Saturday, August 10, 2013

கொஞ்சம் கவிதைகள்......




                     அகன்ற தெருக்கள்
                     அடர்ந்த மரங்களின் நிழல்கள்
                     அகன்ற உயர்ந்த
                     பாதுகாப்புச் சுவர்கள்
                     பெரிய பெரிய பங்களாக்கள்
                     எப்போதும்
                     கேட்டுக்கொண்டேயிருக்கின்றன
                     குரைப்புகள்
                     கடக்கும்போதெல்லாம் அவற்றை...
                     விரட்டலுக்காக? விடுதலைக்கா?

                     0000


                     நிறைய மழை
                     நிறைய சோர்வு
                     நிறைய இருட்டு
                     நிறைய பேச்சுக்கள்
                     நிறைய சப்தம்
                     கண் செருகுகையில்
                     இறங்கவேண்டிய சந்திப்பிற்குள்
                     நுழைகிறது  ரயில்
                     இதையாவது எழுது என்று
                     கத்திவிட்டோய்கிறது
                     காலடியில் சிறுநதியான மழை
                   

                     00000


                     அவனுக்கு
                     எதுவும் தெரியாதென்பதை
                     உரத்துச் சொல்லிக்
                     கெர்ண்டிருக்கிறான்
                     எதுவாயினும் தெரியுமெனக்கு
                     என்பதை மௌனமாக
                     சொல்லிக்கொண்டிருக்கிறேன்
                     நான்.
                     அவனுக்கான காதுகள்
                     நீண்டுகொண்டேயிருக்கின்றன
                     எனக்கான காதுகளையும்
                     அறுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.


                      0000



                      நம்பிக்கையை
                      ஊசியைப்  போலவும்
                      உழைப்பை
                      நெருப்பைப் போலவும்
                      பயன்படுத்துங்கள்
                      எப்போதும் ஆபத்தில்லை
                      எப்போதும்...

                     000000000
     

                  

5 comments:

  1. நாலு கவிதைகளும் அருமை, ஐயா. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    இரண்டும் நாலும் எனக்கு மிகவும் பிடித்துள்ளன. ;)))))

    ReplyDelete
  2. நம்பிக்கையை
    ஊசியைப் போலவும்
    உழைப்பை
    நெருப்பைப் போலவும்

    அருமையான வரிகள் ஐயா

    ReplyDelete
  3. அனைத்தையும் ரசித்தேன்....

    //நம்பிக்கையை
    ஊசியைப் போலவும்
    உழைப்பை
    நெருப்பைப் போலவும்
    பயன்படுத்துங்கள்
    எப்போதும் ஆபத்தில்லை
    எப்போதும்...
    //

    மிகவும் ரசித்த கவிதை....

    ReplyDelete
  4. நான்கும் அருமை. நாயின் குரைப்பு வித்தியாசமான முகத்திலறையும் சிந்திப்பு. கடைசி மிகவும் பயனான அறிவுரை. பயணம் தான் எப்படியெல்லாம் படைப்பாளியை கூர் தீட்டுகிறது! நீண்டு கொண்டிருக்கும் காதும் அறுக்கப் படும் காதும் யோசிக்க வேண்டிய சோகம்.

    ReplyDelete