Friday, January 20, 2012

பேருந்து (நாவல்)



                          வணக்கம்,  நான் பதினைந்து ஆண்டுகளாகத்  தஞ்சையிலிருந்து சிதம்பரம் வரை பேருந்துகளிலும் புகைவண்டிக்ளிலும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

                           இப்படிப் பேருந்தில் பயணித்ததில் போகப்போகப் பழக்கமானவர்கள் பலபேர். அவர்களில் சிலரே மனதைக் கவர்ந்தவர்கள். அவர்களோடு பிணைந்த என்னுடைய தினசரி வாழ்வையும் இணைத்துதான் இந்த பேருந்து நாவலை யோசித்தேன்.  இந்நாவலை எழுதத்தொடங்கி ஆறுமாதங்கள் ஆகிவிட்டன. பாதிதான் முடிந்திருக்கிறது. தொடர்ந்துகொண்டிருக்கிறது.

                         இதற்கிடையில் இந்நாவலை உங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என்றாலும் கொஞ்சம் தயக்கமிருந்தது. இணையத்தில் வலைப்பக்கத்தில் ஒரு நாவலை வாசிக்கிற அளவுக்கு பொறுமையிருக்குமா என்று. இருப்பினும் துணிவோம் என்று துணிந்ததுதான் இப்பதிவை. வாரமொருமுறை ஒரு அத்தியாயமாக இதனை எழுதலாம் என்று.  உங்கள் கருத்துக்கள் எதுவாயினும் பகிர்ந்துகொள்ளுங்கள் அது நாவலாக முழுமைபெறும்போது தனித்துவம் அடையும்.

                      வாசிக்கப்போகும் அனைவருக்கும் நன்றிகள்.


                             00000

                                             முதல் அத்தியாயம் - வெள்ளைக்குதிரை


                       அன்று வெள்ளிக்கிழமை.

                       பிறந்தது முதல் 30 ஆண்டுகள் வரை எந்த ஊருக்கும் தொடர்பயணம் மேற்கொண்டது இல்லை.

                       மனதிற்குள் கல்லுர்ரி ஆசிரியனாகவேண்டும் என்கிற கனவு சுடராய் எரிந்துகொண்டிருந்தது கண்ணாடிக்குள் ஏற்றிவைத்ததுபோல அசையாமல்.

                        அதன் இதமான வெப்பம் இதயத்தின் கனவுகளை உறங்கவிடாமல் செய்துகொண்டிருந்தது,

                        நினைத்ததுபோலவே ஒரு தமிழாசிரியர் பணி அமைந்தது,

                       மானிடவ்ர்க்கென்று பேச்சுப்படின் வாழ்கில்லேன் என்ற ஆண்டாளின் வைராக்கியமாய் எப்படியும் கல்லுர்ரிப் பணிக்கு சென்று தீரவேண்டும் என்கிற முனைப்பில் வெற்றிகண்டது ஒரு போரை எதிர்கொண்டு வெற்றிபெற்றதைபோல உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது,

                       தஞ்சாவூரிலிருந்து சிதம்பரம் பேருந்தில் 4 மணிநேரப் பயணம். மிகமிக அலுப்பூட்டும் பயணம்.

                      வேறு வழியில்லை. கிடைத்தது கிடைக்கவேண்டுமென்றால் சில துன்பங்களைச் சகித்துக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தையும் ஏற்கத்தான் வேண்டும், ஏற்றுக்கொண்டேன்.

                       காலையில் எல்லோரும் கண்உறஙகும் சுகமான பொழுதில் கண்களில் இருந்து துர்க்கத்தைப் பிய்த்து எறிந்து சடசடவென உடலில் குளிர்ந்த நீரை ஊற்றி அவசரஅவசரமாய் கிளம்பி பேருந்து நிறுத்தத்திற்கு வரவேண்டும். 6.10 க்கு அந்தப் பேருந்து வரும் என்றார்கள். பாய்ண்ட டூ பாய்ண்ட் பேருந்து அது. குறிப்பிட்ட நிறுத்தங்கள்தான். நன்றாக விரைவாக செல்லும் என்று ஏற்கெனவே பயணிக்கும் நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். 6.10க்கு ஏறினால் கண்டிப்பாக 9.20க்கு சிதம்பரம் பேருந்துநிலையம் சென்றுவிடும்.

                       அகலமான வெள்ளை நிறப் பேருந்து அது. பார்க்க அழகாக இருக்கும். நீரோடை போன்ற எழுத்துக்களில் அதன் முகப்பில் வொயிட் உறார்ஸ்  (வெள்ளைக் குதிரை) என்ற எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருந்தன. பெயர் வைத்தவர்கள் ரசனையான ஆளாக இருக்கவேண்டும்.

                       காலையில் சிலீரென்ற காற்று முகத்தில் அறைய முன்புறம் வைத்தியநாதன் பேட்டை செல்கிற நகரப்பேருந்து வர துர்ரமாய் வெள்ளைக் குதிரையின் முகம் தெரிந்தது.

                       நகரப்பேருந்தைக் கடக்கமுயல்கையில் ஓடிச்சென்று கைகாண்பிக்க சற்று துர்ரமாய் போய் கணேசபவன் ஹோட்டல் அருகில் சிறு சப்தமுடன் பிரேக்கை அழுத்த நின்றது. ஓடிப்போய் ஏறினேன்.

                        எங்க சார் போகணும்?  கண்டக்டர் படியிலேயே நிறுத்திக் கேட்டார்.

                        சிதம்பரம் போகணும்.

                       வாங்க உள்ளே

                        உள்ளே போனேன், எங்கும் இடம் இல்லை. கண்டக்டர் இருக்கையைத் தவிர. டிக்கெட்டை வாங்கிக்கொண்டதும் கண்டக்டர் சொன்னார், சார் போய் என் சீட்டுலே உக்காருங்க. கண்டக்டர் முகத்தைப் பார்த்தேன். நீண்ட நாள் பழகிய முகம்போலத் தோணியது, அவருக்கு நன்றி
சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்தேன். டிரைவர் இளம் வயதினராக இருந்தார். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்ததுபோல இறுக்கமான முகம், நேராக சாலையைப் பார்த்துக்கொண்டிருந்தது, கைகள் ஸ்டியரிங்கை அழுந்தப் பிடித்துக் கொண்டிருந்தது,

                           நான் தயக்கமுடன் முகத்தை எதிரே போகும் சாலையைப் பார்த்தபடி திருப்பி வைத்துக்கொண்டேன்,

                          வண்டி ஓரே சீரான வேகத்தில் அதேசமயம் குலுங்கல் இல்லாமல் அழகாக ஓடியது மனதுக்கு இதமாக இருந்தது,

                          கும்பகோணம் பேருந்து நிலையத்திற்குள் புகுந்து சிதம்பரம் பேருந்துகள் செல்லும் கட்டையில் நின்றது, வண்டியை நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கினார், கண்டக்டரும் இறங்கினார், டிரைவர் ஒவ்வொரு டயராகத் தட்டி காற்று போதுமானதாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு வாப்பா என்று கண்டக்டரைப் பார்த்து கூப்பிட கண்டக்ட்ர் என் பக்கம் திரும்பி சார்,,,வாங்க டீ சாப்பிடலாம், 7.25க்குத்தான் டயம்போட்டிருக்கு,
,
                            நான் இறங்கிப்போனேன்,

                           எங்க சார் வேலை பாக்கறீங்க?

                            சொன்னேன்,

                             நானும் தஞ்சாவூருதான், மேலவீதியில இருக்கேன் சார், நீங்க?

                             நான் கரந்தை என்றேன்,

                             தினமும் போவீங்களா?

                            ஆமா?

                            நம்ப வண்டி ரெகுலர்தான்,  நான் திங்கள் புதன் வெள்ளி வருவேன் சார், எதிர்பக்கம் டிரைவர் கண்டக்டரும் நம்ப ஆளுங்கதான், சொல்லி வச்சிடறேன்,

                            டீக்கு நான் காசு கொடுத்தேன்,

                            சார்,, விடுங்க நான் கொடுக்கறேன்,

                            பரவாயில்ல நான் கொடுக்கறேன், கொடுத்து மீதி சில்லறை வாங்கினேன்,

                            டிரைவர் பேர் பாண்டியன், கண்டக்டர் பேர் ஜெயக்குமார் என்று அறிமுகம் நடந்தது, டிரைவரின் முகத்தில் இறுக்கம் லேசாகக் குறைந்ததுபோல இருந்தது,

                             மறுபடியும் வண்டி எடுத்து சிதம்பரம் சாலையில் திரும்பியது, திருபுவனம் தாண்டி திருவிடைமருதுர்ர் வளைவில் திரும்பியபோது வெடிவெடித்ததுபோல ஒரு சப்தம் கேட்டது, கூடவே ம்மா,,, என்ற குரலும்,

                            துர்க்கிவாரிப்போட்டது எனக்கு, பாண்டியன் வண்டியை சட்டென்று நிறுத்தினார், துர்ரத்தில் வயல்களிலிருந்து அருகிருந்த வீடுகளிலிருந்து ஆண்களும் பெண்களுமாக ஓடிவருவது மேலும் அதிர்வை உண்டாக்கியது,

                                                                                            (பேருந்து ஓடும்)
                       

Thursday, January 19, 2012

தேநீர்க் கவிதைகள்



                 ஒன்று

                  வேலையற்ற முந்தைய
                  வரலாற்றின் பக்கங்களில்
                  தேநீருக்குத்தான் இடம்...

                   ஒவ்வொரு நண்பனுக்காகக்
                   காத்திருக்கும ஒவ்வொரு



                    தருணத்திலும்
                   ஒவ்வொரு தேநீர்...

                    ஒரு நாளின் தனிமையைத் தணித்தது
                     காசில்லாத வறுமையை அணைத்தது
                     வேலை கிடைத்துவிடும்
                     நம்பிக்கையை சூடேற்றி வைத்தது
                     யாருமற்ற தருணங்களில்
                     தேநீரோடு உதடுகள் பேசியதை
                     உள்வாங்கி இதயம் பேசியவை ஏராளம்...

                     வாழ்வை வெல்வது குறித்து
                     தேநீரோடுதான் பேசினோம்...
                     ஒரு நாளின் முபபது தேநீர் குடித்து
                      முப்பது ஞானம் பகிர்ந்தோம்....

                      இப்போது தேநீர் குடிக்கும்போதெல்லாம்
                      அந்த வரலாற்றின் சூட்டை
                      உதடுகள் இதயத்திடம் சொல்லிக்
                      கொண்டுதான் நாளை கழிக்கிறது...

                      00000
                        000
                          0

                       இரண்டு

                     
                        தேநீர்க் குடித்து பழகிய நாளில்
                        அப்போதெல்லாம் 25 காசுதான் தேநீர்
                        அதுவுமில்லாமல் இருந்த நாளில்தான்
                        நண்பன் அழைத்தான் தேநீர்குடிக்க
                        குடித்ததும் சொன்னான்
                        யாருக்காவது தினமும் டீ வாஙகிக்குடித்து
                        தொலைக்கவேண்டியுள்ளது
                        என்ற நண்பனின் அவமானத்தை
                        இன்றுவரை சுமந்திருக்கிறேன்
                        தேநீர் குடிக்கும் தருணங்கள்தோறும்...

                        000000
                          000

                         மூன்று


                          நாயர் கடையில்
                          அப்பம் அல்லது மெதுவடை
                          (சிறுவெங்காயம் மிதக்கும் மெதுவடை)
                          அப்புறம் தேநீர்..
                          அந்தச் சுவை இன்றும்
                          நினைத்தாலே இனிக்கிறது
                          பேருந்து செல்லும் சாலையோரம்
                          கடை வைத்திருந்த நாயர்
                          இந்த பொழப்பு போதும் பிழைக்கமுடியவில்லை
                           என்று கேரளத்திற்குத் திரும்பிபோன
                          பிறகும்கூட...

                          000000
                            000

                           நான்கு...

                            ஒவ்வொரு கடையில் ஒவ்வொரு தேநீர் ரகம்
                            எப்போதும் கூட்டம் முண்டும் கடையில்தான்
                            அருந்தவேண்டும்.. அவன்தான் துர்ளை மாற்றுவான்,,



                            ராஜாங்கத்துக் கடையில்
                            ஆள் பார்த்து துர்ள் மாற்றுவார்
                            சர்க்கரை துர்க்கலாக இருக்கும்..
                           கூடுதலாக இலங்கை வானொலி....

                             சாந்தி டீ சென்டரில்
                             டேப்ரிக்கார்டர் உண்டு அல்லது
                             சின்ன ஆம்ப்ளிபயர்
                             வைரமுத்து பாடல்கள் நேயர் விருப்பமாய்
                             கூடவே 50 கிராம் பக்கோடா அல்லது வறுத்த
                             பொட்டுக்கடலை
                             சாப்பிடவேண்டும்,,
                             டிகாசன் அதிகமாக இருக்கும்,, கொஞ்சம் கசப்பும்,,
                             சமயங்களில் வெள்ளையாக பால் டீ,,,

                             திருவள்ளுவர் பேருந்துநிலையத்தில்
                             கண்ணாடிக்குவளையை வெந்நீரில் கழுவி
                             கொஞ்சமாக தேநீர்,,,நாக்கு சுவைக்கலையும் ர்,,,

                             ரயிலடி அருகே மசால் டீ கிடைக்கும்
                             வெங்காய பஜ்ஜி அல்லது மசால் வடையுடன்,,

                             அம்மா போட்டால் 100 பாலில்
                              பத்துபேருக்கு கலர் வெந்நீர் தேநீர் ஆனால்
                             அதில அம்மாவின் அதட்டலும் கூடவே பாசமும்,,,

                             வகைக்கொன்றாய் குடித்தாலும்
                             வழியற்றுத் திரிந்த நாளில் அதுதான்
                             வாழவழிகாட்டும் குலதெய்வம்போல...

                             000000
                               0000

                              ஆயிரம் பேச்சுக்களிடையே
                              போஸ்டல் ஆர்டருக்குக் கிடைக்கும்
                              காசில் போஸ்டர் ஆர்டர் போக
                              மிச்சமுள்ளதைக் கொடுத்து மிச்சம்
                              கொடுக்கவேண்டியதைக் கடனாக
                              அறிவித்துக் குடித்த தேநீர்
                              வாழச் சொன்னதும் பசுமரத்தாணியாய்...

                             00000
                               000

                               தேநீர் ஒவ்வொரு கோப்பையும்
                               ஒவ்வொரு வேலையைச் செய்யும்...

                                தண்டமாய் சுத்துறே உருப்படப்போறதில்லை
                                என்று வசவு வாங்கி சாப்பிடாமல் கோபித்திருக்கும்
                                பல பேருக்கு அதுதான் பலவேளைகளில் பசியடக்கும்
                                மந்திர நீர்...

                                வங்கி வாசலில் மேஸ்திரிக்காய் காத்திருக்கும்
                                பெண் சித்தாள்களின் வேலையற்ற நாள்களில்
                                சுருக்குப்பையில் உயிர்ப்பிக்கும் நாலணாக்கள்
                                அன்றைய கூலியாய் அவதாரமெடுத்து  தணிக்கும்,,,

                                 அது என்னமோ டிபன் சாப்பிட்டவுடன்
                                 டீ குடிச்சாதான் நிம்மதியென்று
                                 குடித்து வைக்கும் கண்ணாடிக் குவளையில்
                                 பாதிக்குமேலிருக்கும் தேநீர் பலரையும்
                                 பரிதவிக்க வைக்கும் காட்சியுமுண்டு
                                 கடைத்தெரு டீக்கடைகளில்,,,

                                 சிமெண்ட் கலவையிலும்
                                 செங்கல் சுமப்பிலும்
                                 வேர்வை வழிய வழிய
                                 எப்ப டீயும் பலகாரமும் வரும்
                                 என்று காத்திருந்து வரும் தேநீர்
                                 தேவாமிர்தமாய் சாகா வரம்தரும்
                                 இரவு உலைகொதித்து வயிறடங்கும்வரை...

                                 அசிங்கப்படுகையில்
                                 அவமானப்படுகையில்
                                 ஏக்கமுறுகையில்
                                 தோற்றுப்போய் தவிக்கையில்
                                 எமனுக்கு யாரையேனும்
                                 சொந்தத்தைத் துர்க்கிக்கொடுக்கையில்
                                 உயிருக்குப் போராடும் உறவுக்காகக்
                                 காத்திருக்கும் மருத்துவமனை மரத்தடிகளில்
                                 சாலையில் சிதைந்து போஸ்ட்மார்ட்டத்திற்காக
                                 காத்திருக்கும் கொடுமைகளில்
                                 தேநீர்தான் எல்லாவற்றையும் ஏற்று
                                  எல்லாவற்றையும் ஆறுதல்படுத்தும்
                                 அமைதிப்படுத்தும் தான் கரைந்துபோய்....

                                  0000
                                    00

                                   ஐந்து


                                   சூடும் சுவையுமாய்
                                   கலப்பும் கசப்புமாய்
                                   இருக்கிறது தேநீர் எப்போதும்
                                   வாழ்க்கையும                                                                                               

                                                0000
                                                                                  000

                                     ஆறு

                                    அப்பாவுக்கு கேட்காமலேயே
                                    தேநீர் கிடைக்கும்...
                                    அம்மாவுக்கு நினைத்தபோதெல்லாம்
                                    பாலில்லாத தேநீர்...
                                   அக்காவுக்கு ஒதுங்கிய நாளில்
                                    பால் டீ
                                    கொல்லையில் பாட்டிக்கு
                                    டிகாசன் டீ
                                    அவரவர்க்கு விருப்பப்படி
                                    டீ கிடைக்கும்
                                    எப்போதும் கிடைப்பதில்லை
                                    தேநீர் வேலைதேடுபவனுக்கு
                                    தேநீரின் சூடு தவிர,,,

                                     00000
                                       000
                                 
                                     ஏழு

                                   அப்போது
                                   ஒரே தேநீர்
                                    ஒரே வாழ்க்கை

                                    இப்போது
                                    இஞ்சி டீ
                                    ஏலக்காய் டீ
                                    லெமன் டீ
                                    பிளாக் டீ
                                    மூலிகை டீ
                                    பூஸ்ட் டீ
                                     மசால் டீ

                                    வகைவகையா தேநீர்
                                    வகைவகையா வாழ்க்கை

               

               


                                 தேநீர்க்கவிதைகள் தொடரும்,,,,
                                 
                        

Wednesday, January 18, 2012

இருவர்




                                அம்புலிமாமா, முத்து காமிக்ஸ், எனத் தொடங்கிய எழுத்துலகில் தஞ்சை ப்ரகாஷின் தரிசனம் கிடைத்தபின் நவீன இலக்கியப்பக்கம் - தரமான இலக்கியப் பக்கம் - உண்மையான இலக்கியப் பக்கம் என்னுடைய பயணம் திசைமாறியது. அப்போது அவர் வாசிக்கச் சொன்ன பட்டியல் மிக நீண்டது. இருப்பினும் நானும் நண்பன் மதுமிதாவும் தேடித்தேடி வாசித்தோம். மணிக்கணக்கில் பேசி களிப்புற்றும் அவை தீராத பக்கங்கள்..

                                 இன்றைக்கு ஓரளவு எனக்கிருக்கும் அடையாளத்திற்கு நான் வாசித்த முன்னவர்கள்தான் முழுமுதல் காரணம்.


                                அவர்களுள் இருப்பவர்கள்தான்

                                   மதிப்புமிகு கல்யாண்ஜி என்றழைக்கப்படும் வண்ணதாசனும்..
                                  மதிப்புமிகு வண்ண நிலவனும்..

                               இருவருக்கும் விருது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ் படைப்புலகம் பெருமைகொள்ளத்தக்க நிகழ்வு மட்டுமல்ல. படைப்புலகம் விமோசனம் பெற்றதுபோலவும் எனவும் சொல்லலாம்.

                                 இன்றைக்கும் அவர்களின் எழுத்து மனக்கண்ணில் சுடராய் எரிந்துகொண்டிருக்கிறது..

                                 கல்யாண்ஜியின் கவிதைகளையும்... வண்ணதாசனின் சிறுகதைகளையும் மனசு புதையல்போல சேமித்து வைத்திருக்கிறது..

                                 கடல்புரத்தில் தொடங்கி...ரெயினிஸ் ஐயர் தெருவில் வளர்ந்து போய்க்கொண்டிருந்த வண்ணநிலவன் இன்றைக்கும் ஒரு பிரமிப்பின் பிரமிப்புதான் எனக்கு.

                                   அவர்களுக்கான விருது தாமதமாக வழங்கப்பட்டிருந்தாலும்.. இப்போதாவது தரமறிந்த பான்மைக்குப் பாராட்டுக்கள்.

                                    எப்போதும் இந்த படைப்பாளிகள் விருதுகளைத் துரத்தியதில்லை.  படைப்புக்களில் ஒருபோதும் துர்ர்ந்துபோவதுமில்லை...

                                    இவர்களுக்காக இந்தத் தனிப்பதிவு..

                                    ஓரளவுக்கு நான் எழுதியிருக்கிற எனது படைப்புக்களை இவர்களுக்கு சமர்ப்பித்து தலை வணங்குகிறேன்...

                                      வண்ணதாசன்

                                      வண்ணநிலவன்


                                      தமிழ்ப் படைப்புலகின் வண்ணப்பக்கங்கள். வசீகரப் பக்கங்கள். வளமான பக்கங்கள். மதிப்புறு பக்கங்கள். மாண்புறு பக்கங்கள்.

                                      வாசியுங்கள் அவசியம் இவர்களை.



                                  0000000000000000000


                                  ஆளுமை என்பது
                                  ஆள்வது அல்ல
                                  ஆளப்படுவது...

                                   கடல் ஒருபோதும்
                                   தன்னைக் கடலென்று
                                  அறிவித்தது இல்லை..

                                   வான் ஒருபோதும்
                                  தன்னை வானென்று
                                   அறிவித்தது இல்லை...

                                   ஆளுமைகளும்
                                   இப்படித்தான்....

                                   000000


                                   ஒரு சிறுசுள்ளியை
                                   நாம் அலட்சியப்படுத்துகிறோம்
                                   உதறி எறிகிறோம்..
                                   ஒரு பறவைதான்
                                   அதில் ஒரு கூட்டை
                                   வடிவமைக்கிறது...


                                   நாம் உதறுகிறோம்
                                   அவர்கள் கூடமைக்கிறார்கள்...

                                   00000

Tuesday, January 17, 2012

வாசிக்கலாம்...



                      நீதிச்சார அனுபவத் திரட்டு என்று ஒரு புத்தகம். சுவடியில் வாழ்ந்து கொண்டிருந்த இது புத்தக வடிவில் அச்சாகியிருக்கிறது.

                     தமிழகத்தின் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நுர்லகம் மற்றும் ஆய்வு மைய வெளியீடாக வந்துள்ளது. பதிப்பித்த ஆண்டு. 2002.

                        கி.பி.1788 இல் நாகை சத்தியஞானி என்ற புலவரால் செய்யுள் வடிவில் இயற்றப்பட்ட நீதிப்பனுவர் இது. மானிடர் இயல்பு நீதி இயல்பு எனும் இரு பிரிவுகளாகப் பாடப்பட்டுள்ளது.

                       எளிமையான சொற்கள். எளிமையாக செய்தியைச் சொல்லுகிறது. ஒருமுறை படிக்கலாம்.

                      சான்றாக ஒரு பாடல்

                               - உடன்தனில் பிணியணுகா வகைநீக்கி
                                      மந்தமா முண்டுயுமே நீக்கி
                                  படிறுசினந் துயிநீக்கிப் பருதிவரு
                                      முனமைந்து நாழிகையி லெழுந்து
                                  முடிவுநிறை கல்வியருண் நிறையாசான்
                                       தனையணுகி முற்றமுயல் வோர்க்குக்
                                   கடல்போலுங் கல்வி வருங் கருத்தில்லா
                                       தவர்களுநற் கருத்தினரா லாரே...

                     பாடலின் பொருள்

                                     கடல்போலக் கல்வி பெருக ஆசிரியர் தரும் உத்திகளே இப் பாடலின் பொருளாகும்.

                               அவை

                                    1,    நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
                                    2,    பெருந்தீனியை நிறுத்துங்கள்.
                                    3.    பொய் பேசாதீர்கள்.
                                    4.    கோபத்தை ஒழியுங்கள்.
                                    5.   சூரியன் உதிப்பதற்கு 5 நாழிகை முன்பே எழுந்துவிடுங்கள்.
                                    6.   நன்கு கற்ற ஆசிரியரை அணுகிக் கற்றுக் கொள்ளுங்கள்.

                  எவ்வளவு எளிமையான உத்திகள் பாருங்கள்.

                   எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு?   ஆச்சர்யமாக இல்லை?

                    அனுபவிக்கலாம்..   மேல் விளக்கம் புரிதலுக்காக.


                      நல்ல உடல்திறம் இருந்தால்தான் கற்க முடியும்.
                      பொய் கூறும் நெஞ்சத்தில் உண்மைக்கல்வி ஏறாது. ஏறினாலும்
                      அதனால் பயன் இல்லை.
                      வயிறு நிறையத் தீனி தின்பவன் மந்தமாவான். சிந்தை மந்தமானால்
                      கல்வி ஏறாது.


                        படிறு - பொய்... நாழிகை 24 நிமிட நேரம்.
                     
                        இன்னொரு வாசிப்பில் சந்திக்கலாம்.
                     
            

Monday, January 16, 2012

ரௌத்தரம் பழகு...

               
                      மணி பன்னிரண்டைக் கடந்திருந்த இரவில் அந்தத் தெருவில் கிட்டத்தட்ட  எல்லா வீடுகளும் நல்ல உறக்கத்திலிருந்தன. ஒருசில வீடுகளில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. இரவு பணியை முடித்துவிட்டு வருபவர்கள் சாப்பிடும் சாப்பாட்டு வேளையது. பேச்சும் சாப்பாடுமாக சப்தம் தெருவில் மிதந்து கிடந்தது. இது எதுவும் இல்லாமல் தேவகியின் வீட்டில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. சன்னல்கள் அடைக்கப்பட்டிருந்தன. வாசல்கதவும் அடைக்கப்பட்டிருந்தது. அவளும் அவளின் 7 வயது பிள்ளையும் விழித்துக்கிடந்தார்கள்.

                              அப்பா எப்போ வருவாங்கம்மா?
                              வருவாங்க.. ஒற்றைச் சொல்லில் பதில் சொன்னாள்.
                              ஏம்மா தினமும் இப்படி வர்றாங்க..
                              உங்கப்பா கிட்டயே கேளு..
                              என் பிரெண்ட்ஸ் எல்லாரும் என்னை விளையாட்டுக்கு சேத்துக்க மாட்டேங்குறாங்கம்மா..போடா உங்கப்பா ரவுடி..பொறுக்கி..குடிக்கிறாரு உன்னோட சேரக்கூடாதுன்னு.. விரட்டியடிக்கிறாங்கம்மா..
                                ஆமாம் அப்படித்தான் செய்வாங்க..
                               ஏம்மா?
                                ஆமா உங்கப்பாதான் வெட்டிச் சண்டைக்குப் போறாரே...
                                அப்பாகிட்ட நீ சண்டை போடும்மா,,
                               உங்கப்பா பொறுக்கி கேக்கமாட்டான்...
                               நான் கேக்கறம்மா..
                               நல்லா கேளு...

                              அவன் சிறிய பிள்ளை அவன் மனதைக் கொட்டிவிட்டான். பெற்றவள் அதற்குப் பதில் சொல்ல இருக்கிறாள். தேவகி யாரிடம் கொட்டமுடியும். ராமலிங்கம் திருந்துவதாக இல்லை.
                             தெருவிலுள்ள எல்லா வீடுகளிலும் கடன் வாங்கியாயிற்று. நாடார் வெளிப்படையாகத் திட்டுகிறான். பழைய பாக்கிய கொடுத்துட்டு சாமான் வாங்குன்னு.. பால்காரன் ஒருமாதிரியா சிரிச்சுட்டு பால் கொடுததிட்டுப்போறர்ன்.. வீட்டுக்காரம்மா தெளிவாக சொல்லிவிட்டாள்..சீக்கிரம் வீட்டைக் காலிப்பண்ணிடுங்க... உன் புருஷன் எல்லாத்தையும் அடிச்சு வம்புக்கிழுக்கற மாதிரி என்கிட்ட செயய முடியாது.. நான் போலிசுக்குப் போயிடுவேன்...எங்க வீட்டுக்குன்னு ஒரு கௌரவம் மானம் இருக்கு.. காசுக்காக பொறுக்கிய குடிவச்சியர்ன்னு போறவங்க வர்றவங்க எல்லாம் கேக்கறாங்க.. நல்ல பொம்பளக்கி ஒரு சூடு ஒரு சொல்...காலி பண்ணிடு...ஒவ்வொருத்தனுக்கும் நாளைக்கி நான் பதில்சொல்ல முடியாது..

                           எல்லா அவமானங்களையும் தினமும் சந்திக்கிறாள். யாரிடமும் சொல்ல முடியவில்லை. அழுதுஅழுது கண்ணீரும் இல்லை கண்களில். வறண்டு விட்டது. வயிறு கேட்கவில்லை. பிள்ளைக்காவது சாப்பிட எதாவது வேணுமே...பார்த்து பார்த்து யாரிடம் கடன்வாங்கவில்லை என்று அலசி கடன் வாங்குகிறாள்..அதற்க ஆயிரம் கெஞ்சுகெஞ்சுகிறாள்.. பிச்சைதான் கேட்கவில்லை..

                            வாசல் கதவு தட்டும் சப்தம் கேட்டது.
                           எழுந்துபோய் திறந்தாள்.
                           ராமலிங்கத்தைத் துர்க்கிக்கொண்டு உள்ளே வந்தார்கள். வெளியே ஆட்டோ ஓடிக்கொண்டிருந்தது.
                           வராதேன்னா கேக்கமாட்டேங்குறான்.. எங்க மானம் போவுது.. நாங்களும் குடிக்கிறோம்.. ஆனா அளவா..எங்ககிட்ட இருக்கற காசுக்கு கௌரவமா குடிக்கிறோம்.. உம்புருஷன் மானம் ரோஷமே கிடையாது.. குடிக்கறதுன்னா எதுவும் செய்வான்போலிருக்கு.. பழகுன தோஷத்துக்குக் கொண்டு வந்திருக்கோம்... சாக்கடையிலே விழுந்து கிடந்தான்.. பாத்துக்க.
                           இன்னும் சொல்ல முடியாத வார்த்தைகளில் திட்டிவிட்டுபோனார்கள்.
                           உடலெங்கும் சாக்கடைத் தண்ணீர்.. நாற்றம் குடலைப் புடுங்கியது. மெல்ல அவன் உடைகளைக் கழற்றினாள். பிள்ளையிடம் கொடுத்தான். அவன் முகம் சுளித்தபடி எடுத்துக்கொண்டுபோய் பாத்ரூமில் போட்டான். சட்டை கழற்றும்போது முனகினான். பையில் கையைவிட்டுப் பார்த்தாள். வெறுமையாக இருந்தது. நாலைந்து பீடிகள்..ஒரு கசங்கிய பத்து ரூபாய்த்தாள்..அப்புறம் சின்ன தீப்பெட்டி...
                           அப்பா...அப்பா.. என்று எழுப்பினான் பிள்ளை.
                           உங்கப்பன் எழுந்திரிக்கமாட்டான். போய் படு..காலையிலே பேசலாம்.
                          காலையிலே பேசுவாராம்மா...
                          மகனின் முகத்தைப் பார்த்தாள்..போய்ப் படுத்து துர்ங்கு..
                          காலையில் எட்டுமணிக்குமேல் ராமலிங்கம் எழுந்தான்.
                           எழுந்து ஒரு பீடியைப் பற்றவைத்துக்கொண்டான். ஏய்  டீ கொடு..
                           பையன் வந்தான்.
                            என்னடா?
                           அப்பா...என்னை யாரும் விளையாட்டுக்கு சேத்துக்க மாட்டேங்குறாங்க..சங்கரு அவன் அப்பாவோட போய் கரும்புக்கட்டு வாங்கிட்டு வராம்பா..அவங்க காசு கொடுத்து வாங்கறானாம்..நீ சண்டை போட்டு காசு கொடுக்கமா வாங்கிட்டு வருவியாம்.. நீ  ரவுடியாம்.. எல்லாரும் பொறுக்கிப்புள்ளன்னு விரட்டறாங்கப்பா...நீ வந்து காசு கொடுத்து கரும்பு வாஙகிட்டு வரலாம்பா..வர்றியா..
                              வரேன்..போலாம்.. தேவகி கொண்டு வந்து டீயைக் கொடுத்தாள்.
                               இதெல்லாம் உன் வேலையாடி? என்றான்.
                              எனக்கு வேறு வேலையில்ல பாரு...உன் யோக்கியதை அப்படி.. வீட்டுக்காரம்மா காலிபண்ணலேன்னா போலிசுக்கு போவேங்கறாங்க..எல்லார்கிட்டயும் கடன் வாங்கியாச்சு....நாளும் கெழமையும்   அசிங்கப்பட்றேன்... உனக்கு குடிச்சா போதும்..நல்ல குடும்பத்துலே பொறந்திட்டோம்னு பொறுமையா இருக்கேன்.. புள்ள வேற இருக்கான். அவனுக்கா எல்லாம் பொறுத்துபோறேன்.. வேற யாரும் உன்கிட்ட குடும்பம் நடத்தமாட்டா...
                                ஏன் நடத்தறே? உங்கப்பன் வீட்டுக்குபோயேண்டி.. யார் குறுக்கே நீட்டி தடுத்தா?
                               எதுக்கு?  எனக்கும்  என் பிள்ளைக்கும்  ஒரு வழிய காட்டு.. இல்லேன்னா இப்படியே இருக்கமாட்டேன்...
                              என்னடி செய்வே?
                              எதுவும் செய்வேன்.
                              என்னடி இன்னிக்கு பேச்சு ஒரு மாதிரியா போவுது..
                              இனிமே பொறுக்கமுடியாதுன்னுதான்..
                              பொறுக்கமுடியாதா,,,என் குணம் தெரியுமில்லே..,
                              என் குணம் உனக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன்.. என்றாள் தேவகி அழுத்தமாக.
                              என்னடி செய்வே? என்றான் மறுபடியும்.
                             எதுக்கும் எல்லை இருக்கு. உன்ன மாத்திக்கணும்.. இப்படியே செஞ்சா..ஒரு பிடிசோறுபோதும் உன் கதைய முடிக்க...சத்தம்போடாம கலந்து வச்சி கதையை முடிச்சிடுவேன்.. நாலு வீட்டுலே பத்து பாத்திரம் தேச்சு நானும் என் பிள்ளையும் நிம்மதியா இருப்போம்.
                                உடம்பு ஒருமுறை ராமலிங்கத்திற்கு துர்க்கிப்போட்டது. அவள் கொடுத்து குடித்த காலி டீ தம்ளரை ஒருமுறை பார்த்துக்கொண்டு..தொண்டையைத் தடவினான் அவசரமாய்..திரும்பி பிள்ளையைப் பார்த்தான் பயமுடன். ...அதே பயத்துடன் தேவகியையும் பார்த்தான்.
                                முகத்தில் சலனமின்றி தெளிவாய் இருந்தாள் தேவகி.
       

Sunday, January 15, 2012

மனமே எல்லை.. (சிறுகதை)




                    இன்றோடு பதினைந்து நாட்களாகிவிட்டன. சங்கரன் தவறாது வருகிறார். நாளை வாருங்கள் என சொல்லி நாட்களை நகர்த்திக்கொண்டு இருக்கிறேன்.

                    பக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது மணிமுத்தாறு. அதனருகில் ஒரு சிவன் ஆலயம். கிட்டத்தட்ட 5000 ஆண்டு பழமையானது. பக்கத்தில் பெரிய குளம். அதில் கம்பளம் விரித்ததுபோல அல்லிகள் மலர்ந்து கிடக்கும் அழகைக் கண்டு ரசித்திருக்கிறோம். இறங்கி அல்லி பறித்தும் வந்திருக்கிறோம். படிக்கட்டுகளில் அல்லிகளை விலக்கி துணி வெளுப்பவர்கள் துணிகள் துவைக்கும் சப்தமும் அதற்கேற்ப அவர்கள் வாயிலிலிருந்து வரும் ஒலியும் கேட்க இனிமையாக இருக்கும். கரைகளில் இரு நடப்பட்ட குச்சிகளில் கட்டப்பட்ட கயிறுகளில் தோய்த்து நீலம் போடப்பட்ட வேட்டிகள் பளீரென்று சூரிய ஒளியில் மின்னியபடி காயும்.

               இப்போது ஒருசிலரின் முயற்சியால் அந்த ஆலயம் புதுப்பிக்கப்படுகிறது. பணியிலிருந்து ஓய்வுபெற்ற சிலர் தங்களது பென்ஷன் தொகையையும் பலரிடம் வசூலித்தும் இத் திருப்பணியை மேற்கொள்கிறார்கள். இதற்கான தொடக்கத்தை முனைப்பாக்கியவர்தான் சங்கரன். என்னிடம் இதுபற்றி பேசி ஏதாவது ஒரு செலவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார். நானும் குறைந்த தொகையாக சொல்லி செய்கிறேன் என்றேன். உடனே அவர்கள் கோயிலுக்கென்று பெரிய மணி நாச்சியார்கோயிலில் ஆர்டர் கொடுத்திருக்கிறோம். நான்குபேர் பங்கில் உன்னுடையது ஒன்று என்றார் சங்கரன். சரியென்றேன்.

                  ஆனால் இயல்பில் சங்கரன் கொஞ்சம் கை சுத்தம் இல்லாதவர். ஓயாமல் பேசுவார். தேவையில்லாத கதைகள் சொல்லுவார். கைசுத்தமும் வாய் சுத்தமும் இல்லாதவர். சிவனின் பெயரைச் சொல்லிக் கேட்பதால் ஒன்றும் சொல்லமுடியவில்லை. நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்கமுடியவில்லை.

                    என் மனைவி சொன்னாள.. இது இறைவன் காரியம் கொடுத்துவிடுங்கள். அவர் தவறு செய்தால் சிவன் பார்த்துக்கொள்வார். என்று அது எனக்கு சரியாகப் பட்டது.

                       சங்கரன் அன்று காலை வந்தார்.  உடன் பணத்தை எடுத்துக் கொடுத்தேன்.
                        அவராகச் சொன்னார்.

                        முருகன்..இதற்கு ரசீது எல்லாம் கிடையாது. கொடுக்க முடியாது. அறநிலையத்துறை ஒத்துக்கொள்ளாது. உண்டியல் வைக்கவும்கூடாது. எனவேதான் நோட்டில் மட்டும் குறித்து வைப்போம். வாங்கிக் கட்டும் மணியிலும் பெயர் இருக்காது.

                         பரவாயில்லை என்றேன். வாங்கிக்கொண்டு போனார். போகும்போது சொன்னார். ஒரு முறை கோயிலுக்கு வா முருகா...

                        அன்று சனிக்கிழமை.

                        சங்கரன் சொன்ன கோயிலுக்குப் போகலாம் என்று முடிவெடுத்துப் போனேன். வீட்டிலிருந்து ஒருகிலோமீட்டர் தொலைவுதான்.

                         கோயிலில் எலக்ட்ரிசியன்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். சங்கரனும் இன்னும் இருவரும் இருந்தார்கள்.  நான் போனேன். வா..வா..முருகா.. நீ வந்தது ரொம்ப மகிழ்ச்சி என்றார். நான் கோயிலைச் சுற்றி வணங்கிவிட்டு உள்ளே உட்கார்ந்தேன். அப்போது ஒரு வயதான பெண் சுமார் 65 வயதிருக்கலாம். முகமெங்கும் வேர்வைத்துளிகள். எண்ணெய் வழியும் முகம். நரையோடிய தலை. மெலிந்த கைகளில் நரம்புகள் புடைத்து கிடந்தன. கையில் ஒரு சிறிய சொம்பு இருந்தது. வந்து சங்கரனிடம்.. ஐயா இந்தாங்க என்று பால்சொம்பை நீட்டினாள்.  சங்கரன் வாங்கிக்கொண்டு சொன்னார்... முருகா இவங்க எதிரில புறம்போக்குல குடிசை போட்டு இங்க 30 வருஷமா இருக்காங்க..ரெண்டு மாடு வச்சி கறந்து பால்வியாபாரம். . நான் இந்த கோயில் வேலை ஆரம்பிச்சதும்.. தினமும் 200 பால் அபிஷேகத்துக்குன்னு கொடுத்துடுவாங்க... என்றார்.

                     அந்தப் பெண்மணி தரையில் என் எதிரே உட்கார்ந்தாள். ஒரு மஞ்சள் பை வைத்திருந்தாள். அதை சங்கரனிடம் நீட்டினாள்.  ஐயா.. இதுல கொஞ்சம் பணம் இருக்கு.. எண்ணிக்கொடுங்க என்றாள். சங்கரன் அதை தரையில் கொட்ட அதில் ஐந்து ரூபாய்கள்..பத்து ரூபாய்கள்..ஐம்பது ரூபாய்கள்.. நுர்று ரூபாய்கள்.. சில்லறை காசுகள்....ஒரு ரூபாய்..இரண்டு ருபாய்..ஐந்து ரூபாய்... என.. சஙகரன் அதை எண்ணியபடியே முருகா..நீயும் எண்ணு என்றார். நானும் எண்ண ஆரம்பித்தேன்..

                    மொத்தம் 5675 ரூபாய் இருந்தது. எண்ணி சஙக்ரன் அவளிடம் கொடுக்கப்போகையில்...அவள் அவர் கையைத் தடுத்து.. ஐயா.. என்னால முடிஞ்சது..கோயிலுக்கு வச்சுக்கங்க என்றாள். என் மனதுக்குள் அதிர்வு வந்தது.
சங்கரன் கேட்டார் இவ்வளவு பணம்... என்று தயங்கினார்..
                   அவள் சொன்னாள்.

                    பால் விக்கற காசுல தினமும் ஐந்து ரூவா எடுத்து வச்சிட்டு வந்தேன். ஒரு அய்யாயிரம் கொடுத்திடலாம்னு நினைச்சேன்.. முடியல்ல. மூவாயிரம் தான் சேந்துச்சி.. போனவாரம் கன்னுக்குட்டி செத்துப்போச்சின்னு நினைச்சேன்.. ஐயா..ஒரு டாக்டர அனுப்பிச்சிங்க..அது பிழைச்சிக்கிடிச்சி.. எல்லாம் அவனோட சொத்துன்னு அந்த கன்னுக்குட்டிய வித்துட்டேன்..ரெண்டாயிரம் கிடச்சிடிச்சி...செத்துபோயிருந்தா நஷ்டம்தானே,,,
பொழச்சது அவன் செயல்தானே..அதானல அந்தக் காசயும் போட்டேன்.. அய்யாயிரம் தாண்டிடிச்சு இப்பத்தான் மனசு நிம்மதியா இருக்கு...  என்றபடி வரேன் ஐயா.. மாட்டுக்கு தீனி வைக்கணும்..

                      எழுந்து  மீண்டும் கருப்பக்கிரகம் பார்த்து கைகளை உயர்த்தி ஒரு கும்பிடு போட்டுவிட்டு வெளியேறிப்போனாள்..

                        நம்பிக்கைத்தான் எதற்கும் அடிப்படை என்பதை அவள் உணர்த்திவிட்டுப்போனாள். மனசுக்குள் அந்த அதிர்வு அதிர்ந்துகொண்டேயிருந்தது. எழுந்து சங்கரனிடம் சொல்லிவிட்டு  மனத்தெளிவோடு சிவனை வணங்கிவிட்டு வெளியே வந்தேன்.

Saturday, January 14, 2012

குறும்(பு) கவிதைகள்....





                            நீயும் அழகு
                            நானும் அழகு...

                            நீ மலர்ந்த பூ
                            நான் வளர்ந்த பூ.....

                            நீயும் நானும்
                            மதிப்பிற்குரியவர்கள்
                            மிதிப்பிற்குரியவர்களல்ல...
.
                            அஞ்சாதே

                            நீயும் மேன்மை
                            நானும் மேன்மை....

             

                                               அணு உடைந்தாலும்
                                               ஆனந்தமில்லை...

                                               அணை உடைத்தாலும்
                                               ஆனந்தமில்லை...

                                               அன்பு உடைந்தால்தான்
                                               ஆனந்தம்
                                               பேரானந்தம்...

         

                                           யாருடைய
                                           வினை?

                                           யாருடைய
                                           குற்றம்?

                                           யாருடைய
                                           சாபம்?

                                           பாதை சரியானால்
                                           பயணம் சரியாகும்.....



                                           தலை வணங்கி
                                           தமிழை நேசி...
  
                                           தன்மானம்
                                           காத்து நில்....        

                                           ஆனந்த வாழ்க்கை
                                           அன்பின் வரம்...


இன்னொன்று...

                                             ஐயோ....

                                             எல்லாரும் வந்து
                                             நம்பள
                                             பார்க்கிறாங்கடா.....

                                             பொங்கல் வாழ்த்துக்கள்
                                              போய் கரும்பு தின்னுங்க....
                                             


                                                                       


                                               
                            

Friday, January 13, 2012

தமிழின்பம்...



                         தமிழின் இலக்கியங்களில பல கனிச்சுவைகள நிறைந்து கிடக்கின்றன. இவற்றின் ஈடற்ற சுவைக்குக் காரணம். சொல்வளம்.
ஒரு மொழியின் நிலைபேற்றிற்கும் இறவாத் தன்மைக்கும் அழியாப்
புகழிற்கும் அம்மொழியின் நிரம்பிய சொல்வளமே காரணம். எனவே அவற்றின்
சொல்வளச் சுவையை பருகிமகிழலாம்.

                         சில சொற்களை அடையாளப்படுத்தலாம். இவற்றை நீங்கள் படித்து சுவைக்கலாம். மறந்தும்போகலாம். ஆனாலும் இதன் சுவை என்றைக்காவது நினைக்கும்போது சுவைக்கும். தமிழ்ச்சுவை என்றைக்கும் சுவைக்கும்.

                     இவற்றில் பல வகைகள் உண்டு. அவற்றில் அன்றைக்குப் புழங்கிய சில சொற்களுக்கான பொருள்களை மட்டும் முதல் வகையாக சுவைக்கலாம்.

                           ஏரின் வாழ்நர்=உழவர் (ஏரைத் தொழிலாகக் கொண்டு
                                                                                        பிழைப்பவர்)

                           கவைமுட்கருவி=அங்குசம்
                                                                 ( கவை போன்று வளைந்தும்
                                                                    நுனியில் முள்ளை உடையதும்
                                                                    ஆன கருவி)

                            வெண்கல் = உப்பு

                            அவிழ்பதம்= சோறு

                             கழிகலமகளிர்=விதவை (அணிகலன்களை நீக்கிய
                                                                                                               மகளிர்)

                             அறுகாற்பறவை/=வண்டு (ஆறு கால்களையுடையது)

                             
                              நேர்வாய்க்கட்டளை= சன்னல்

                               உரிமை மைந்தர் = கணவர்

                               மனை முதலோள்= மனைவி (வீட்டிற்கு முதல்வள்)

                               குளிர்= நண்டு

                               அணங்கு=பேய் (பெண் என்பது இன்றைய பொருள்)                                                                                                 

                               சுவையும் வகையும் தொடரும்.
                           
                           
                         
                             

Thursday, January 12, 2012


\ஒரு கனவு கொல்கிறது
ஒரு கனவு காயப்படுத்துகிறது
ஒரு கனவு ஆனந்தப்படுத்துகிறது
ஒரு கனவு நம்பிக்கையூட்டுகிறது
ஒரு கனவு எதிர்பார்க்க வைக்கிறது
ஒரு கனவு திறக்கிறது
ஒரு கனவு மூடிவைக்கிறது
ஒரு கனவு நிராசையாகிறது
ஒரு கனவு பேராசையாகிறது
ஒரு கனவு அலைக்கழிக்கிறது
ஒரு கனவு நிம்மதியாக்குகிறது
ஒரு கனவு கனவாகவே இருக்கிறது
ஒரு கனவு பயமூட்டுகிறது
ஒரு கனவு பதட்டப்படவைக்கிறது
ஒரு கனவு தைரியப்படுத்துகிறது
ஒரு கனவு குழந்தையைப்போல
ஒரு கனவு அப்பாவைப்போல
ஒரு கனவு அம்மாவைப்போல
ஒரு கனவு அக்காவைப்போல
ஒரு கனவு நட்பைப்போல
ஒரு கனவு காதலைப்போல
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு
கனவு ஒவ்வொருவிதமாய்
ஒரே மனதுதான் ஒரே மனதுதான்
ஒரே கனவுதான் என்று உணர்த்தினாலும்
ஒரு கனவுதான் உறுதிசெய்யவேண்டும்...\\

Wednesday, January 11, 2012

முயல்குட்டி கவிதைகள்....



                           பூமியின்மேல் விழுந்த

                          சூரிய சூட்டைத் தணிக்கிறது
                          ஒரு குழந்தையின் நிழல்....

                          00000

                          வளையல் அணியும்  சிறுமி
                          வளைகிறதா
                          வளைக்கப்படுகிறதா?

                           0000

                           ஒரு குழந்தையை
                           மொழிபெயர்த்தேன்
                            வாழாத  வாழ்க்கை
                           கிடைத்தது...

                           ஒரு கடலை
                           மொழிபெயர்த்தேன்
                           ஆழத்தின் அறிவு
                            கிடைத்தது...

                            ஆகாயத்தை
                             மொழிபெயர்த்தேன்
                            மௌனத்தின் வரம்
                            கிடைத்தது...

                             பூமியை
                             மொழிபெயர்த்தேன்.
                             அழியாத நம்பிக்கை
                             கிடைத்தது...

                             ஒரு மனிதனை
                             மொழிபெயர்த்தேன்
                              என்னைத் தேடும்
                              தகவல் கிடைத்தது...

                              00000





                             
                           
                         

                                                

Tuesday, January 10, 2012

பயணம்


                     
                         அண்ணாமலை அரசரின் கருணைத் திறத்தால் ஒவ்வொரு ஊருக்கும் சென்று அஞ்சல் வழியில் வகுப்புகள் எடுக்கும் வாய்ப்பில் அந்தந்த ஊரிலுள்ள சிறுசிறு கோயில்களைத் தரிசிப்பது கரும்புத் தின்ன கூலிபோல கிடைத்த வாய்ப்பாகும்.

                          இம்முறை தேனீ செல்லும் வாய்ப்பில் சனிக்கிழமை மாலையில் தேனியிலிருந்து அரைமணிநேரப் பேருந்து பயணத்தில் (அல்லது ஆட்டோ எனில் 100 ரூபாய்) குச்சனுர்ர் எனும் இடத்தில் ஒரு சனீஸ்வரர் கோயில் உள்ளது. இது மிகவும் பிரசித்தமான கோயிலாகும். தானே  சுயம்புவாய் தோன்றிய கோயில் என்று அர்ச்சனை செய்யும் வயதான அர்ச்சகர் அதன் வரலாற்றைக் குறிப்பிட்டு சொன்னார். கிட்டத்தட்ட 10000 ஆண்டுகள் பழமையானது என்றும் சுவடிச் சான்று மூலம் 17 ஆம் நுர்ற்றாண்டைச் சேர்ந்தது என்றும் சொல்கிறார். பல முக்கிய அரசியல் தலைவர்கள் நாட்டின் தலைவர்கள் இக்கோயிலுக்கு வந்துசென்ற நிகழ்வையும் சொன்னார்.

                      பொதுவாக சனிஸ்வரர் கோயிலுக்கு செல்பவர்கள் அர்ச்சனை செய்ததும் எதனையும் எடுத்துச் செல்லக்கூடாது என்பார்கள். ஆனால் இக் கோயிலில் எல்லாவற்றையும் எடுத்துச் செல்லலாம் எந்தக் கெடுதலும் இல்லை என்றும் சொன்னார். இக்கோயிலுக்கு இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் என பிற மதத்தவர்களும் வந்து வணங்கிச்செல்வதும் சிறப்பானது. இஸ்லாமியர்கள் இந்த சனீஸ்வரனை அப்துல்காதர் என்று பெயரிட்டு அழைப்பதாகவும் சொன்னார்.

                      கோயிலில் அர்ச்சனை தட்டோடு பொறி, உப்பு, மண் உருவிலான காகம், கருப்புத்துணி, அப்புறம் வழக்கமான தேங்காய் பூ பழம் போன்றவை.  பொறியைப் பிரித்து மனக்குறையை நீக்கு என்று அதற்குரிய இடத்தில் கொட்டச் சொல்கிறார்கள். உப்பு பரிகாரத் தீர்வாக அதற்குரிய தொட்டியில் கொட்டச் சொல்கிறார்கள். காக்காய் உருவத்தை தலையை ஒன்பது முறை சுற்றி காக்கைபோல குடும்பம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றும் வாக்கில் நல்ல சொல் வரவேண்டும் என்றும் வேண்டி காக்கா மண்டபத்தில் அதனைப் போட்டுவிடவேண்டும்  அதன் பின்னர் அர்ச்சனை நடக்கிறது.

                கோயிலுக்குப் பக்கத்திலேயே அழகான வாய்க்கால் ஓடுகிறது குளித்துவிட்டு வழிபடவும் அல்லது கை. கால்களைச் சுத்தம் செய்துகொண்டு வழிபடவும் என.

               சிறிய கோயில் என்றாலும் சிறப்பாக இருக்கிறது.மும்மூர்த்திகள் வழிபட்ட தலம் என்றும் குறிப்பு உள்ளது.  இக்கோயில் பற்றி கோயிலில் இருந்த குறைவான நேரத்தில் சேகரித்த செய்திகள் இன்னும் சேகரித்துக்கொண்டிருக்கிறேன்

                         ஒருமுறை போய்வரலாம்.

                          திருச்சி திண்டுக்கல் தேனி என்று பேருந்து பயணம் மேற்கொள்ளலாம்.

                         தேனியில் மேலும் பார்க்கவேண்டிய இடங்கள்.

                        1, தேனியிலிருந்து குமுளி வழியாக 61 கி.மீட்டரில் தேக்கடி.

                        2, தேனியிலிருந்து 30 கி.மீட்டர் தொலைவில் குச்சனுர்ர் சனீஸ்வரர்
                             கோயில். -  அருகிலேயே  உள்ள  குருகோயில்.

                        3. தேனியிலிருந்து 25 கி.மீட்டரில் சின்னமனுர்ர்  என்ற இடத்தில்
                            இறங்கி அங்கிருந்து 5 கி.மீட்டர் சென்று தெற்கு காளஉறஸ்தி
                            எனப்படும் (சின்ன திருப்பதி) தலத்தையும் சிறப்பாக வழிபடலாம்.

                        4. குச்சனுர்ர் அருகில் சிவகாமியம்மன் கோயில் உள்ளது.

                        5. தேனியிலிருந்து  30 கி.மீட்டர் தொலைவில் வீரபாண்டி எனும்
                             இடத்தில் ஆற்றின் கரையில் கௌமாரியம்மன் கோயில்
                             அமைந்துள்ளது.

                           தேனியிலிருந்து இரு வழிகள் வழியாக குச்சனுர்ர் செல்லலாம். ஒன்று சின்னமனுர்ர் சென்று அங்கிருந்து ஆட்டோவில் செல்லாம். இன்னொன்று தேனியிலிருந்து நேரடியாக குச்சனுர்ர் கோயில் அருகில் இறங்கிக்கொள்ளலாம். பேருந்து வசதி உள்ளது. குமுளி. கம்பம் வழியாக செல்லும் பேருந்துகளில் பயணிக்கலாம்.

                           இரண்டாவது பயணம்

                           தேனீ . கோயம்புத்துர்ர் சென்று அங்கிருந்து சேலம் வழியாக சின்ன சேலம் வந்து தலைவாசல் எனும் ஊரில் இறங்கி கூகையூர் எனும் ஊருக்கும் செல்லும் வழியில் பல கிராமங்கள் உள்ளன. இவற்றில் அருகருகே சில கிலோமீட்டர் தொலைவுகளில் பஞ்சபூதத் தலங்கள் உள்ளன. இவையும் குறிப்பாக வழிபாடு செய்யவேண்டிய வரலாற்றுத்தலங்கள். இவை ஒவ்வொன்றையும் பற்றி தனித்தனியாக எழுதுகிறேன். 



                         கடந்த சில தினங்களாக
                         இடுகையில் ஏற்பட்ட
                         பல்வேறு தொழில்நுட்பச்
                         சிக்கல்கள் காரணமாகப்
                         பலருக்கும் ஏற்பட்ட
                         இன்னல்களுக்குப் பொறுப்பேற்று
                         மன்னிக்க வேண்டுகிறேன்...


                          எனக்காக இடுகையைச சரியான
                          மொழியில் மீண்டும் பதிவிட்டுக் காட்டிய
                          கீதா அவர்களுக்கு
                           நான் என்றென்றும் நன்றி கடப்பாடுடையேன்..
                           மிகுந்த நன்றிகள் கீதா...


                          

Monday, January 9, 2012


நிறைய அதிர்ச்சிகள்
கிடைக்கின்றன...
சாதிசந்தையில் ஒரு கவிஞன்
தன் கவிதைகளை எதையெடுத்தாலும்
என்று கூவி விற்கிறான்...
இலக்கியக்கூட்டங்களில் சாதிய நரிகளின்
ஊளைகள் காற்றைக் கிழிக்கின்றன...
விளைமாதர்களைவிடக் கேவலமாய்
சாதியைப் புணர்கிறார்கள்...
எல்லாப் போராட்டங்களிலும்
வென்றெடுப்போம் என்கிறார்கள்
பன்றிகளின் தொங்கும் வயிறுகளைப்போல
வயிற்றை நிரப்பியபடி கூடுவோமென்று
புணர்ச்சிக்களையும் நாய்களைப்போல
எச்சில்வழியும் நாக்குகளைப் புரட்டியபடி...