Friday, February 10, 2012

அன்பின் தொடர் பகிர்வு



அன்பின் விருது




         
              அன்புள்ள...

                                        உறரணியின் பணிவான வணக்கங்கள்.

                                        லீப்ஸ்டர் பிளர்க்

                                        இது ஒரு ஜெர்மானிய விருதாகும். இதன் பொருள் மிகவும் பிடித்த - என்பதாகும்.  இந்த விருதை பெற்றவர்கள் தங்களுக்குப் பிடித்த 7 விஷயங்களைக் குறிப்பிட்டு இவ்விருதைத் தங்களுக்குப் பிடித்த 5 பதிவர்களுக்குப் பகிர்ந்துகொளள்வேண்டும். இது தெரியாமல் நான் இரு தினங்களைக் கடத்திவிட்டேன். எனக்கு விருதைப் பகிர்ந்துகொண்டவர்கள் பதிவுகளில் சென்றுபார்க்கும்போதுதான் இவ்விவரம் எனக்குப் புரிந்தது (முன்ன பின்ன விருது வாங்கியிருந்தால்தானே?) எனவே இதனைத் தாமதமாகப் பகிர்வதற்கு எனக்கு விருது வழஙகியவர்களும் விருதைப் பகிர்ந்து கொள்ள இருப்பவர்களும் பொறுத்துக்கொள்க.

                                       பகிர்வதற்கு முன்னர் இதனை எனக்குப் பகிர்ந்தவர்களுக்கு மீண்டுமொருமுறை எனது அன்பின்நிறைவாய் நன்றிகள்.

                                       நான் இவ்விருதைப் பகிர்ந்துகொள்ளவிருக்கும் பதிவர்களுக்கு இரண்டு அன்பான வேண்டுகோள்கள்.

                                  1, கணிப்பொறியின் தொழில்நுட்பம் எனக்கு இன்னும் நிறைய பிடிபடவேண்டியுள்ளதால் தயவுசெய்து இவ்விருதைத் தாங்களே காப்பி செய்து உங்கள் பதிவுகளில் இட்டுக்கொள்ள வேண்டுகிறேன்.

                                 2, இவ்விருதை அன்புடன் ஏற்கவும் வேண்டுகிறேன்.

                                 நன்றிகள்.


                               எனக்குப் பிடித்தவை ஏழு.

                               1. கடைசிவரை நண்பனாய் இருந்து இறந்துபோன
                                   அப்பா.

                                2. எப்போதும் இடையூறில்லாமல் வாசித்தல்.

                               3. என்னுடைய படைப்புலகில் தடையில்லாமலும
                                   எப்போதும் உதவவும் காத்திருக்கும் என் மனைவி
                                   என் மகன்.

                               4. அதிகாலை ரயில் பயணத்தில் எல்லோரும் உறங்க
                                    நான் மட்டும் விழித்திருந்து அனுபவிக்கும் அந்த
                                    தனிமை
.
                               5. கடவுள் வழிபாடு,

                               6.. குழந்தைகள்.

                               7.  தமிழ்மொழியின் இலக்கியங்கள்.


                    பகிர்தல் நேரம்


                      1,  எல்லாவற்றையும் கடந்து இன்றுவரை சிறு முரணும்
                           இல்லாமல் என்னோடு படைப்புலகில் நட்புகாட்டிவரும்
                           என் நண்பன்...உடன்பிறவா சகோதரன்...உணர்வான
                           எழுத்துக்களுக்குச் சொந்தக்காரன்....
                                                                          நண்பன் மதுமிதா - க்கு..



                       2.  இடைவிடாமல்...துவண்டுவிடாமல்...அப்படி நாங்கள்
                            துவள்கிற  தருணங்களில் உரையாடி,,தன்னுடைய
                            பன்முகத் திறனால்  பளிச்சென்று,,,உறவுகளை
                            மேன்மையுறச் செய்யும் படைப்பாளி..                          
                            என் உடன்பிறவாச் சகோதரன் ரிஷபனுக்கு...
                             
                       3. பழக ஆரம்பித்தது ஒருசில வருடங்கள் என்றாலும்
                            மனதிற்குப்  பிடித்த அதேசமயம் தெரியாத புதுமை
                            களைப்   பகிர்ந்துகொள்ளும் தோழர் இரா.எட்வின்
                           அவர்களுக்கு...

                       4. கவிதைகளில் ஒரு உயிர்ப்பும்...உணர்வும்...சொல்
                           தேர்வும்,,  மனதிற்கு இதமும்....ஆழமும் என
                            இயங்கிக் கொண்டிருக்கும்  சைக்கிள் மிருணாவிற்கு...

                       5. பணியோய்விற்குப் பின்பும் படைப்புலகில் பல்
                           வகையான  சுவையான பதிவுகளை அள்ளித்தரும்
                           வைகோ என்றழைக்கப்படும் வை. கோபாலகிருஷ்ணன்
                          அவர்களுக்கு...

 
                          அனைவரும் என் அன்பின் விருதைப் பகிர்ந்துகொள்கிறேன்.

                          இந்த வாய்ப்பை உருவாக்கியவர்களுக்கு மறுபடியும் நன்றிகள்.




                       

7 comments:

  1. தங்களின் மூலம் இந்த விருதினை மீண்டும் ஒரு முறை பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஐயா. மிக்க நன்றிகள்.

    நான் இதற்கு தங்களுக்கு நன்றி தெரிவித்து நாளைய 11.02.2012 இரவு ஓர் தனிப்பதிவு வெளியிடுவதாக உள்ளேன்.

    அதற்கிடையில் இந்த இணைப்பையும் தாங்கள் பார்க்க வேண்டுகிறேன்:
    http://gopu1949.blogspot.in/2012/02/hattrick-award-of-this-february-first.html

    அன்புடன் vgk

    ReplyDelete
  2. //அதிகாலை ரயில் பயணத்தில் எல்லோரும் உறங்க நான் மட்டும் விழித்திருந்து அனுபவிக்கும் அந்த தனிமை//

    நல்ல ரசனை உங்களுக்கு... பெரும்பாலான பயணங்களில் எனக்கு தூக்கமே வருவதில்லை - வரக்கூடாது என்ற எண்ணமும் உண்டு...

    தங்களுக்குக் கிடைத்த விருதிற்கு வாழ்த்துகள். தங்கள் மூலம் விருது பெறும் நண்பர்களுக்குப் பாராட்டுகள்....

    ReplyDelete
  3. உங்க‌ளுக்குப் பிடித்த‌ ஏழும் மிக‌ உன்ன‌த‌மான‌வையாக‌ உள்ள‌ன‌. வாழ்த்துக‌ள்... த‌ங்க‌ளுக்கும், த‌ங்க‌ள் மூல‌ம் விருது பெற்ற‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கும்!!

    ReplyDelete
  4. நான் என் பதிவில் கூறி இருந்தபடி உங்களுக்கு அளிக்கப் பட்டதில் இந்த விருதுகளும் பெருமை பெறுகின்றன. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. ஐயா வணக்கம். என் பதிவொன்றில் தாங்கள் கொடுத்த விருதுக்கு நன்றி கூறி எழுதியுள்ளேன். தாங்கள் தயவுசெய்து வருகை தாருங்கள் ஐயா. இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_11.html

    ReplyDelete
  6. சரியான விருது, தகுதியான நபரை தேடி வந்தடைந்திருக்கிறது.தங்களை வாழ்த்துவதில் பெரிதும் மகிழ்கின்றேன்.

    ReplyDelete
  7. தங்களுக்கும் தங்களால் விருது பெற்றவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஹரணி சார்.

    ReplyDelete