Tuesday, October 15, 2013

நத்தையோடடுத் தண்ணீர் .....விமர்சனம்..


அன்புள்ள 

                        வணக்கமுடன் ஹரணி.


                       என் நுர்லான நத்தையோட்டுத் தண்ணீர் பொதுவான நமது விழுமியங்களின் தன்மைகளை நினைவில் தக்க வைக்கும் முயற்சியாக 14 கட்டுரைகளைத் தாங்கியதாகும். இதுகுறித்து பலரும் பல விமர்சனங்களை

முன்வைக்கும் சூழலில் அவர்களின் கருத்திற்கேற்ப மறுபடியும் பல சேர்க்கைகளுடன் மறுபதிப்பிற்காக அச்சில் இருக்கிறது. முதலில் அச்சிட்ட படிகள் (100 படிகள்) தீர்ந்துவிட்டபடியாலும். 

                         ஒவ்வொரு விமர்சனமும் எனக்குப் பெருமையானது. மதிப்பிற்குரியது. என்மேல் அவர்கள் கொணடிருக்கும் அன்பின் விளைவர்ல் விளைவது. அவற்றைப் பொன்னேபோல் போற்றி வைத்திருக்கிறேன். அதேசமயம் அவற்றை மற்றவர்களும் படிக்கப் பதிவிட்டும் வருகிறேன்.

                       தற்போது என்னுடைய சமகால எழுத்தாளன். நண்பன். சகோதரன் இப்படியும் இதற்குமேலும் சொல்லும் பேரன்பிற்குரியவன் மதுமிதா என்கிற பொன். சந்தானகிருஷ்ணன். பள்ளியில் தொடங்கிய நட்பு கல்லுர்ரி முடித்தும் வேலைக்குச் சென்றும் இன்றுவரை குடும்ப நட்பாக அன்புச்சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறது அது. 


                        திரு சந்தானகிருஷ்ணனின் மாமியார் மரியாதைக்குரிய திருமதி ஆர். மங்கையர்க்கரசி நல்ல படிப்பாளி. அதேசமயம் விமர்சகரும்கூட. என்னுடைய நத்தையோட்டுத் தண்ணீரை வாசித்தவுடன் கைபேசியில் பேசினார்கள். என் நுர்ல் குறிதது அவர்கள் விமர்சனம் எழுதியனுப்புவதாகச் சொன்னார்கள். அவசியம் தாருங்கள் அது எனக்கு மிகவும் பெருமையானது என்று கூறினேன். உங்களுக்கு என்ன தோணுகிறதோ அதை அப்படியே உள்ளது உள்ளபடியாகத் தாருங்கள் என்றேன். இன்றைக்குத் துர்து அஞ்சலில் அனுப்பியிருந்தார்கள். அதை அப்படியே இங்கே பதிவிடுகிறேன். 


                      அதே தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.


////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

ஆர். மங்கையர்க்கரசி

                      பெருமதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய திரு ஹரணி அவர்களுக்கு
வணக்கம்.

                      தங்களின் உன்னத படைப்பான நத்தையோட்டுத் தண்ணீர் என்னை மிகவும் ஈர்த்துள்ளது. முக்கியமான காரணங்களில் ஒன்று வாசிப்பு - அது என்றென்றும் சுகமானது எனக்கும்,

                     திருவள்ளுவரின்  துணைவியார் வாசுகி அம்மையாரின் சிறப்பியல்புகளையும் நத்தை ஓட்டுத் தண்ணீரும் ஊசியும் எதற்காக உணவு உண்ணும்போது வைக்கப்பட்டது என்பது பற்றிய விளக்கங்களையும் எனது தந்தையார் எங்களுக்கு விளக்கியுள்ளார். மேலும்  அவரும் சாப்பிடும்போது ஒரு கிண்ணத்தில் வைத்துள்ள தண்ணீரில் சிதறிய பருக்கைகளை சுத்தம் செய்து மோர் சாதம் சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிடுவார். அவரது குதிங்காலிலும் வெடிப்பின்றி சுத்தமாகவே இருந்தது இறுதிவரை. தங்களின் வழிகாட்டிகள் படிக்கும்போது என் தந்தையை நினைவுபடுத்தி கண்களில் நீரை வரவழைத்தது,

                  அதுபோன்றே எனது மதிப்புமிக்க ஆசிரியர் திரு நாராயணசாமி அவர்கள் என்னைத் தனது சைக்கிளில் வைத்து அழைத்துச்சென்று உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்க எனது பெற்றோருடன் போராடி வெற்றி கண்டார். அன்று அவரின் பேருதவி இல்லையேல் இன்று நான் பட்டதாரி ஆகியிருக்க முடியாது.

                   எனது தாய்மாமா திரு அகிலன் அவர்களின் துர்ண்டுதலால் புத்தகங்கள். கவிதைகள் படிக்கும் பழக்கமும் கடிதம் எழுதும் முறையையும் கற்றுக்கொண்டேன், மகிழ்ச்சி-யில் ச் என்ற எழுத்தை எழுதாமல் இருந்த எனது கடிதத்தின் பிழையை கடிதம் மூலமாகத் திருத்தியவர். மேலும் முறையே என்ற சொல்லையும் பயன்படுத்தப் பழக்கியவர் அவரே. என் வாழ்க்கையிலும் பலர் வழிகாட்டிகளாக இருந்துள்ளனர். எனது பொக்கிஷங்களில் இடம் பெற்றுள்ளது இவரின் கடிதங்களும்.

                 உதவும் உள்ளங்கள் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் நீதி போதனையின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்துள்ளேன்.

                 சபை நாகரீகம். நீதிபோதனை போன்றவைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது என்போன்ற வாசகர்கள் பலரின் எண்ண எழுச்சியாக உள்ளது. அர்ப்பணிப்பு இல்லாத வாழ்க்கை சீர்மை பெறுவது இல்லை அல்லவா?

                தமிழார்வமும் சமூக சிந்தனையும் மிகப் பெற்றத் தங்களுடன் உரையாடவும். சந்தித்துப்பேசவும் வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்வேன். நம் சமூகத்தைச் சீர்படுத்தத் தங்களின் நத்தையோட்டுத் தண்ணீர் பயன்படும் என்ற நம்பிக்கையுடனும் மகிழ்வுடனும்,

                                             ஆர். மங்கையர்க்கரசி  11/10/13,


என் குறிப்பு

                        ஒரு படைப்பாளனுக்கு இதைவிடவா விருது வேண்டும்?
சரியான இலக்கில் அந்த படைப்பாளன் இந்த சமுதாயத்தில் பயணிக்கிறான் தன் எழுத்துக்களுடன் என்கிற அங்கீகாரம் சரியாகப் புரிந்துகொள்ளப்படும் போது ஏற்படும் மகிழ்ச்சியும் நிறைவும் விட  உயர்ந்தவை எதுவும் உண்டா?