Wednesday, April 24, 2013

தொட்டி மீன்கள்......குறுந்தொடர்....3



                     தொட்டிமீன்கள்.....குறுந்தொடர்......  3




                 சொர்ணத்தாயி இப்படியொரு காட்சியை எதிர்பார்க்கவில்லை. அவளை மிஞ்சிய ஒருத்தி இப்போது மல்லுக்கு வந்திருக்கிறாள். எடுத்த எடுப்பிலேயே மயிறு அறுப்பேன் என்கிறாள். வாயாலே அறுத்தாலும் அறுத்துவிடுவாள் போலிருக்கிறது, நான் பொண்ணு பார்க்கப்போனது இவளுக்கு எப்படிதெரியும், மகனைத் திரும்பிப் பார்த்தாள். பொறுக்கி நாயிக்கு பொறுப்பு வரும்னு ஒரு காரியத்தை செய்ய நினைச்சா... இன்னொரு பொறம்போக்கு வம்புக்கு வந்து தெருகூடி நிக்குது,,,

                              என்னடி ஆத்தாவும் மவனுமா அப்படியே திக்கிச்சிப் போயிருக்கீங்க? இந்த நாதியத்தவளுக்கு எப்படித் தெரியும்னா,,,எல்லாம் உன்னோட பொசகெட்ட மவன்தான் சொன்னான்,,,

                             லோகநாதன் படியிறங்கி அவளை நெருங்கி,,, எதுக்குடி இங்க வந்தே?
                             பின்னே எங்க போறதாம்?

                            ஓங்கி அவளை அறைந்தான், யாரும் எதிர்பார்க்கவில்லை. அவளுடன் வந்திருந்த குழந்தை பயந்துபோய் அவள் பின்புறம் ஒளிந்தது,

                             சொர்ணத்தாயி அதிர்ந்துபோனாள்,

                             அடிய்யா அடி. என்ன கொன்னே போட்டாலும் சரி,, ஒரு நாயம் கிடைக்காம இங்கிருந்து போவமாட்டேன்,,

                               உனக்கென்னடி நியாயம் வேண்டியிருக்கு,,, மனையில உக்காந்து தாலிவாங்கிட்டு வந்தவ மாதிரி கேக்கறே,,,

                                சொர்ணத்தாயி மகன் மிதித்தாலும் பரவாயில்லை என்று அவளிடம் மல்லுக்கு நிற்க முடிவெடுத்து தெருவிறங்கினாள், அதற்குள் அக்கம் பக்கம் வீடுகளிலிருந்து பெண்களும் ஆண்களுமாக அவரவர் வீடுகளில் நின்றபடி லேசான கேலி சிரிப்புடன் அடுத்த காட்சியைக் காணும் ஆர்வத்துடன் நின்றுகொண்டிருந்தார்கள்,

                                  காலங்காலமாக இப்படியொரு கீழ்த்தரமான மிருக குணத்தோடே மனித இனம் அலைந்துகொண்டிருக்கிறது, எப்படா அடுத்தவீடு எரியும் வேடிக்கை பார்க்கலாம்னு,,, அந்தக் கொள்ளி தன் வீட்டுலே விழ ரொம்ப நேரமாவாதுன்னு நினைக்காம,,,

                                     போடி கம்னாட்டி நாயே,,, உனக்கு என்னடி கேள்வி வேண்டியிருக்கு,, போயிடு,, இல்லே அடிச்சே கொன்னுடுவேன்,,, என்றபடி கைலியை மடித்தபடி வலது காலை துர்க்கி அவளை உதைக்கப்போனான் லோகநாதன்,

                                    சற்று பின்வாங்கி... வா... வந்து உதை... உன்னோட அண்டி வந்ததுக்கு இன்னும் என்னெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கோ அனுபவிக்கிறோம்,,

                                 போடி பொறம்போக்கு நாயே,,, பத்தினி மயிறு மாதிரி பேசறே..

                                தெரிஞ்சுதானே வரே....லேசா இருட்டக்கூடாது,,, முட்டக் குடிச்சுப்புட்டு வாந்தியெடுக்கறதும் என் மடிதான்,,, வந்து படுக்கறதும் என் வீடுதானே,, அப்ப இனிக்குதா,,, அப்ப பத்தினி வீடு இல்லன்னு தெரியலியோ,, இல்ல நான் படிதாண்டா பத்தினின்னு போர்டு வச்சிருக்கேனா,,அவள் பேச்சு எல்லை மீறிக்கொண்டிருந்தது,

                                  ஊரே நோண்டுவா கெழவி.. பாரு இப்ப தெரு சிரிக்குது,

                                  நோண்டுறது மட்டுமில்ல,,, என்னமோ சத்தியவான புள்ளயா பெத்திட்ட மாதிரி அவனுக்குப் பொண்ணு தேடுவா பாரு,,,வர்ற ஜாதகத்த எல்லாம் அத்தனை நொட்டம் பேசுவா,,, அதான் நோண்டியெடுக்கிறா ஒருத்தி

                                   கெழவிக்கு நல்ல புள்ளங்க மட்டும் பொறந்திருச்ச அவள புடிக்கவேமுடியாது,,

                                   என்ன தான் பழகினாலும் எண்ணம் சரியில்லாதவ கெழவி,,, எவன் வீட்டுலே எழவு வுழுவும்னு சூனிய கண்ண வச்சிக்கிட்டு அலைவா,, ஆண்டவன் அவவீட்டுக்கு காலையிலே இவள அனுப்பியிருக்கான் பாரு சூனியம் வைக்க,,

                                  அந்த பொட்டப்புள்ளய பாரு அந்த லோகுபய சாடையா இல்ல,,

                                  அவனுக்குப் பொறந்ததுதான்,,, இல்லாட்டி இத்தனை உரிமையா இப்படி வந்து கத்துவாளா,,,

                                    பேசாம அவளுக்கே கட்டி வச்சிடவேண்டியதானே? ஒரு பொண்ணோட வாழ்க்கை அழிஞ்சதோட இருக்கட்டுமே,,,

                                   இத்தனை ஊழல வச்சிக்கிட்டு ஒண்ணுந் தெரியாதவமாதிரி கெழவி பொண்ணு தேடறா,, இன்னொரு பெண்ணோட வாழ்க்கையை அழிக்க,,, சகுனிதான்,,

                                 ஆளுக்காள் அவரவர் ஆத்திரத்தை சொர்ணத்தாயி மேல் கொட்டிக் கவிழ்த்தார்கள்.

                                   அதற்குள் மறுபடியும் லோகநாதன் கத்தினாள் அவளிடம்,

                                   மரியாதயா போயிடு,,,நாற மவளே,,,

                                   போவமுடியாது,,, எனக்கு ஒரு வழிய சொல்லு,,

                                   உனக்கென்னடி வழிய சொல்றது,, அதான் கேக்கற பணம் கிடைக்குதுல்லே,,

                                    எனக்கு அது வேணாம்,,

                                     வேறென்ன வேணும்டி?  சொர்ணத்தாயி குறுக்கே புகுந்தாள் ஆத்திரமாக,

                                       உன்ன யாருடி கேட்டா பஞ்சாயத்து,, உம்மவனுக்கு எனக்கும் உள்ள பிரச்சினை இது,, நானே பேசி தீர்த்துக்கறேன்,,

                                       லோகநாதனைப் பார்த்து நீ வேற கல்யாணம் பண்ணிக்கக்கூடாது,,

                                        அத சொல்ல உனக்கு என்னடி உரிமையிருக்கு,

                                       நான் செய்ய வுடமாட்டேன்,, எனக்கும் என் புள்ளங்களுக்கும் வாவு வழி வேணும்,,

                                         அத எவன்கிட்டே படுத்து பெத்தியோ அவன்கிட்ட கேளு,,

                                         அது முடிஞ்ச கதை,, இனிமே நீதான் எல்லாம் செய்யணும்,, முடிவோடு பேசினாள்,

                                         இந்த அசிங்கத்தை தெரு கண் இமைக்காமல் பார்த்து காதாறக் கேட்டு நின்றது,

                                         சொன்ன கேக்க மர்ட்டேடி நீ,, என்றபடி லோகநாதன் அவள் மயிரைக் கொத்தாக் பிடித்து இழுத்து தரையில் தள்ளி அப்படியே இடுப்பில் மிதித்தான், அய்யய்போ கொல்றானே,, கொலைகார கம்னாட்டி,,, பாவி,,பாவி,,, என்று கத்த கத்த மறுபடியும் மறுபடியும் மிதித்தாள்,

                                      அவள் வலி தாங்காமல்  எழுந்தாள், ஓடிவந்து மறுபடியும் ஓங்கி உதைவிட அப்படியே சரிந்தாள், அவளின் பிள்ளை பயங்கர குரலெடுத்து அழுதபடியே ஓட ஆரம்பித்தது, எங்கடி போற என்றபடி,, சட்டென்று எழுந்து தலையைப் பின்னி கொண்டைபோட்டபடியே சுற்றுமுற்றும் பார்த்தாள், பக்கத்தில் செங்கல் ஜல்லிகள் கிடந்தன, அவற்றை எடுத்து சரமாரியாய லோகநாதனைப் பார்த்து வீசினாள், சொர்ணத்தாயி மேல் நாலைந்து கற்கள் விழ வீட்டிற்குள் ஓடினாள்,

                                     குடிகார கம்னாட்டிபய மவனே,, உனக்குத்தான் அடிக்கத் தெரியுமா? கொன்னுடுவேண்டா,, உன்னை,, சாவுடா,,, இன்னொருத்தி வந்துடுவாளா,, ஆயி மவனையும் இங்கேயே வெட்டி புதைச்சிடுவேன்,, பொம்பளன்னா அவ்வளவு இளக்காரமா,, போனாபோவுதுன்னு பேசினா,,  அடிப்பியா,, நீ,,, மரியாதையா சாயந்தரம் வீந்து சேரு,,, எனக்கும் என்னோட மவளுக்கு ஒரு வாவு வழி வேணும்,, அதைவுட்டுட்டு ஆயியும் மவனும ஏதாவது கோக்குமாக்கு பண்ணனா,, வவுந்துடுவேன்,,நீ ஒருத்தன் இல்லே,, புதுசா பாக்கறது,,  உனக்கு முன்னால எத்தனையோ பேர பாத்தவ நானு,,

                                காதுகொடுத்து கேக்க முடியல்லே,,

                                வீட்டு வாசப்படியெங்கும் செங்கல் ஜல்லிகள் இறைந்து கிடந்தன, லோகநாதன் மூக்கின் மேல்,,, நெந்றியில்,, முன் உதட்டில்,,, நெஞ்சுப்பகுதியில் என லேசான சிராய்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தது,

                                 வேகமாக உள்ளே போய் ஒரு மூங்கில் குச்சியை எடுத்துக்கொண்டு வேகமாக வெளியே வந்தான் அவளை அடிப்பதற்கு, அதற்குள் அவள் அழுதுகொண்டே ஓடும் மகளைத் துரத்தியபடி தெரு முனைக்குப் போயிருந்தாள்,

                                    அசையாமல் அத்தனையையும் தெரு பார்த்துக்கொண்டிருந்தது,

                                    கெழச் செறிக்கிபய மவளே,,   உன்னாலதாண்டி இத்தன அவமானம்,, என்றபடி அதே குச்சியுட்ன் லோகநாதன் உள்ளே போக,, சொர்ணத்தாயியின் அலறல் சப்தம் கேட்டது,


                                                                                                     (மீன்கள் துள்ளும்)

                       
                                         ..