்டு கிழிக்கிறீங்க?

                அப்பா... எவன் சொன்னான்.. எந்த நாயி சொன்னா... உன் பணம் வேண்டாம்...

                 கோபமாய் டீக்கிளாசை வைத்துவிட்டுப் போகிறார்.

                கோபால் - அண்ணாச்சி இந்தாங்க பணம் இத அட்வான்சா வச்சுக்கங்க.. எங்கப்பா வந்து எது கேட்டாலும் கொடுங்க.. கணக்கு வச்சிக்கங்க.. நான் மாசா மாசம் தரேன்..

                     சரி தம்பி..

                  மறுநாள் காலை

                   டீ சாப்பிடுறீங்களாப்பா?

                 வேண்டாம்.

                    பசியோட இருக்காதீங்கப்பா.. வடை சூடா இருக்கு... சாப்பிடுறீங்களா

                  வேண்டாம்னா விடு.. பணம் இருந்தா கொடு...

                  நான் பணம் எடுத்திட்டு வரல்லப்பா..


                   (இந்த மாறாத உரையாடல்களோடு நாட்கள் ஓடுகின்றன)


                                                    காட்சி மூன்று

                        (கோபாலின் அப்பா வீடு... நடுக்கூடத்தில் கோபாலின் அப்பா போட்டோ வைக்கப்பட்டு அதன் கீழாக வடையும் டீயும் வைக்கப்பட்டுள்ளது. மாலையிடப்ப்ட்டுள்ளது. வாழைப்பழத்தில் செருக்ப்பட்ட ஊதுபத்தியிலிருந்து வாசம் வீடெங்கும் பரவுகிறது. கோபாலின் அம்மா அழுதுகொண்டிருக்கிறாள். நாலைந்து உறவினர்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.)

                       அம்மா...  இப்படி சட்டுன உசிர விடும்னு நினைக்கலியே.. இப்படி என்ன தவிக்கவிட்டுட்டு போயிடிச்சே...

                      அக்கா -  அப்பாவுக்கு சுகர் ஏறினது தெரியாமப் போயிடிச்சி..

                    உறவினர் - ஏன் கவனிக்கலியா..மாமா ரொம்ப கவனமா இருப்பாங்களே,,,

                    அக்கா -  கோபால்தான் எப்பவும் சுகர் மாத்திரைக்குப் பணம் கொடுப்பான். இந்தத் தடவையும் வாங்கியிருக்காங்க.. ஆனா ஒரு மாத்திரையைக் கூட சாப்பிடலே..அதான் கோளாறாயிடிச்சி..

                   உறவினர் 2   அப்படியா,,, ஆனா என்கிட்ட ரொம்ப புலம்புவாரு,,, யாரும் கொடுத்து உதவலேன்னு...

                   அம்மா,,,  அத்தனை கோடி சம்பாதிச்சி.. எல்லாத்தையும் ஆளாக்கிவச்ச.. எல்லாம் நன்றி மறந்துடீச்சி,,,

                   (கோபாலைப் பார்த்தபடி மூக்கை உறிஞ்சி அழுதாள் அம்மா)

                   கோபர்ல் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தான். ரஞ்சனி சுவரோரம் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.

                 அம்மா.. காலையிலே கடைத்தெருவுக்கு போவாங்க.. ஒரு வடையும் டீயும் சாப்பிடுவாங்க.. அப்புறம்தான் எல்லாமும்.. அதையும் விட்டுடுச்சி.. அதுக்கு என்ன விசனமோ,,

               உறவினர்...  -  ஏன் சாப்பிடுறதில்லே,,,

                அம்மா ,-  சின்ன விஷயம்னாகூட பெரிசா நினைச்சி விசனப்படுவாங்க..
யாருக்கு என்ன பிடிக்கும்னு பாத்து பாத்து செய்வாங்க.. ஆனா அதுக்கு செய்யறதுக்கு ஆள் இல்லே...

                 உறவினர் 2 -  எல்லாருக்கும் கல்யாணம் செஞ்சாச்சு.. கடனும் கிடையாது,,, பென்ஷன் அப்புறம் என்ன கவலை?

                  அம்மா... அதுக்கு ஆயிரம் கவலைங்க...கோபாலு  எப்பப் பார்த்தாலும்  டீ சாப்பிடுறீங்களா? வடை சாப்பிடுறீங்களாப்பான்னு கேப்பானாம்,,  அத சொல்லி புலம்பியிருக்காங்க..

                  கோபால் நிமிர்ந்து அம்மாவைப் பார்த்தான்..

              அம்மா... ஒரு பெத்த அப்பனுக்கு சாப்பிடுங்கன்னு கையிலே கொடுக்காம சாப்பிடுறீங்களான்னு கேக்கறான்.. என்னத்த சொல்றது,, அதான் வேண்டாம்னு சாப்பிடறதில்லேன்னு... புலம்பியிருக்காங்க..

              அக்கா... எங்கப்பா ரொம்ப ரோஷக்காரங்க...

                        கோபால் அதிர்ந்துபோன்ர்ன். எதுவும் பேசத்தோணாமல். ரஞ்சனி அவனைப் பார்க்கிறர்ள்.. எல்லோரும் கோபாலைப் பார்க்கிறர்ர்கள். கோபால் அப்பா போட்டோவைப் பார்க்கிறர்ன்.

                                                       (நிறைந்தது.)